search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ginger soup"

    காலையில் காபி, டீக்கு பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறைவதை காணலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுக்கு - ஒரு டேபிள்ஸ்பூன்
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பரங்கிக்காய் - சிறிய துண்டு
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுக்கு, மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய், சுக்கு, மிளகு போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

    தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

    தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை செய்து சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இதை சூப்பாகவும் பருகலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம்பருப்பு - கால் கப்
    பூண்டு - 5 பல்
    மிளகு - 2 டீஸ்பூன்
    இஞ்சி - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    சீரகம் - 1 ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    கடுகு - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    நல்லெண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    துவரம் பருப்பை வேக வைத்து தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பூண்டு, இஞ்சி, மிளகு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.

    பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகை போட்டு வதக்க வேண்டும்.

    அதனுடன் பருப்பு வேக வைத்த தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.

    மசாலா தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இஞ்சி ரசம் ரெடி.

    இந்த ரசத்தை குடிக்கவும் செய்யலாம். சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×