search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free marriage"

    • சிவகங்கை மாவட்டத்தில் 13 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் பெரியகருப்பன் நடத்தி வைத்தார்.
    • மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

    சிவகங்கை

    இந்து சமய அறநிலை யத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மன் கோவிலில், 13 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

    ரூ.4.97 லட்சம் மதிப்பீட்டில் 13 ஜோடிகளுக்கு திரு மாங்கல்யம், மணமகள் மற்றும் மணமகன் ஆகியவர்களுக்கான ஆடைகள், மணமக்களுக்கு மாலை, புஷ்பம், பாத்தி ரங்கள், பித்தளை குத்து விளக்கு, பாய், தலையணை, கேஸ் அடுப்பு உள்ளிட்ட சீர்வரிசைகள் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் கோவில் உபயதாரர்களின் பங்களிப்புடன் வழங்கப்படது.

    இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர்கள் செல்வ ராஜ் (சிவகங்கை), ஞான சேகரன் (ராமநாதபுரம்) வில்வமூர்த்தி (மடப்புரம்), திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சோ.சண்முகவடிவேல், கோவில் அறங்காவலர்கள் லெட்சுமணன், சபா அருணா சலம், சம்பத், ராஜா சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கோவில்களில் இன்று 217 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
    • டவுன் தொண்டர் நயினார் கோவிலில் 2 ஜோடி களுக்கும், ஏர்வாடியில் உள்ள திருவாழுதீஸ்வரர் கோவிலில் 2 ஜோடிகளுக்கும் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    நெல்லை:

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கோவில்களில் இன்று 217 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.

    நெல்லையப்பர் கோவில்

    நெல்லை டவுன் நெல்லை யப்பர் -ஸ்ரீகாந்திமதி அம்மன் கோவிலில் ஆறுமுக நயினார் சன்னதியில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது .

    இதில் பாளையங் கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் அப்துல்வகாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருமணத்தை திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து நடத்தி வைத்தார். பின்னர் ஜோடிகளுக்கு சீர்்வரிசை பொருட்களையும் வழங்கி வாழ்த்தினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷிணி, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தி.மு.க. பகுதி செயலாளர் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல டவுன் தொண்டர் நயினார் கோவிலில் 2 ஜோடி களுக்கும், ஏர்வாடியில் உள்ள திருவாழுதீஸ்வரர் கோவிலில் 2 ஜோடிகளுக்கும் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில், 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    தஞ்சாவூர்:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த 126 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. தஞ்சை திலகர் திடலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கும் இந்த திருமண விழாவுக்கு துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர். வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

    எம்.பி.க்கள் பரசுராமன், பாரதிமோகன், சந்திரகாசு, எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராஜன், ராமஜெயலிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இந்த திருமண விழாவில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைப்பு செயலாளர் நத்தம் விசுவநாதன், அமைப்பு செயலாளரும், அமைச்சருமான தங்கமணி, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் ஆர்.காமராஜ், துரைக்கண்ணு, அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு 126 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.

    விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பிரிவு நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். திருமண விழா முடிந்தவுடன் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

    இந்த திருமண விழாவுக்காக தஞ்சை திலகர் திடலில் ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மணமக்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அமர்ந்து திருமண விழாவை கண்டு களிக்கும் வகையில் நாற்காலிகள் போடப்பட உள்ளன.

    திருமணத்தையொட்டி மணமக்களுக்கு பட்டு வேட்டி, சட்டை, பட்டுச்சேலை போன்றவை வழங்கப்பட்டுள்ளன. அரை பவுன் தாலியும் வழங்கப்பட உள்ளது. மேலும் சீர்வரிசையாக 2 குத்துவிளக்குகள், மண் விளக்கு, சொம்பு, பூஜை கூடை, குக்கர், தோசைக்கல், கரண்டி, அன்னக்கை, கரண்டி, டம்ளர், ஜக்கு, முறுக்கு அச்சு, சல்லடை, சாப்பாடு தட்டு, பூ வாளி, குடம், தாம்பாலம், இட்லி பானை, அரிவாள்மனை, தேங்காய் திருவி, பூரி கட்டை, கட்டில், மெத்தை, பீரோ, மின்விசிறி உள்ளிட்ட 72 வகையான பொருட்கள் மணமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
    திருப்பதியில் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 10 ஆயிரம் ஜோடிகள் இலவச திருமணம் திட்டத்தின் மூலம் திருமணம் செய்துள்ளனர். #Tirupati
    திருமலை:

    திருப்பதியில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

    திருப்பதியில் பாபவி நாசம் செல்லும் வழியில் உள்ள கல்யாண மண்டபத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இலவசமாக திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது.

    அன்று முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 10 ஆயிரம் ஜோடிகள் இந்த திட்டத்தின் மூலம் திருமணம் செய்துள்ளனர்.

    திருப்பதியில் திருமணம் செய்ய விரும்புபவர்கள் தேவஸ்தான இணைய தளத்திற்கு சென்று கல்யாணத் திட்டம் பகுதியில் மணமகன் மற்றும் மணமகளின் பெயர், வயது, மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை எண், திருமண நாள், நேரம் உள்ளிட்டவற்றை அளித்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    அவ்வாறு பதிவு செய்து கொள்பவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். மணமக்கள் அந்த ஒப்புகைச் சீட்டுடன் திருப்பதிக்கு வந்து முகூர்த்த நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கல்யாண மண்டபத்தில் அதை அளிக்க வேண்டும்.

    ஊழியர்கள் அதை சரிபார்த்த பின் மேள வாத்தியம், புரோகிதத்திற்கு ரூ.50 கட்டணம் செலுத்தினால் மணமக்களுக்கு இலவச அறை, மஞ்சள், குங்குமம், கங்கணம், அட்சதை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் வழங்கும். மற்றபடி திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் மணமக்கள் கொண்டுவர வேண்டும்.

    திருமணம் முடிந்த பின் ரூ.25-க்கு 12 லட்டு, மணமக்கள், அவர்களின் தாய், தந்தை என 6 பேருக்கு விரைவு தரிசனத்தை தேவஸ்தானம் இலவசமாக வழங்குகிறது. இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த திருமண திட்டத்தில் அனுமதி வழங்கப்படும். காதல் திருமணம், 2-ம் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அனுமதி கிடையாது.

    திருமணம் செய்து கொள்பவர்கள் இலவசமாக தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பையும் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பதியில் உள்ள எஸ்.எம்.சி-233-ல் இந்து திருமண பதிவு அலுவலகத்தில் மணமக்கள் தங்கள் பிறப்பு சான்றிதழுடன், திருமணம் செய்து கொண்ட சான்றிதழ், பத்திரிகை, புகைப்படம், மண்டபத்தின் ரசீது, 3 சாட்சியாளர்களின் கையொப்பம் உள்ளிட்டவற்றை அளித்து திருமணத்தைப் பதிவு கொள்ளலாம். #Tirupati #TirupatiTemple
    ×