search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச திருமணம்"

    • முக்கிய நிகழ்வான இலவச திருமணம் மற்றும் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
    • மணமக்களின் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு குடும்பம், குடும்பமாக சிவராத்திரிஸ்வரர் சாமியை தரிசனம் செய்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சின்கூடு அருகே உள்ள கபிலாநதி கரையில் அமைந்துள்ளது ஸ்ரீசுத்தூர் மடம் ஆதி ஜெகத்குரு சிவராத்திரிஸ்வரர் கோவில். ஒவ்வொரு ஆண்டும் இக்கோவில் திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒரு வார காலம் நடைபெறும். குறிப்பாக விழாவின் முக்கிய நிகழ்வான இலவச திருமணம் மற்றும் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நடப்பாண்டு கோவிலில் திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான இலவச திருமணம் மற்றும் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.

    இலவச திருமண நிகழ்ச்சி ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. மணமக்களுக்கு மாங்கல்யம் வழங்கி நடத்தி வைத்தார். இந்த நிகழ்வில் சேலை உள்ளிட்ட பொருட்கள் மணமகள்களுக்கு வழங்கப்பட்டது. மணமகனுக்கு வேட்டி, சட்டை வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி பகுதிகளை சேர்ந்த 24 மணமக்கள் கலந்து கொண்டது குறுப்பிடத்தக்கதாகும். இத்திருமணத்தில் 118 ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஒரே அரங்கில் நடைபெற்றது.

    இந்த திருமண நிகழ்வில் மணமக்களின் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு குடும்பம், குடும்பமாக சிவராத்திரிஸ்வரர் சாமியை தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீசுத்தூர் மடம் ஏழை மக்களுக்கு இலவச திருமணம் செய்து வைத்ததன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை கொடுத்துள்ளது. இந்த திருமணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். 

    • மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
    • இலவச திருமணத்தை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடத்தி வைத்தார்.

    வெள்ளகோவில்:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் இன்று காலை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில் வளாகத்தில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார்.

    பின்னர் மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமாங்கல்யம், பீரோ, கட்டில், மணமக்கள் ஆடை, மெத்தை, தலையணை, மிக்சி ஆகிய சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மணமக்களின் உறவினர்களுக்கு விருந்து வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன், துணைச்செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர் செந்தில்குமார், செயல் அலுவலர்கள் ராமநாதன், திலகவதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில், மேட்டுப்பாளையம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன் தலைமையில் முருகன் என்பவருக்கும், வினிதா என்பவருக்கும் இலவச திருமணம் நடைபெற்றது.
    • மணமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான திருமாங்கல்யம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கோவில் சார்பாக வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மணமக்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலில் நேற்று தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில், குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவில் நிதி மூலம் நாங்குநேரி வட்டம் கீழ அரியகுளத்தை சேர்ந்த மணமகன் முருகன் என்பவருக்கும், ஆழ்வார்திருநகரி பத்தவாசலை சேர்ந்த மணமகள் வினிதா என்பவருக்கும் இலவச திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான திருமாங்கல்யம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கோவில் சார்பாக வழங்கப்பட்டது.

    • இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர் இ.பெரியசாமி.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் கோவிலில் இன்று இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-

    தமிழக முதல்-அமை ச்சரின் உத்தரவின்படி பொருளா தாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மக்களின் ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.50,000 மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வரு கிறது.

    கடந்த ஆண்டு 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. தற்போது கூடுதலாக மேலும் 100 ஜோடிகளை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 ஜோடிகள் வீதம் 600 ஜோடிகளுக்கு திருக்கோயி ல்கள் சார்பாக திருமண விழா நடத்தப்படு கிறது.

    அதன்படி திருமணத்திற்கு தேவையான 4 கிராமில் திருமாங்கல்யம், மணமகன் ஆடை ரூ.1000, மணகள் ஆடை ரூ.2000, திருமண த்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரூ.2000, மாலை, புஷ்பம் ரூ.1000, பீரோ ரூ.7800, கட்டில் ரூ.7500, மெத்தை ரூ.2200, இரண்டு தலையணை ரூ.190, ஒரு பாய் ரூ.180, இரண்டு கைக்கடிகாரம் ரூ.1000, ஒரு மிக்சி ரூ.1490, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் ரூ.3640 என மொத்தம் ரூ.30,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் மற்றும் 4 கிராம் தங்கம் ஆகியவை வழங்க ப்பட்டு வருகிறது.

    நடப்பு ஆண்டில் முதற்கட்டமாக திண்டுக்கல் இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஜோடிகளுக்கும், தேனி மாவட்டத்தில் 5 ஜோடிகளுக்கும் என மொத்தம் 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    தற்போது 2-ம் கட்டமாக திண்டுக்கல்அபிராமி அம்மன் கோவிலில் 8 ஜோடிகளுக்கு இன்று இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு ஆண்டில் இதுவரை திண்டுக்கல் இணை ஆணையர் மண்ட லத்தில் மொத்தம் 22 ஜோடி களுக்கு திருக்கோயில்களின் சார்பில் இலவச திருமணம் நடத்தப்ப ட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிகளில், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையாளர் சுரேஷ், செயல் அலுவலர்கள் வேலுச்சாமி, முருகன், பாலசரவணன், ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
    • புது மணத் தம்பதியருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர் வரிசை வழங்கி திரு மணத்தை நடத்தி வைத்தனர். நிறைவாக, புதுமணத் தம்பதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திருக்கோவில்களில் எளி யோருக்கு இலவச திருமணம் நடத்தும் திட்டத்தின் கீழ், சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை சார்பில், வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

    சேலம் மண்டல இணை ஆணையர் சபர்மதி, உதவி ஆணையர் ராஜா, வாழப் பாடி வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி.சக்கர வர்த்தி, பேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி பாலாஜி, துணைத்தலைவர் பேபி, தி.மு.க. நகர செயலா ளர் சுப்பிரமணியன், செயல் அலுவலர் கஸ்தூரி, ஆய்வா ளர் சங்கர் ஆகியோர் புது மணத் தம்பதியருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர் வரிசை வழங்கி திரு மணத்தை நடத்தி வைத்தனர். நிறைவாக, புதுமணத் தம்பதி கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு திருமண விருந்து வழங்கப் பட்டது.

    அரசு சார்பில் தங்கத்தா லியுடன் திருமணம் நடத்தி வைத்ததோடு, புதிய குடித் தனத்திற்கு தேவையான அனைத்து சீர்வரிசைகளும் வழங்கப்பட்டன. இதற்கு தமிழக அரசுக்கு புதுமணத் தம்பதிகளும், பெற்றோர்க ளும் நன்றி தெரிவித்தனர்.

    • 4 கோவில்களில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.
    • ரூ.1 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் விட்டனேரி கொல்லங்குடி வெட்டுடையார் காளி யம்மன் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இந்து சமய சிவகங்கை மண்டல இணை ஆணையர் பழனிகுமார் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

    மணமக்களுக்கு ரூ.1 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் குத்துவிளக்கு பீரோ, தலையணை, சமையல்பாத்திரங்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், பொதுக்குழு உறுப்பினருமான ஏஆர்.ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ஆர்.எம். கென்னடி, யோக கிருஷ்ண குமார், ஆரோக்கியசாமி, கொல்லங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மெய்ஞான மூர்த்தி, மாணவர் அணி கார்த்தி, பால்பாண்டி, குட்டி, தமிழ்ச்செல்வன், சுசீந்திரன், வழக்கறிஞர் சதீஷ், செல்லப்பாண்டி, பாலமுருகன், அசோக், முருகன், அல்லூர் ரவி, காளை மணி, அம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கோவில் செயல் அலுவலர் நாராயணி நன்றி கூறினார். தாயமங்கலம் முத்துமாரி அம்மன்கோவிலில்ஒரு ஜோடிக்கும், அரியக்குடி திருவேங்கடம் உடையார் கோவிலில் 3 ஜோடி களுக்கும், பரமக்குடியில் திரவுபதி அம்மன் கோவிலில் 3 ஜோடிகளுக்கும் மொத்தம் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    அரியக்குடி திருவேங்கடமுடையார் கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் மாங்குடி எம்.எல்.ஏ., காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணைத் தலைவர் குணசேகரன், கண்ணன், காரை சுரேஷ் அறங்காவலர் குழு உறுப்பினர் வெள்ளையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலை யத்துறை சார்பில், ஏழை, எளியோருக்கு வருகிற

      28-ந் தேதி இலவச திரு மணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

      மேலும் இந்த திருமண விழாவில் கலந்து கொள்ளும் ஜோடிகளுக்கு திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம், புதிய ஆடை, திருமணத்துக்கு வரும் மணமக்களின் வீட்டார் 20 பேருக்கு திருமண விருந்து, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், மணமக்க ளுக்கு வாட்ச், மிக்ஸி, சமை யல் பாத்திரங்கள் மற்றும் திருமணத்துக்கு தேவையான மாலை, பூஜை சாமான்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

      இதையடுத்து நாமக்கல் மாவட்டம் முழுவதும், அற நிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள கோவில்களில் 100-க்கும் மேற்பட்ட ஜோடி கள் திருமணம் செய்ய உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து இருந்தனர். இவர்க ளுக்கு மோகனூரில் உள்ள அசலதீபேஸ்வரர் ஆல யத்தில் வருகிற 28-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.

      இதையடுத்து, மணமக்களின் பெற்றோரும் பத்திரிக்கை அடித்து, உறவினர்களுக்கு கொடுத்த நிலையில், திருமண தேதியை ஜூலை 7-ந் தேதிக்கு மாற்றம் செய்துள்ளதாக, இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மணமக்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

      மேலும் வருகிற ஜூலை 7-ந் தேதி தேய்பிறை முகூர்த்தம் என்பதால், திருமணம் செய்ய மணமக்களின் பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் திருமணம் செய்ய பதிவு செய்தவர்கள் தேதி மாற்றத்தை விரும்பாமல் 28-ந் தேதியே திருமணம் செய்ய முடிவு செய்துள்ள னர்.

      பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் இலவச திருமணம் செய்ய 8 மண மக்கள் ஜோடி பதிவு செய்தி ருந்தனர். தேதி மாற்றத்தால் 6 மணமக்கள் ஜோடிகள் பதிவை ரத்து செய்துவிட்டு வரும் 28-ந் தேதியில் முகூர்த்தம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

      திருமண தேதி மாற்றத் தால் மணமக்களின் பெற் றோர்கள், உறவினர்கள் கடும் அதிருப்தி அடைந்துள் ளனர். இது குறித்து அற நிலையத்துறை அதிகாரி களிடம் கேட்டபோது,

      இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உத்தர வின் பேரில் தேதி மாற்றப் பட்டுஉள்ளது. இதற்குரிய காரணம் எங்களுக்கு தெரியவில்லை. வருகிற 7-ந் தேதி இலவச திருமணம் நடக்க இருப்பதால், தகுதி உடைய மணமக்கள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் என கூறினர்.

      • சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த மேக்கப் கிட்டை வழங்கியிருக்கலாம் என மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.
      • முதலமைச்சரின் திருமண திட்டத்தின்கீழ், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக 49,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.

      போபால்:

      மத்தியப் பிரதேசத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அரசு சார்பில் இலவசமாக திருமணம் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் இன்று தண்ட்லா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 296 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. விழாவில் மணப்பெண்களுக்கு மேக்கப் கிட் பரிசாக வழங்கப்பட்டது. அந்த மேக்கப் கிட்டில் ஆணுறைகளும், கருத்தடை மாத்திரைகளும் இருந்தன. இந்த சம்பவம் திருமண விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

      மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த மேக்கப் கிட்டை வழங்கியிருக்கலாம் என மாவட்ட மூத்த அதிகாரி ராவத் குற்றம்சாட்டினார். குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வாறு ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை தந்திருக்கலாம் என்றும் கூறினார்.

      'மாவட்ட நிர்வாகம் தரப்பில் மேக்கப் கிட் வழங்கப்படவில்லை. ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. முதலமைச்சரின் திருமண திட்டத்தின்கீழ், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக 49,000 ரூபாய் வரவு வைக்கிறோம். 6,000 ரூபாய் மதிப்புள்ள உணவு, தண்ணீர் மற்றும் ஒரு கூடாரத்தை வழங்கும் பொறுப்பை மாவட்ட நிர்வாகம் ஏற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாக்கெட்டுகளில் என்ன இருந்தது என எங்களுக்கு தெரியாது' என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

      • திருமணத்திற்கு அரை பவுன் தங்க தாலியை இந்து சமய அறநிலையத்துறை மூலம் மேயர் சத்யா வழங்கினார்.
      • கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட ரூ. 50,000- மதிப்புள்ள பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களையும் அவர் மணமக்களுக்கு வழங்கினார்.

      ஓசூர்,

      தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகி யோரது உத்தரவிற்கிணங்க, ஓசூர் மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று இலவச திருமணம் நடத்தப்பட்டது.

      ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டை சேர்ந்த ஹர்ஷிதா என்ற மணப்பெண்ணிற்கும், மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த விக்னேஷ் என்ற மணமகனுக்கும் கோவிலில் வைத்து மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா இலவச திருமணத்தை நடத்தி வைத்தார்.

      திருமணத்திற்கு அரை பவுன் தங்க தாலியை இந்து சமய அறநிலையத்துறை மூலம் மேயர் சத்யா வழங்கினார்.

      மேலும் கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட ரூ. 50,000- மதிப்புள்ள பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களையும் அவர் மணமக்களுக்கு வழங்கினார்.

      மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, கோவில் செயல் அலுவலர் சாமிதுரை மற்றும் பணியாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் ரவி, மாதேஸ்வரன், கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன் மற்றும் கட்சியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

      • வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் குற்றாலம் குற்றாலநாதர் கோவில் நிதி மூலம் இலவச திருமணம் நடைபெற்றது.
      • மணமக்களுக்கு கோவில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

      தென்திருப்பேரை:

      ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலின் உபக்கோவில் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் குற்றாலம் குற்றாலநாதர் கோவில் நிதி மூலம் இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்தீபன் ஆலோசனையின் பேரில், தூத்துக்குடி மண்டல இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில் இலவச திருமணம் நடைபெற்றது. மேலும் மணமக்களுக்கு கோவில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆழ்வார் திருநகரி நகர தி.மு.க. செயலாளர் கோபிநாத், ஆழ்வை மத்திய ஒன்றிய மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன், முன்னாள் நகர செயலாளர் முத்து ராமலிங்கம், கோவில் செயல் அலுவலர் அஜீத் மற்றும் கோவில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

      • 5 பவுன் தங்க நகை, துணி மற்றும் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன.
      • 400 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

      ஊட்டி,

      நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் 400 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. மா்க்கஸ் அமைப்பு சாா்பில் நடைபெற்ற விழாவில் 37 இந்து ஜோடிகளுக்கு அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலிலும், 3 கிறிஸ்தவ ஜோடிகளுக்கு தேவாலயத்திலும், 360 இஸ்லாமிய ஜோடிகளுக்கு அவா்களது முறைப்படியும் திருமணங்கள் நடைபெற்றன.திருமணத்துக்கு சீா்வரிசையாக ஜோடிகளுக்கு தலா 5 பவுன் தங்க நகை, துணி மற்றும் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன. விழாவை பொன்மலை அப்துல் காதா் முஸ்லியாா் தொடங்கி வைத்தாா். சமஸ்தா தலைவா் சுலைமான் முஸ்லியாா், மா்க்கஸ் நிா்வாக அப்துல் சலாம் முஸ்லியாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினா்.

      • தருமபுரி மாவட்டத்தில் அருகில் உள்ள முக்கிய கோவில்களில், அதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.
      • இரு வீட்டினரின் பெற்றோர், மணமக்கள், அவசியம் வர வேண்டும்.

      தருமபுரி, 

      தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 25 மணமக்களுக்கு வரும் 23.2.2023 அன்று இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் அருகில் உள்ள முக்கிய கோவில்களில், அதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். அப்போது இரு வீட்டினரின் பெற்றோர், மணமக்கள், அவசியம் வர வேண்டும்.

      விண்ணப்பத்தில் மணமகள், மணமகன் புகைப்படம், பிறந்த தேதி, வயது, தொழில், ஜாதி உள்ளிட்ட இருவர் பற்றிய முழு விபரத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். இருவரும் இந்துவாக இருப்பதோடு, முதல் திருமணமாகவும் இருக்க வேண்டும். திருமணத்தின்போது அனைத்து ஆவண அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.

      மணமகள் அல்லது மணமகன் பெற்றோருடன் கூடிய புகைப்படம் திருமண படிவத்தில் கண்டிப்பாக இணைக்க வேண்டும். திருமணத்துக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணம், எக்காரணம் கொண்டும் திருப்பி தர இயலாது.

      அதேபோல் திருமணம் தொடர்பான விபரம், நகல்கள், மணமக்கள் தவிர வேறு யாருக்கும், தனிப்பட்ட முறையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம், வேறு எந்த சட்டப்பிரிவின் மூலமும் வழங்கப்படாது என்பன உள்ளிட்ட 13 நிபந்தனைகளுடன் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும்.

      மேலும் மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்படும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      ×