search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் இலவச திருமணம்
    X

    ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் இலவச திருமணம்

    • திருமணத்திற்கு அரை பவுன் தங்க தாலியை இந்து சமய அறநிலையத்துறை மூலம் மேயர் சத்யா வழங்கினார்.
    • கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட ரூ. 50,000- மதிப்புள்ள பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களையும் அவர் மணமக்களுக்கு வழங்கினார்.

    ஓசூர்,

    தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகி யோரது உத்தரவிற்கிணங்க, ஓசூர் மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று இலவச திருமணம் நடத்தப்பட்டது.

    ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டை சேர்ந்த ஹர்ஷிதா என்ற மணப்பெண்ணிற்கும், மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த விக்னேஷ் என்ற மணமகனுக்கும் கோவிலில் வைத்து மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா இலவச திருமணத்தை நடத்தி வைத்தார்.

    திருமணத்திற்கு அரை பவுன் தங்க தாலியை இந்து சமய அறநிலையத்துறை மூலம் மேயர் சத்யா வழங்கினார்.

    மேலும் கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட ரூ. 50,000- மதிப்புள்ள பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களையும் அவர் மணமக்களுக்கு வழங்கினார்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, கோவில் செயல் அலுவலர் சாமிதுரை மற்றும் பணியாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் ரவி, மாதேஸ்வரன், கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன் மற்றும் கட்சியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×