search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோளூர்  வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் இலவச திருமணம்
    X

    இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில் இலவச திருமணம் நடைபெற்றது. அருகில் நகர செயலாளர் கோபிநாத் உள்ளார்.

    திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் இலவச திருமணம்

    • வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் குற்றாலம் குற்றாலநாதர் கோவில் நிதி மூலம் இலவச திருமணம் நடைபெற்றது.
    • மணமக்களுக்கு கோவில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலின் உபக்கோவில் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் குற்றாலம் குற்றாலநாதர் கோவில் நிதி மூலம் இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்தீபன் ஆலோசனையின் பேரில், தூத்துக்குடி மண்டல இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில் இலவச திருமணம் நடைபெற்றது. மேலும் மணமக்களுக்கு கோவில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆழ்வார் திருநகரி நகர தி.மு.க. செயலாளர் கோபிநாத், ஆழ்வை மத்திய ஒன்றிய மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன், முன்னாள் நகர செயலாளர் முத்து ராமலிங்கம், கோவில் செயல் அலுவலர் அஜீத் மற்றும் கோவில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    Next Story
    ×