search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free bicycle"

    • செய்யாறு ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் உள்ள 13 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு செய்யாறு ஓ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 1,384 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி ராஜு தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் ஜே சி கே சீனிவாசன் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என் சங்கர் வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தினகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது
    • அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை தலைமையாசிரியர் பொன்னுதுரை (பொறுப்பு) தலைமையில் நடைபெற்றது.

    இதில் பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கினர். ஆலத்தூர் மேற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சோமு.மதியழகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதுகலை ஆசிரியர் கலியமூர்த்தி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் மதிவாணன். தெய்வானைலதா, செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலாதங்கராசு, இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர், ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ராஜா, விஜய்அரவிந்த், முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளர் ராஜாசிதம்பரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முதுகலை ஆசிரியர் விஜய நாராயண பெருமாள் நன்றி கூறினார்.

    • அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 274 மாணவிகள், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் 607 மாணவர்கள், நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் 595 மாணவர்கள் என மொத்தம் 1476 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ். அமர்நாத் தலைமை தாங்கினார், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜி.புருஷோத்தமன், பாலசுப்பிரமணியன், நகர் மன்ற உறுப்பினர்கள் நவீன்சங்கர், ஜாவீத்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மகளிர் மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசீலிகிறிஸ்டி வரவேற்றார்.

    குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் 3 பள்ளிகளைச் சேர்ந்த இருபால் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சரளாதேவி நன்றி கூறினார்.

    • விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
    • அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயின்ற 5,423 மாணவ-மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 75 லட்சத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா பெரம்பலூர் அரசு பள்ளியில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதேபோல் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் அமைச்சர் சிவசங்கர் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினார்.

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்துார்:

    திருப்பத்துார் மாவட்டம், கந்திலி யூனியனுக்கு உட்பட்ட கசிநாயக்கன்பட்டி, மட்றப்பள்ளி, விஷமங்கலம், குரும்பேரி, பேராம்பட்டு மற்றும் குனிச்சி பஞ்.ல் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 835 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்கள் ஜனார்த்தனன், பழனிசாமி, வி ஸ்ரீ ராமன், தலைமை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்துார் எம்எல்ஏ நல்லதம்பி கலந்துகொண்டு 835 மாணவர்களுக்கு இலவச சைககிள் வழங்கினார்.

    அத்துடன் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேராம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பெஞ்ச், டெஸ்க் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களை எம்எல்ஏ வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி, துணைத் தலைவர் மோகன் குமார், கந்திலி திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.ஏ.குணசேகரன், வி.முருகேசன் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் குலோத்துங்கன், ராஜா, தசரதன், சீனிவாசன் ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் ஓம் சிவபிரகாஷ், ஜெகநாதன் பொருளாளர் ராஜேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏலகிரி மலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் வழங்கப்பட்டது
    • ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரிகள் பங்கேற்பு

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் அத்தனாவூர் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் இப்பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று ஏலகிரி மலையில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 2021 -2022 ஆண்டிற்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தினை ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் தலைமை தாங்கி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் அருள் மேரி, தலைமை ஆசிரியர் விக்டோரியா, மேலும் இவ்விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பிச்சைக்காரன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய குழு உறுப்பினர் சசிகலா கார்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் ஹேமச்சந்திரன், காங்கிரஸ் சோளிங்கர் ஒன்றிய தலைவர் கார்த்தி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் புல்லட் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பிச்சாண்டி அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அரசின் விலையில்லா 110 சைக்கிள்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். மாணவ மாணவிகள் நன்றாக படித்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தர வேண்டும்.

    மாணவர்கள் நன்றாக படித்து டாக்டர், கலெக்டர், போலீஸ் அதிகாரியாகவோ பொறுப்பேற்று சமுதாயத்திற்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும், போதை பொருட்களால் ஏற்படும் தீய விளைவுகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சமையல் அறை கட்டிடம், பள்ளி வளாகத்திற்கு தரை தளம் அமைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

    அப்போது பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாஞ்சாலை, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தவமணி, தினகரன் மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் உதவி தலைமை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

    • அய்யம்பாளையம் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
    • 118 மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    திருச்சி:

    முசிறி அடுத்த அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். முசிறி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு 118 மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    நிகழ்வில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள், உதவி தலைமை ஆசிரியை பவானி, உடற்கல்வி ஆசிரியர் வசந்த், தி.மு.க. புறநகர் மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாவதி, மனச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் வளர்மதி சின்ராஜ், மாவட்ட இளைஞரணி கார்த்திக், முசிறி ஒன்றிய துணைச் செயலாளர் மூர்த்தி ,ஒன்றிய கவுன்சிலர் ஜானகி அண்ணாதுரை, தொண்டரணி சரவணன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளம்சேட்சென்னி, வட்டார ஒருங்கிணைப்பாளர் நடேசன் ஆசிரியர் பயிற்றுநர் பர்வின், மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் மாணவ, மாணவிகள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்
    • ஏராளமானோர் பங்கேற்பு

    நெமிலி:

    தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பாணாவரம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை ருமனா தலைமையில் படிக்கும் 164 மாணவிகளுக்கும், அதேபோல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவசங்கா் தலைமையில் 137 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினாா்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் அா்ஜீனன், ஒன்றிய குழு உறுப்பினா் முனியம்மாள் கனேஷன் ஊராட்சிமன்ற துணை தலைவர் சரண்யாவிஜயன் பெற்றோா் ஆசிரியா் சங்க தலைவர் துரைமஸ்தான், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைகுழு தலைவர் கல்பனா விஜயகுமாா் ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மேலண்மை குழு தலைவர் சந்திராமுனிசாமி, துணை தலைவர் ரேகா மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பொதுமக்கள் என பலர் கலந்து ெகாண்டனர்.

    • நாடார் மேல்நிலை பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
    • ராஜபாளையம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ரெயில்வேபீடர் ரோட்டில் உள்ள கிருஷ்ண மராஜ பாளையம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலையில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி. ப்ரித்தி முன்னிலை வகித்தார்.

    விழாவில் மாணவ, மாணவியர்கள் போதைப்பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மாணவ-மாணவியர்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் விஜயராஜன், உறவின் முறை தலைவர் ஆதவன், தலைமை ஆசிரியர் வெங்கடேசன்,தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, கவுன்சிலர்கள் பாரத், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை நகரசபை தலைவர் வழங்கினார்.
    • சிவகங்கை செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ஏற்பாட்டில் நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் யோவல்மேரி ஏற்பாட்டில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    இந்த நிகழ்வில் பள்ளி குழுத்தலைவர் தேவதாஸ், நகர் மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் ராமதாஸ், அயூப்கான், சரவணன், விஜயக்குமார், கார்த்திகேயன், தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார், பூமிராஜ், தமிழ்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூரில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.
    • கூடைப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு வார விழாவையொட்டி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் மாணவர்கள் போதை தடுப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர் பொன் விஜயா, சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட, மாநில, தேசிய அளவில் கூடைப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி, தலைமை ஆசிரியர்கள் பிராக்ரன்ஸ் லதா, (பொறுப்பு) சுதா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், பரந்தாமன், செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ஜுலான் பானு, பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், நகர செயலாளர் ரகுபதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×