search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free bicycle"

    • பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 200 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சின்னாத்தா அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் காமராஜர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவ- மாணவிக ளுக்கு பிற்படுத்தப்பட்டடோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 200 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் குமரன், உதவி இயக்குனர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளியில் பயில்வது பெருமை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • சிவகங்கை கோட்டையூர் தஞ்சாவூர்அருணாச்சலம் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்-ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தஞ்சாவூர்அருணாச்சலம் செட்டியார்அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    தற்போது அரசுப்பள்ளி யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி கற்பதிலும் வேலைவாய்ப்புக்களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் பயில்வதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    பெற்றோர்கள் தனியார்பள்ளிகளில் தங்களது குழந்தைகள் கல்வி கற்பது பெருமை என்ற தவறான எண்ணத்தினை களைந்து அரசுப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியின் போது, மேற்கண்ட அரசுப்பள்ளியில் 2021-2022-ம் ஆண்டு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் தனது சொந்த நிதியிலிருந்து முதல் பரிசுத்தொகையாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசுத்தொகையாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கினார்.

    விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், பேரூராட்சித் தலைவர் கார்த்திக் சோலை, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், மின்வாரியத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 300 பேர் பயனடைந்தனர்
    • அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி (ஜோலார்பேட்டை) நல்லதம்பி(திருப்பத்தூர்), ஏ.சி. வில்வநாதன்(ஆம்பூர்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு உலமாக்களுக்கு சைக்கிள்கள், திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா, விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் இடுப்பொருட்கள் உட்பட 713 பயனாளிகளுக்கு 7 கோடியே 15 லட்சத்து 58 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், 300 உலமாக்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார், மாவட்ட கூட்டுறவு பால்வளத் தலைவர் எஸ். ராஜேந்திரன், ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் மாரி செல்வி, பேரூராட்சி செயலாளர்கள் ஆ. செல்வராஜ், ஸ்ரீதர், இஸ்லாமிய பெண்கள் கல்லூரி செயலாளர் சுனா கைசர் அஹமத், பல்வேறு துறை அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர். முடிவில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா நன்றி கூறினார்.

    • அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வந்தவாசி தொகுதி அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 186 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினர்.

    இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அரங்காவலர் குழு உறுப்பினர் பாண்டுரங்கன், ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், பெரணமல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி ஏழுமலை, துணைத் தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை, ஆண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் மனோகரன், காங்கிரஸ் பொறுப்பாளர் பழக்கடை பாலையா, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகவேல், துணைத்தலைவர் சுப்ரமணியன், பொய்கை மாரியப்பன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் வைத்தியநாதன் வரவேற்றார்.

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 600 பேர் பயனடைந்தனர்

    திருப்பத்தூர்:

    ஜவ்வாது மலை நெல்லிவாசல், புதூர்நாடு வனத்துறை மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம் தலைமை வகித்தார் அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கே. சந்திரகுமார், கே. ஆறுமுகம், வரவேற்றனர் வனச்சரக அலுவலர்கள் எம். பிரபு, ரமேஷ் குமார் முன்னிலை வகித்தனர். 600 மலைவாழ் மாணவ மாணவிகளுக்கு விலையில் சைக்கிள்களை ஏ.நல்லதம்பி எம்எல்ஏ வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாவலர் ஆர்.ராஜ்குமார், மின்சார வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி வில்வம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.அலமேலு செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் பிருந்தாவதி வைகுந்தராவ், துக்கன், கூட்டுறவு சங்க தலைவர் சின்னப் பையன், உட்பட பலர் பேசினார்கள் இறுதியில் உதவி தலைமை ஆசிரியர்கள் ஜி சதாசிவம் டி.வாசுதேவன், நன்றி கூறினார்கள்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 6 அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டது

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தை சேர்ந்த செங்காடு, கோவிலூர், அனக்காவூர், புரிசை, ஆக்கூர், உக்கல் ஆகிய ஊர்களில் உள்ள 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகள் அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு, நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பரசுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

    பின்னர் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மு.பெ.கிரி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • 527 பேர் பயன்பெற்றனர்

    செங்கம்:

    செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்து கொண்டார்.

    செங்கம் பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா, வட்டாட்சியர் முனுசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 527 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், மனோகரன், நகர செயலாளர் அன்பழகன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருபாகரன், பள்ளி மேலாண்மை குழு முருகமணிரேவதி, மணி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • படவேடு அனந்தபுரம் குப்பம் பள்ளிகளில் வழங்கினர்
    • புதுமைப்பெண் திட்ட ஊக்கத்தொகையை நல்ல முறையில் பயன்படுத்த அறிவுரை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேநிலைப்பள்ளி, அனந்தபுரம் மேநிலைப்பள்ளி, குப்பம் மேநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தனித்தனியே நடந்த விழாவில் 374 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.

    மாணவ மாணவிகள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். போதை வஸ்துகள் புகையிலை, சிகரெட் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும்.

    புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு, தமிழக முதல்வர் வழங்கும் தலா ரூ.1000 ஊக்கத்தொகையை பெற்று நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் மனோகரன், சுரேஷ்கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் ரேணுகொண்டாபுரம் ஆனந்தன், அனந்தபுரம் சீனிவாசன், குப்பம் மகேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் படவேடு சீனிவாசன், அனந்தபுரம் வளர்மதிஅண்ணாமலை, குப்பம் துணை தலைவர் வீரமணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் சீதாராமன், போளூர் ஒன்றிய செயலாளர் ஆர் வி சேகர், படவேடு முருகன், ஜெகந்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் ரெஜினா நன்றி கூறினார்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 7அரசு மேல்நிலைபள்ளிகளில் வழங்கினர்

    செய்யாறு:

    செய்யாறு டவுன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒன்றியத்தில் நெடும்பிறை, வாழ்குடை, கொற்க்கை, முனுகப்பட்டு, பல்லி உள்ளிட்ட 7அரசு மேல்நிலைபள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1354 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிகளுக்கு செய்யாறு ஒன்றிய குழு தலைவர் நாவல் பாக்கம் பாபு தலைமை வகித்தார். நகர மன்ற தலைவர் மோகனவேல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு 1354 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் நகர செயலாளர் வழக்கறிஞர் கே விஸ்வநாதன், வழக்கறிஞர் அசோக், மாவட்ட சிறுபான்மை செயலாளர் வழக்கறிஞர் பாஷா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சின்னதுரை, மற்றும் திமுக பிரமுகர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 374 மாணவர்கள் பயன் பெற்றனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேநிலைப்பள்ளி, அனந்தபுரம் மேநிலைப்பள்ளி, குப்பம் மேநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தனித்தனியே நடந்த விழாவில் நேற்று 374 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.

    போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் மனோகரன், சுரேஷ்கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் ரேணுகொண்டாபுரம் ஆனந்தன், அனந்தபுரம் சீனிவாசன், குப்பம் மகேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் படவேடு சீனிவாசன், அனந்தபுரம் வளர்மதிஅண்ணாமலை, குப்பம் துணை தலைவர் வீரமணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் சீதாராமன், போளூர் ஒன்றிய செயலாளர் ஆர் வி சேகர், படவேடு முருகன், ஜெகந்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் ரெஜினா நன்றி கூறினார்.

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஆசிரியர், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியம் கொரட்டி, சுந்தரம் பள்ளி, கண்ணாலப்பட்டி, , நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசு வழங்கிய விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளரும மாவட்ட கவுன்சிலர் கே ஏ.குணசேகரன் தலைமை தாங்கினார். அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரங்கசாமி குமார், லட்சுமிகார்த்திகேயன், விஜயலட்சுமி கருணாநிதி மாவட்ட கவுன்சிலர் சி கே சுப்பிரமணி, வரவேற்றனர்.

    மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் தொகுதி ஏ. நல்லதம்பி எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கு.ராஜமாணிக்கம் ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் குலோத்துங்கன், அவைத் தலைவர் ராஜா, ஆசிரியர் ஜெகதீசன் ஆர்.தசரதன், ஒன்றிய கவுன்சிலர்கள் தாமோதரன், கே எம் சக்கரை, சாந்தகுமார் சக்கரவர்த்தி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×