என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்ட காட்சி.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
- ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்
- ஏராளமானோர் பங்கேற்பு
நெமிலி:
தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பாணாவரம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை ருமனா தலைமையில் படிக்கும் 164 மாணவிகளுக்கும், அதேபோல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவசங்கா் தலைமையில் 137 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினாா்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் அா்ஜீனன், ஒன்றிய குழு உறுப்பினா் முனியம்மாள் கனேஷன் ஊராட்சிமன்ற துணை தலைவர் சரண்யாவிஜயன் பெற்றோா் ஆசிரியா் சங்க தலைவர் துரைமஸ்தான், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைகுழு தலைவர் கல்பனா விஜயகுமாா் ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மேலண்மை குழு தலைவர் சந்திராமுனிசாமி, துணை தலைவர் ரேகா மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பொதுமக்கள் என பலர் கலந்து ெகாண்டனர்.






