என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "farmer died"
தொண்டி:
திருவாடானை அருகே கருங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது53), விவசாயி. இவருக்கும், மனைவி கலா(50)வுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி அதிகாலை அழும் சத்தம் கேட்டு சுப்பிரமணியத்தின் சகோதரர் வேலு பார்த்தபோது கலா மற்றும் அவரது உறவினர்கள் சுப்பிரமணியன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அருகில் சென்று பார்த்த போது சுப்பிரமணியத்தின் தலை மற்றும் கை-கால்களில் ரத்தக் காயம் இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த வேலு (55) திருவாடானை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
தகவலின்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாடிப்பட்டி:
வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி பங்களா சோழவந்தான் சாலையைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 52), விவசாயி.
நேற்று இவர், மோட்டார் சைக்கிளில் அய்யன் கோட்டை சென்றார். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அணுகு சாலையில் சென்ற இளங்கோவன், அங்கிருந்த வேகத்தடையை கவனிக்கவில்லை.
இதனால் வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. அதில் இருந்த இளங்கோவன் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே இளங்கோவன் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேப்பூர்:
வேப்பூர் அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல்(வயது 50) விவசாயி. இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூர் சென்றார். பின்னர் அங்கு வேலை யை முடித்துவிட்டு அங்கிருந்து விளம்பாவூருக்கு அதே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
பெரியநசலூர் பஸ் நிறுத்தம் அருகே சேலம்-விருத்தாசலம் சாலையில் வந்தபோது பின்னால் வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட ராஜவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்