search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடிப்பட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி
    X

    வாடிப்பட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

    வாடிப்பட்டி:

    வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி பங்களா சோழவந்தான் சாலையைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 52), விவசாயி.

    நேற்று இவர், மோட்டார் சைக்கிளில் அய்யன் கோட்டை சென்றார். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அணுகு சாலையில் சென்ற இளங்கோவன், அங்கிருந்த வேகத்தடையை கவனிக்கவில்லை.

    இதனால் வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. அதில் இருந்த இளங்கோவன் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே இளங்கோவன் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×