search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle hit"

    திருமங்கலம் அருகே இன்று காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இரண்டாவது பெண் குழந்தை பவித்தகுரு (1½ வயது).

    இன்று காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அம்மாபட்டியை சேர்ந்த பாபு மகன் ஆனந்த்பாபு (32) இந்தப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்பனை செய்வதற்காக வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

    வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது வாகனம் ஏறியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. தண்ணீர் வண்டி ஏறி ஒன்றரை வயது பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கயத்தாறு அருகே நடந்து சென்ற விவசாயி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளத்தை சேர்ந்தவர் சாமுவேல்.  இவரது மகன் ஆபிரகாம் (வயது 55). விவசாயியான இவர் கடந்த 4-ந் தேதி ஆத்திகுளம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். இந்நிலையில் அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. 

    இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் இறந்தார். இது குறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×