என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "fall"
- மூட்டையை இறக்கி குடோனுக்கு எடுத்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின் பகுதியில்காயம் ஏற்பட்டது.
- ரமேசை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் நடேசன் நகர் பகுதியை சேர்ந்த பொன்னையன் மகன் ரமேஷ் (வயது40) . இவர் தனியார் வறுகடலை மில்லில் வேலை செய்து வந்தார்.
நேற்று தூத்துக்குடியில் இருந்து வெள்ளகோவில், ராமலிங்கபுரத்திற்கு பொட்டுக்கடலை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் இருந்து நேற்று காலையில் மூட்டையை இறக்கி கொண்டிருந்தார். அப்போது மூட்டையை இறக்கி குடோனுக்கு எடுத்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில் தலையின் பின் பகுதியில்காயம் ஏற்பட்டது. இதனை கண்டவர்கள் உடனே ரமேசை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கே. ராஜு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இறந்து போன ரமேசுக்கு மாதவி (32) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
- சேலம் மாவட்டத்தில் தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்லமுடியாததால் விரக்தியில் மது குடித்த வாலிபர் குட்டையில் தவறி விழுந்து பலியானார்.
- வெங்கடேஷ் லாரிக்கு வடமாநிலம் சென்று விட்ட நிலையில் அவரால் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் ரவுண்டானா அருகில் குட்டையில் ஆண் பிணம் கிடப்பதாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தாரமங்கலம் போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்தவர் கொங்கணாபுரம் அருகிலுள்ள அத்தியப்பனுர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் வெங்கடேஷ் (வயது36) லாரி டிரைவர் என்பது தெரியவந்தது. வெங்கடேஷின் தந்தை முத்து கடந்த 15 நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டார் . அந்த வேளையில் வெங்கடேஷ் லாரிக்கு வடமாநிலம் சென்று விட்ட நிலையில் அவரால் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.
பின்னர் தனது வீட்டிற்கு செல்லும் போது பவளத்தானுர் ரவுண்டானா பகுதியில் உள்ள பாலத்தின் மீது அமர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார் .மதுபோதை அதிகமாக மயங்கி குட்டையில் விழுந்தவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது .
இதுபற்றி வெங்கடேஷின் தாயார் பாவாய் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர். குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி, நெய்வத்தளி, சேந்தன்குடி, நகரம் கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் தென்னந்தோப்புகளுக்குள்ளும், தனியாகவும் எலுமிச்சை சாகுபடி செய்து வருகின்றனர். கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, புளிச்சங்காடு கைகாட்டி, பனங்குளம், குளமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 10 டன் வரை எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக வருகிறது.
ஆனால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 5-க்கும் குறைவாக வாங்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வியாபாரிகளும் மொத்தமாக வாங்கி வெளியூர்களுக்கு அனுப்பும் போது ரூ.10-க்கும் குறைவாகவே விற்கப்படுவதால் அவர்களுக்கும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு கிலோ எலுமிச்சை பழங்கள் ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. அதனால் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகபட்ச விலை ரூ.20-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது கிலோ ரூ. 10, ரூ.12 என்று விற்கப்பட்டு வந்த எலுமிச்சை பழங்கள் தற்போது கிலோ ரூ. 5-க்கு விற்பனை ஆகிறது. அதனால் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை இல்லாமல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. உற்பத்தி செலவுக்கு கூட பழங்களின் விற்பனை இல்லை என்பதால் ஒவ்வொரு நாளும் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது.
கீரமங்கலம் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றை பாதுகாப்பாக வைக்க குளிர்பதன கிடங்கு இல்லாததால் கட்டுபடியான விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நட்டத்தில் விற்கும் நிலை உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக வேட்பாளர்கள் சொல்லிவிட்டு சென்றுவிடுகின்றனர். அதன் பிறகு நடவடிக்கை எடுப்பதில்லை. குளிர்பதன கிடங்கு இருந்தால் விலை குறையும் காலங்களில் மலர்கள், காய், கனிகளை வைத்திருந்து விலை உயரும் போது விற்பனை செய்ய முடியும்.
அதேபோல எலுமிச்சை ஜூஸ் என்று ரசாயனம் கலந்த பானங்களை விற்கும் கடைகாரர்கள் நேரடியாக எலுமிச்சை பழங்களை கொள்முதல் செய்து தரமான ஜூஸ்களை விற்பனை செய்தால் மக்களுக்கும் பாதிப்பு இல்லை. விவசாயிகளுக்கும் எலுமிச்சை பழங்களின் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.“
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்