search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egg Price"

    • கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.15 ஆக இருந்தது.
    • 14-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.15 ஆக இருந்தது. 14-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டை விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 15-ந் தேதி 5 பைசா உயர்த்தப்பட்ட ஒரு முட்டை ரூ.5.25 ஆனது. 16-ந் தேதி மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டை ரூ. 5.30 ஆனது.

    17-ந்தேதி 5 பைசா உயர்த்தப்பட்ட ஒரு முட்டை விலை ரூ. 5.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 18-ந் தேதி மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் விலை ரூ. 5.40 ஆனது. முட்டை விலை தொடர் உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்):- சென்னை-600, பர்வாலா-463, பெங்களூரு-590, டெல்லி-483, ஹைதராபாத்-525, மும்பை-585, மைசூர்-590, விஜயவாடா-510, ஹொஸ்பேட்-550, கொல்கத்தா-572.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 148 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 95 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • முட்டை உற்பத்தி குறைந்த நிலையில் தேவை அதிகரித்துள்ளதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 141 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 143 ரூபாயாக உயர்ந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டையின் தேவை, உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 525 காசுகளாக இருந்த முட்டை விலை 530 காசுகளாக உயர்ந்தது. முட்டை உற்பத்தி குறைந்த நிலையில் தேவை அதிகரித்துள்ளதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியா ளர்கள் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி விலையை மேலும் 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 141 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 143 ரூபாயாக உயர்ந்தது.

    முட்டை கோழி விலை எந்த மாற்றமும் இல்லாமல் 95 ரூபாயாக நீடிக்கிறது.

    • நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு என்இசிசி தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.
    • வழக்கம்போல், கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 141 ரூபாயாகவும், முட்டை கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாய் ஆக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகம், கேரளாவில் விற்பனை ஆகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினமும் 50 லட்சம் முட்டைகள் செல்கிறது.

    நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு என்இசிசி தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் முட்டை உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது . அதன்படி 520 காசுகளாக இருந்த முட்டை விலை 525 காசுகளாக உயர்ந்தது.

    வழக்கம்போல், கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 141 ரூபாயாகவும், முட்டை கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாய் ஆக நீடிக்கிறது. இந்த விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    • முட்டையின் உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
    • ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 4-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக முட்டை விலை 515 காசுகளாக நீடித்தது.

    இந்த நிலையில் முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டையின் உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:- சென்னை-580, பர்வாலா-458, பெங்களூர்-570, டெல்லி-472, ஹைதராபாத்-505, மும்பை-565, மைசூர்-575, விஜயவாடா-480, ஹொஸ்பேட்-530, கொல்கத்தா-552.

    நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வழங்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    பல்லடத்தில் நேற்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கறிக்கோழி உயிருடன் ரூ.139 ஆக இருந்த நிலையில் 2 ரூபாய் உயர்த்தி, ஒரு கிலோ ரூ.146 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. இதனால் உரித்தகோழி ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை சேலம், நாமக்கல் மாவட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    கடும் வெயிலால் கோழியின் எடை குறைந்ததால் கறிக்கோழி விலை உயர்ந்ததாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முட்டைக்கோழி நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ ரூ. 95 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    • முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் இன்று நடந்தது.
    • முட்டை கோழி விலை கிலோவுக்கு 3 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை கோழி விலை, நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் இன்று நடந்தது. இதில் முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முட்டை கோழி விலை கிலோவுக்கு 3 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று 1௦௦ ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை, 97 ரூபாயாக குறைக்கப்பட்டது.

    இதே போல பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழியின் தேவை, உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.129 ஆக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    நாமக்கல்லில் நடந்த முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 515 காசுகளாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    • கடந்த 2-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ.5.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
    • முட்டை விலை நேற்று மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி பண்ணையில் விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.

    கடந்த 2-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ.5.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை-570, பர்வாலா-472, பெங்களூர்-565, டெல்லி-491, ஹைதராபாத்-495, மும்பை-560, மைசூர்-572, விஜயவாடா-515, ஹொஸ்பேட்-525, கொல்கத்தா-540.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.128 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.107 ஆக நிர்ணயித்துள்ளது.

    • முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
    • முட்டை கோழி விலை கிலோ 11 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 96 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 107 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நாமக்கலில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டையின் விலையை 5 காசுகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

    அதன்படி 500 காசுகளாக இருந்த முட்டை விலை, 505 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 1-ந் தேதி 405 காசுகளாக இருந்த முட்டை விலை, படிப்படியாக அதிகரித்து இன்று 505 காசுகளாக இருப்பதால் ஒரே மாதத்தில் முட்டை விலை 1 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், கோடை வெயிலால் முட்டை உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்து இருப்பது முட்டை விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதே போல முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலை கிலோ 11 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 96 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 107 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    கறிக்கோழி விலை 127-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் நீடிக்கும் என பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 495 காசுகளாக இருந்த முட்டை விலை 500 காசுகளாக உயர்ந்தது.
    • கடந்த மாதம் 1-ந் தேதி 405 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முட்டை தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 495 காசுகளாக இருந்த முட்டை விலை 500 காசுகளாக உயர்ந்தது. கடந்த மாதம் 1-ந் தேதி 405 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரே மாதத்தில் 95 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முட்டை விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் வருமாறு:- சென்னை-550, ஐதராபாத்-480, விஜயவாடா-505, பர்வாலா-467, மும்பை-535, மைசூர்-550, பெங்களூரு-545, கொல்கத்தா-565, டெல்லி-489, என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பல்லடத்தில் நடந்த தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.127 ஆகவும், இதே போல முட்டை கோழி விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.96 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

    • முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை விலை 490 காசிலிருந்து 495 காசாக உயர்த்தப்பட்டது.
    • அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதால் இனிவரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை விலை 490 காசிலிருந்து 495 காசாக உயர்த்தப்பட்டது.

    நாளை முதல் கேரளாவை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதால் இனிவரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    • ஒரு கிலோ 122 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையை 5 ரூபாய் அதிகரித்து 127 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
    • முட்டை, கறிக்கோழி, முட்டை கோழி என அனைத்தும் விலை உயர்ந்ததால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கான விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில், நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் வாதித்தனர்.

    பின்னர் முட்டை விலை 5 காசுகள் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 485 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 5 காசு உயர்த்தி 490 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    அதேபோல முட்டை கோழி பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் 91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் முட்டை கோழி விலையை 5 ரூபாய் உயர்த்தி 96 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு கிலோ 122 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையை 5 ரூபாய் அதிகரித்து 127 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.

    முட்டை, கறிக்கோழி, முட்டை கோழி என அனைத்தும் விலை உயர்ந்ததால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 122 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
    • முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 475 காசுகளாக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    முட்டை கோழிகளின் விலை நாமக்கல்லில் 3 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நேற்று முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இதில் முட்டை கோழிகளின் உற்பத்தி மற்றும் அதன் தேவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலை கிலோவுக்கு ரூ.3 குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 94 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை, 91 ரூபாயாக குறைந்தது. இதே போல பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 122 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதே போல முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 475 காசுகளாக நீடிக்கிறது.

    கேரளாவில் முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு முட்டைக்கு 30 பைசா சரிவடைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 4 கோடி கோழிகள் மூலம், 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையை கொள்முதல் செய்கின்றனர்.

    தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து முட்டைகள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. மேலும் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்காகவும் முட்டை லோடுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் இன்று நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.75 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 30 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் கேரளாவில் முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு முட்டைக்கு 30 பைசா சரிவடைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக 2 நாட்களுக்கு ஒரு முறை என முட்டை விலை உயர்த்தப்பட்டு வந்தது. அதன்படி கடந்த 12-ம் தேதி ரூ.3.65 பைசாவாக இருந்த ஒரு முட்டையின் விலை 25 பைசா உயர்ந்து ரூ.3.90 ஆனது. இதையடுத்து 14-ந்தேதி 25 பைசா மற்றும்16-ந்தேதி 35 பைசா, 19-ந்தேதி 25 பைசா உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை- 505, பர்வாலா- 355, பெங்களூர் -485, டெல்லி- 400, ஹைதராபாத்- 420, மும்பை- 520, மைசூர்- 465, விஜயவாடா- 430, ஹெஸ்பேட்- 445, கொல்கத்தா- 480.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.126 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 100 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
    ×