search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Durga Pooja"

    • வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
    • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.

    அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.

    அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

    இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும்.

    இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும்.

    அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும்.

    இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும் என்றார்.

    இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

    வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

    நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி.

    கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள்,

    அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.

    இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும்

    மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.

    மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.

    • `து, உ, ரு, க, ஆ' என்ற எழுத்துக்களின் கூட்டு உச்சரிப்பில்தான் `துர்கா' என்ற திருநாமம் வெளிப்படுகிறது.
    • துர்க்கையை பூஜிக்க ராகு காலமே மிகச்சிறந்த நேரம் என்பது சித்தர்கள் கண்ட வழி.

    `து, உ, ரு, க, ஆ' என்ற எழுத்துக்களின் கூட்டு உச்சரிப்பில்தான் `துர்கா' என்ற திருநாமம் வெளிப்படுகிறது. துர்க்கா என்னும் திருநாமம் அசுரர்-தடங்கல் வியாதி- பாவம் மற்றும் பயத்தை போக்கிடும் சக்தி வாய்ந்த எழுத்துக் கோர்வையாகும்.

    ராகு காலம் என்பதும், எமகண்டம் என்பதும் எந்த காரியமும் செய்யக்கூடாத நேரமென்றும், அந்த நேரங்களில் மேற்கொள்ளப்படும் காரியம் வெற்றி பெறாது என்றும் நம்மிடையே ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. எனவேதான், துர்க்கைக்கு ராகு கால பூஜை என்றதுமே பலருக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால் துர்க்கையை பூஜிக்க ராகு காலமே மிகச்சிறந்த நேரமென்பது சித்தர்கள் கண்ட வழி.

    மாபெரும் பிரபஞ்ச சக்தியே துர்க்கை வடிவில் விளங்குகிறது. ராகு என்பதும், கேது என்பதும்கூட மிகச்சக்தி வாய்ந்த அம்சங்கள்தான். கிரகண காலங்களில் சூரியனையும், சந்திரனையும் இவை பிடிப்பதை அறிவோம்.

    இவ்வாறு கிரகண சமயங்களில் மட்டுமின்றி, ஒவ்வொரு கிழமையும், அந்த கிழமைக்குரிய கிரகத்தை குறிப்பிட்ட சில காலம் ராகுவும், கேதுவும் பிடிக்கின்றன. இப்படி பிடிக்கும் காலங்களே தினந்தோறும் ராகு காலம் என்னும் எமகண்டம் என்றும் நிர்ணயிக்கப்படுகின்றன.

    சக்தி வாய்ந்த ராகு, மகாசக்தியான துர்க்கையைப் பூஜித்து பலன் அடைந்ததாக நமது புராணங்களில் சான்றுள்ளது. எனவே ராகு காலத்தில் நாமும் துர்க்கையை வழிபட அதற்கு கைமேல் பலன் கிட்டும்.

    சக்தியில் நல்ல சக்தி, தீயசக்தி என்ற பேதம் இல்லை. எப்படி பயன்படுத்தப்படுகிறதோ, அதைப் பொறுத்தே சக்தியானது நல்ல சக்தியாகவோ, தீய சக்தியாகவோ பரிணாமிக்கிறது.

    ஆகவேதான் ஒவ்வொரு நாளும் மகா சக்தியான துர்க்கையை அந்த நாளுக்குரிய கிரகத்தை ராகு பீடிக்கும் நேரமான ராகு காலத்தில் பூஜை செய்வோமானால் அந்த பூஜைக்கு மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையை விட, அதிக அளவு செயல்வேகம் இருக்கும்.

    மற்ற நாட்களை விட, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜைக்கு உடனடி பலன் கிடைப்பதை சித்தர்களும் உபாசகர்களும் அனுபவப்பூர்வமாக கண்டறிந்து உள்ளனர். ஏனெனில், செவ்வாய்க்கிழமைக்குரிய அங்காரகன், துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு பலன் அடைந்தவனாவான்.

    செவ்வாய்க்கிழமைக்கு மங்கள வாரம் என்பது ஒரு பெயராகும். மங்களகரமான மங்கள வாரத்தில் மஞ்சள் நிறப்பூக்களான தங்கஅரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகிய மலர்களை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிற வாழைப்பழம், பலாச்சுளை, மாம்பழம், மஞ்சள் வண்ண வெண்பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்துக்கும் பயன்படுத்தி துர்க்கையை பூஜிக்க வேண்டும்.

    பூஜையின்போது சொல்வதற்கு `ஸ்ரீதுர்க்கா சந்திர கலாஸ்துதி' என்ற தோத்திரமாலை அனைவருக்கும் உதவக்கூடியது.

    தமிழில் `துர்க்காஷ்டகம்' ராகு கால துர்க்காஷ்டகம், `துக்க நிவாரண அஷ்டகம்', ரோக நிவாரண அஷ்டகம் ஆகியவை ஏற்றவையாக இருக்கும். தீபத்திலோ, கடத்திலோ, சித்திரத்திலோ, யந்திரத்திலோ அல்லது இதயத்திலோ துர்க்கையை வைத்து பூஜிக்கலாம்.

    நவக்கிரகங்களில் மிக வலிமை பொருந்திய ராகு பகவான், மங்கள வார ராகு காலத்தில் துர்க்கையை பூஜித்து, மகிழ்ச்சியான முகத்துடனும், நிறைந்த தனத்துடனும் விளங்குவதால்தான் மங்கள வார ராகு காலத்தில் துர்க்கையைப் பூஜை செய்ய வேண்டுமென்று சித்தர்கள் சொல்கிறார்கள்.

    குறிப்பாக ராகு காலப் பிரீத்தி, செவ்வாய் தோஷ நிவர்த்தி, விவாகப் பிராப்தி, பீடைகள் விலகுதல், பகைகள் நீங்குதல், காரிய சித்தி ஆகிய நோக்கங்களுக்காக இப்பூஜை மேற்கொள்வது நல்லது.

    ராகு காலத்தில் திருக்கோயில்களுக்கு சென்று அங்குள்ள துர்க்காதேவியை வழிபடுவது சிறப்பு. நல்ல மஞ்சள் நிறத்துடன் கூடிய எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி இரு கிண்ணங்களாளகவும் எதிர்பபுறம் மடக்கி குழியாக்கி அவற்றை திரி விளக்குகளாக பயன்படுத்த வேண்டும்.

    சுத்தமான நல்லெண்ணை, நெய், தேங்காய் எண்ணை ஆகியவற்றைத்தான் தீபத்திற்கு பயன்படுத்த வேண்டும் ஆயுள் பலத்துக்காக செய்யப்படும் பூஜையின்போது வேண்டுமானால் இலுப்பை எண்ணையைப் பயன்படுத்தலாம்.

    ராகு காலத்தில் துர்க்கை சந்நிதியில் சுவாசினியை (முதிய சுமங்கலி பெண்களை) நமஸ்கரிக்கின்றவர்கள், எல்லா நலன்களையும் பெறுவார்கள். அங்கு சுவாசினிகளுக்கு தாம்பூலமம், தட்சிணையும் வழங்குகிறவர்கள் துர்க்கையின் அருளுக்குப் பாத்திரமாவார்கள்.

    துர்க்கை சந்நிதியில் கன்னிப் பெண்களுக்கு கால்களில் நலங்கிட்டு, கைகளில் வளையலிட்டு, பூச்சூட்டி, புத்தாடை வழங்கிய பூஜிப்பவர்கள் மற்றவர்களால் பூஜிக்க தகுந்த வாழ்க்கையை அடைவார்கள்.

    தில்லை அம்பலவாணர் (நடராஜர் சன்னதி)

    வடகிழக்கில் தெற்கு நோக்கி வெள்ளித்தேர் மற்றும் வாகன மண்டபம் அருகில் அறங்காவலர் அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

    அடுத்து, நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் நடராஜர் அபிஷேகம் திருவாதிரை உற்சவம்- மாணிக்கவாசகர் விழா சிறப்பு சொற்பொழிவுடன் திருவாசகம் ஓதப்பெற்று நடைபெற்று வருகிறது.

    • 61-வது ஆண்டு துர்கா பூஜை விழாவை விமர்சையாக கொண்டாடினர்.
    • துர்கா பூஜை விழாவை பெங்கால் இன மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    நீலகிரி குன்னூர் இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் துர்கா பூஜை விழாவை பெங்கால் இன மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பெங்கால் இன மக்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு வளாகத்தில் 61-வது ஆண்டு துர்கா பூஜை விழாவை விமர்சையாக கொண்டாடினர். இதில் இயற்கை சார்ந்த பொருட்களும் ஆர்கானிக் வண்ணத்திலும் விநாயகர், லட்சுமி, துர்கா, சரஸ்வதி, முருகர் சிலைகள் பிரம்மாண்டமாக வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது.வடமாநில மக்களான பெங்கால் இன மக்கள் தங்களது பாரம்பரிய வழிபாடுகளுடன் பூஜைகளை நடத்தி வழிபட்டனர். மேலும் சுமங்கலி பூஜையில், அம்மனுக்கு செந்தூரம் திலகமிட்டு, பூஜைகளை, மகளிரே நடத்தி வழிபட்டனர் தொடர்ந்து சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, காட்டேரி நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன. இதில் வட மாநில பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கலந்து கொண்டனர்.

    ×