search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dosham"

    புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதன் அவசியத்தை வேதங்களும், புராணங்களும் வலியுறுத்துகின்றன. பாவம், தோஷம் போக்கும் சில தீர்த்தங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    தீர்த்தம் என்பதே புனிதமானது என்பது அனைவரின் நம்பிக்கை. அதனால் தான் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதை மக்கள் பெரிதும் ஆவலுடன் செய்கின்றனர். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதன் அவசியத்தை வேதங்களும், புராணங்களும் வலியுறுத்துகின்றன. நம் நாட்டில் ஏராளமான புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானதாக கும்பகோணம் மகாமக தீர்த்தம் இருக்கிறது. அதே போல முக்கியத்துவம் வாய்ந்த சில தீர்த்தங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    சர்வ தீர்த்தம்

    காஞ்சீபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில், காஞ்சீ புரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகில் இருக்கிறது ‘சர்வ தீர்த்தம்’. அம்பிகை மணலால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அம்பிகையின் மன உறுதியை சோதிக்க நினைத்த சிவபெருமான், அனைத்து நதிகளையும் காஞ்சியில் வெள்ளமாகப் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளப் பெருக்கைக் கண்டு அச்சம் கொண்ட அம்பிகை, லிங்கத் திருமேனியைக் காக்கும் பொருட்டு அதனை ஆரத் தழுவிக் கொண்டாள். அதன் மூலம் அன்னைக்கு, ஈசனின் பரிபூரண அருள் கிடைத்தது.

    ஆனால் நதிகள் வருத்தம் அடைந்தன. சிவனின் ஆணைக்கு இணங்கவே, நதிகள் பெருக்கெடுத்து வந்தன. எனினும் அன்னையை சோதித்த தங்களுடைய செயல் உகந்தது அல்ல எனக் கருதி விமோசனம் பெற முற்பட்டன. அதன்படி காஞ்சீபுரம் தலத்திலேயே சர்வ தீர்த்தங்களும் இறைவனைச் சரணடைந்து, இறைவனை ‘தீர்த்தேஸ்வரர்’ ஆக வழிபட்டன. அவற்றின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், ‘‘நீங்கள் எல்லோரும் இங்கேயே சர்வதீர்த்தம் என்ற பெயருடன் திகழ்வீர்கள். உங்களில் நீராடி தர்ப்பணம், தானம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி நிறைவில் முக்தியும் பெறுவர்’’ என்று அருள்புரிந்தார்.

    வேத தீர்த்தம்

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் இருக்கிறது. இங்குள்ள தீர்த்தம் ‘வேத தீர்த்தம் ஆகும். இதற்கு ‘மணிகர்ணிகை தீர்த்தம்’ என்ற பெயரும் உண்டு. நான்கு வேதங்களும் ஆரண்யங்களாக இந்தத் தலத்தில் தவம் இருந்த காரணத்தினால், இறைவனுக்கு ‘வேதாரண்யேஸ்வரர்’ என்றும், தீர்த்தத்திற்கு ‘வேத தீர்த்தம்’ என்றும் பெயர் வந்தது.

    ராமபிரான் ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, வேத தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால், பல்லாயிரம் வருடங்கள் தவம், தானம் செய்த பலனைப் பெறலாம் என்பது நம்பிக்கை. இங்கே நீராடுவது, மகா புண்ணியம் வாய்ந்த சேது சமுத்திரத்தில் நீராடியதற்குச் சமம் என்கிறார்கள்.

    கல்யாண தீர்த்தம்

    திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் கல்யாண தீர்த்தம் இருக்கிறது. கயிலையில் சிவபெருமானின் திருக்கல்யாணம் நடைபெற்ற சமயம், முப்பத்து முக்கோடி தேவர்களும், உலக மக்களும் வட பகுதிக்கு சென்றனர். இதனால் வடபகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்துவிட்டது. சிவபெருமானின் ஆணைப்படி, அகத்திய மாமுனிவர் தென்பகுதிக்கு வந்து பூமியின் பாரத்தை சமநிலைக்குக் கொண்டுவந்தார்.

    கயிலையில் இருந்து புறப்பட்டபோது அகத்தியர் கேட்டுக்கொண்டபடியே, இந்தத் தலத்தில் இறைவன் அகத்தியருக்கு அம்மையப்பராக கல்யாணக் கோலத்தில் திருக்காட்சி தந்தார். அகத்தியருக்கு ஈசன் திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலமாதலால், இங்குள்ள தீர்த்தம் ‘கல்யாண தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் தடைப்பட்டு வரும் திருமணம் நல்லபடியாக நடந்தேறும் என்கிறார்கள். மூலிகைகள் நிறைந்த பொதிகைமலையில் தோன்றும் தாமிரபரணி, முதலில் பூமியைத் தொடும் இடம்தான் பாபநாசம் கல்யாண தீர்த்தம். இங்கு நீராடுவதால் உள்ளத் தூய்மையுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

    நாழிக்கிணறு

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் அமைந்திருக்கிறது, ‘நாழிக்கிணறு’ தீர்த்தம். திருச்செந்தூர் திருத்தலத்தில் தான் முருகப்பெருமான், சூரபதுமனோடு போர் புரிந்து, அவனை சம்ஹாரம் செய்தார். போர் நிறைவு பெற்று விட்டது. கடுமையாக போர் புரிந்ததன் காரணமாக, முருகப்பெருமானின் படை வீரர்கள் அனைவரும் மிகவும் களைப்புற்று காணப்பட்டனர். அவர்களின் நீர் தாகத்தை தணிக்க திருவுள்ளம் கொண்ட முருகப்பெருமான், தன்னுடைய வேலினால் ஏற்படுத்திய தீர்த்தமே ‘நாழிக்கிணறு.’ அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போன்றது இந்த தீர்த்தம். இந்த தீர்த்தத்தில் எந்த காலத்திலும் நீர் வற்றியதே இல்லை. இன்னும் ஒரு சிறப்பு இந்த தீர்த்தத்திற்கு இருக்கிறது. அதாவது கடலுக்கு மிக அருகில் அமைந்திருக்கும் இந்த தீர்த்தம், உவர்ப்பு தன்மை சிறிதும் இன்றி இனிப்பு சுவையுடன் திகழ்கிறது.



    ஆதி தீர்த்தம்

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அமைந்திருக்கும் பொற்றாமரைக் குளம் தான் ‘ஆதி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், இந்தக் குளத்தில் இருந்து பொன் மலர்களைப் பறித்து சொக்கநாத பெருமானை வழிபாடு செய்தனர். அதன் காரணமாகவே இந்தத் தீர்த்தக் குளம் ‘பொற்றா மரைக் குளம்’ என்று பெயர் பெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய தீர்த்தம் என்பதால் ‘ஆதி தீர்த்தம்’ என்று அழைக்கப்பட்டது. முக்தி வேண்டி தவம் இருந்த நாரைக்கு முக்தி அருளியதால், பொற்றாமரைக் குளத்துக்கு ‘ஞான தீர்த்தம்’, ‘முக்தி தீர்த்தம்’ போன்ற பெயர்களும் உண்டு.

    ஞானதீர்த்தம்

    கோயம்புத்தூர் மாவட்டம் சூலூருக்கு அருகில் தென்சேரி என்னும் செஞ்சேரி பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மந்திரகிரி முருகன் ஆலயத்தில் உள்ள தீர்த்தம், ‘ஞான தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சுவாமிமலையில் முருகன் தந்தையான ஈசனுக்கு உபதேசம் செய்தது நமக்குத் தெரியும். ஆனால் செஞ்சேரி திருத்தலம் ஈசனிடம், முருகப்பெருமான் உபதேசம் பெற்ற தலமாகும்.

    மாயாஜாலங்களில் வல்லவனான சூரபதுமனை அழிப்பதற்காக, சத்ருசம்ஹார மந்திரத்தை சிவபெருமானிடம் உபதேசம் பெற விரும்பினார் முருகப்பெருமான். தவம் இயற்ற உரிய இடம் தேடி பூமிக்கு வந்தபோது, நான்கு வேதங்களுக்கு நிகரான கடம்ப வனமும், கங்கைக்கு நிகரான ஞானச் சுனையும் அமைந்த தென்சேரி மலையைத் தேர்ந்தெடுத்து தவம் புரிந்தார். இங்கு அவருக்கு மந்திர உபதேசத்தை ஈசன் வழங்கினார். இங்குள்ள ஞான தீர்த்தத்தில் நீராடினால் வாழ்வில் வரும் இன்னல்கள் நீங்கும்.

    பிரம்ம தீர்த்தம்

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் சட்டநாதர் கோவில் இருக்கிறது. இங்கு பிரதான தீர்த்தமாக விளங்குவது ‘பிரம்ம தீர்த்தம்.’

    முன்னொரு காலத்தில் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்ததும், போட்டியில் தாழம்பூவை பிரம்மதேவன் பொய்சாட்சி கூற வைத்ததும் நாம் அறிந்ததே. பொய் கூறிய பாவம் நீங்க பிரம்மதேவன், இந்தத் தலத்துக்கு வந்து தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி அதில் நீராடி இறைவனை வழிபட்டார். பிரம்மனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தமே ‘பிரம்ம தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

    சட்டநாதர் ஆலயத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை, பிரம்மதேவரே நடத்துவதாக ஐதீகம். இங்கு சித்திரை மாதம் நடைபெறும் தீர்த்தவாரித் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும், தோஷங்களும் நீங்கும்.

    சங்கு தீர்த்தம்


    காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் இருக்கிறது, வேதகிரீஸ்வரர் ஆலயம். இங்கு இருக்கும் தீர்த்தம் ‘சங்கு தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. என்றும் பதினாறு வயதாக இருக்க ஈசனால் ஆசீர்வதிக்கப்பட்டவர் மார்க்கண்டேயன். இவர் சிவாலயங்கள் தோறும் சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருக்கழுக்குன்றம் வந்தபோது, இறைவனுக்கு நீர் கொண்டு அபிஷேகம் செய்ய பாத்திரம் எதுவும் இல்லை. அப்போது இறைவனின் அருளால் தீர்த்த குளத்தில் வலம்புரி சங்கு ஒன்று தோன்றியது. அந்த சங்கில் நீர் எடுத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன்காரணமாகவே இந்தத் தீர்த்தம் ‘சங்கு தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

    இன்றைக்கும் இந்த தீர்த்தத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு வலம்புரி சங்கு தோன்றுவதாக நம்பப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வந்தால் சகல பாவங்களும் நீங்கும்.
    பசுவை துன்புறுத்தி அதன் இறப்புக்கு காரணமாக இருந்தால் கோஹத்தி தோஷம் உண்டாகும் என சாஸ்திரம் கூறுகிறது. இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் உள்ளது.
    பசுவுக்கு உணவிடாமல் இருப்பது, அடிப்பது, பசுவின் இறப்புக்கு காரணமாக இருப்பது ஆகியவற்றால் ஒருவருக்கு கோஹத்தி தோஷம் உண்டாகும் என சாஸ்திரம் கூறுகிறது.

    இதனால் பாவத்தை செய்தவர் மட்டுமல்லாமல் அவரது சந்ததியும் தொடந்து பாதிக்கும். இதற்கு பிராயச்சித்தமான மஹார்வணம் என்னும் நூலில் ஒரு பரிகாரம் கூறப்பட்டுள்ளது.

    பசு ஒன்றை வாங்கி ஒரு மாதம் வரை வீட்டில் வைத்து தினமும் பசுவுக்கு நன்கு உணவளித்து பராமரிக்க வேண்டும். அதை சுதந்திரமாக நடக்க விட வேண்டும். காலையிலும், மாலையிலும் அந்த பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கி கோ பூஜை செய்ய வேண்டும். ஒரு மாதம் கழித்த பின்னர் பசுவை தானம் அளித்து விட வேண்டும். இதனால் பசு தோஷம் நீங்கும். துன்பங்களும் படிப்படியாக குறையும்.

    பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை பற்றி பார்க்கலாம்.
    பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை பற்றி பார்க்கலாம்

    அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகும்.

    செவ்வாய் தோஷம்

    ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.

    ராகு - கேது தோஷம்

    லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

    மாங்கல்ய தோஷம்

    இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8&ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8&ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.

    சூரிய தோஷம்

    ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.

    களத்திர தோஷம்

    களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.

    மேற்சொன்ன அமைப்புள்ள தோஷ ஜாதகங்களுடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மேலும் சில எளிய பரிகாரங்கள் செய்வதால் தடைகள், இடையூறுகள் விலகும்.
    கலியுகத்தில் மணலிலே சிவலிங்கம் செய்து வழிபடுவது தான் உயர்ந்த வழிபாடு. அனைத்து பேறுகளையும் கேட்கின்ற வரங்களையும் உடனே வழங்க கூடிய வழிபாடாகும்.
    சிவ ஆகமங்களில் சிவபெருமானே அன்னை பார்வதிக்கு சொன்ன, அதி உன்னத வழிபாடு தான் ‘பார்த்திப லிங்க’ வழிபாடு.

    “கலியுகத்தில் மணலிலே சிவலிங்கம் செய்து வழிபடுவது தான் உயர்ந்த வழிபாடு. அனைத்து பேறுகளையும் கேட்கின்ற வரங்களையும் உடனே வழங்க கூடிய வழிபாடு” என பரமேஸ்வரனே அன்னை பார்வதிக்கு சொல்கிறார். இந்த வழிபாட்டை செய்து தான் அன்னை பார்வதி தேவி முத்தி பேறு அடைகிறார்.

    ராமபிரானும் கூட, இலங்கை மன்னன் ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீக்குவதற்காக, ராமேஸ்வரத்தில் மண் லிங்கம் செய்து வழிபட்டு தான் தோஷங்களைப் போக்கிக் கொண்டார்.

    இதேபோல் சூரபத்மனை அழித்த போது, முருகப்பெருமானுக்கும் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. அப்போது திருச்செந்தூரில் கடற்கரையில் பஞ்ச லிங்கங்களை மணலிலே பிடித்து வழிபாடு செய்து தோஷங்கள் நீங்க பெற்றார், முருகப்பெருமான்.

    இதே வழிபாட்டை செய்து தான் இலங்கையை வளம் மிக்க நாடாக மாற்றினான், ராவணேஸ்வரன். ஆம் ‘திருகோணமலையில், மணலிலே 1,008 சிவலிங்கங்கள் செய்து வழிபட்டான் ராவணன். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு அவன் செய்த அந்த பூஜையின் காரணமாக, இலங்கையை மாபெரும் சிவ பூமியாக, சொர்ண பூமியாக மாற்றினான்’ என மிக பழமையான கிரந்த நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

    இந்த பூஜையை செய்பவர்கள் மாபெரும் குபேர சம்பத்துகளையும், அனைத்து வல்லமைகளையும் பெருவார்கள் என்பது உறுதி.
    செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஜோதிடரிம் ஜாதகத்தைக் காண்பித்து, உரிய பரிகாரங்களைச் செய்து பார்த்த பிறகும் பலன் கிடைக்காமல் போகலாம். சிலர் " நான் பரிகாரம் செய்தேன் சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன" என்று கூறுவார்கள். சிலபேர், 'நானும் நிறையப் பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள்.

    இதற்கு பரிகாரத்தை தவறாக செய்வது கூட காரணமாக இருக்கலாம். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு.

    சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.

    செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.

    ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. திருமணத்திற்கு பிறகு பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் முதல் குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

    இதை பின்பற்றினால் பரிகாரம் நல்ல பலனளிக்கும்.
    நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற் பலன்கள் பெற்றும் வாழலாம்.
    மேலும்,ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.

    1. சூரியன் : கச கசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.

    2. சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.

    3. செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.

    4. புதன் : மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.

    5. வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

    6. சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

    7. சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

    8. ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

    9. கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
    ஒருவரது ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் என்வென்ன பிரச்சனைகள் வரும், அதற்கு என்வென்ன பரிகாரங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.






    ராகு தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம்.



    ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தைவழி சொத்துக்கள் கைகூடி வரும். இல்லாவிட்டால் இழுபறியாகும். திருமணத் தடை, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படுவது, எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இடமாற்றம், வீண்பழி சுமத்தல், குடும்பப் பிரிவு என பொதுவான பிரச்னைகள் வரும். உடல் நலக் கோளாறுகள் மாறி மாறி ஏற்படும்.

    ராகு தோஷத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி?

    ராகுவுக்கு தனியாக ஓரைகாலம் இல்லை. அதனால், சனிக்கிழமை சூரியோதயத்தில் 5 அகல் தீபம் ஏற்றி வையுங்கள். தினமும் துர்கை காயத்ரி கூறுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்கையை உதிரி 5 எலுமிச்சம்பழம் கொடுத்து, 5 அகலில் நெய்தீபம் ஏற்றி கும்பிடுங்கள். (எலுமிச்சை தீபம் கூடாது). 3 பழம் திரும்பி வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

    அடிக்கடி பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள துர்கையையும், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று ராகுவையும், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று நாகரையும் தரிசித்துவிட்டு வாருங்கள். முடிந்தால் பக்தர்களுக்கு உளுந்துசாதம் தானமாக கொடுங்கள். பசுவுக்கு கடலைப்பொட்டு அல்லது அகத்திக்கீரை தீவனம் வாங்கிக் கொடுங்கள்.

    அடிக்கடி அருகிலுள்ள கோயிலில் துர்கை, ராகு சன்னதியில் வழிபாடு செய்யுங்கள். வசதியானவர்கள் கோமேதகக் கல் பதித்த டாலர் அல்லது கோமேதக கணபதியை வணங்குங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்தால் ராகுதோஷ பாதிப்பு குறைந்து வாழ்க்கை ரம்மியமாகும்.
    திருமணம் தடைபடி முக்கிய காரணமாக இருப்பது செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும்.
    திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது.

    இவை காரணமாக திருமணம் தாமதமானால் அதற்கான பரிகாங்களை செய்தால் மட்டுமே திருமணம் எந்த தடையும் இன்றி நடைபெறும். திருமணம் தடைபடி முக்கிய காரணமாக இருப்பது செவ்வாய் தோஷம். ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும்.

    அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும். செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.

    வாலாஜாபேட்டையில் நவக்கிரககோட்டை எனும் புகழ்பெற்ற விநாயகர் தலம் உள்ளது. இந்த விநாயகர் பக்தர்களுக்கு ஏற்படும் ராகு-கேது தோஷங்களை போக்குபவராக வழிபடப்படுகிறார்.
    சென்னை- வேலூர் நெடுஞ்சாலையில் 110 கி.மீ. தொலைவில் வாலாஜாபேட்டையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் நவக்கிரககோட்டை எனும் புகழ்பெற்ற விநாயகர் தலம் உள்ளது.

    மகாமண்டபத்தில் விநாயகரின் 32 திருவுருவங்களை கொண்ட இத்தலத்தில் பிரதான மூர்த்தியாக ஸ்ரீநவசித்தி விநாயகர் விளங்குகிறார். மூலவருடன் இரண்டு விநாயகர்கள் சுயம்புவாக உள்ளனர். நடுவில் சிவலிங்க வடிவில் உள்ள மூர்த்தத்தின் நடுப்பாகத்தில் நாகம் படமெடுத்த நிலையிலும் திகழ்கிறது. சிந்தையில் தெளிவும், மனக்குழப்ப நிவர்த்தியும், ராகு கேது தோஷ நிவர்த்தியும் கிட்டும் தலமாக திகழ்கிறது.

    பாபநாசம் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலின் வடபுறம் உள்ள விநாயகரின் தலைக்குமேல் ஐந்து தலைநாகம் குடைபிடித்துள்ளது. மேலும் அவரின் இடுப்பு மற்றும் பத்து கரங்களிலும் பாம்புகள் காட்சியளிக்கின்றன. இந்த விநாயகர் பக்தர்களுக்கு ஏற்படும் ராகு-கேது தோஷங்களை போக்குபவராக வழிபடப்படுகிறார்.

    சிவனுக்கும், அம்பிகைக்கும் நடுவில் இருக்கும் விநாயகரை சோமகணபதி என்று அழைக்கிறார்கள். அந்த கணபதியை தரிசித்த அடுத்த நொடியே நாம் செய்த பாவங்கள் அனைத்தும் மறையும் என்பது ஐதீகம். சோமகணபதியை காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள தேனம்பாக்கம் சிவாலயத்தில் தரிசிக்கலாம்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் பழங்காமூரில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நீண்டகாலமாக உள்ள புற்று ஒன்று விநாயகரின் வடிவமாகவே மாறி உள்ளது. இந்த விநாயகர் பக்தர்களின் பாவங்களைப் போக்குகிறார்.

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பவழத்தால் செய்யப்பட்ட விநாயகரை செவ்வாய்க்கிழமை தோறும் தவறாமல் வணங்க வேண்டும். பவழத்தால் விநாயகர் செய்ய வசதியில்லாதவர்ள் செம்மண் அல்லது குங்குமத்தில் விநாயகர் செய்தும் வழிபடலாம்.

    பில்லி சூனியம் போன்ற கொடுமையான தீய சக்திகள் விலகுவதற்கு அரசும், வேம்பும் பின்னியபடி உள்ள மரத்தடியில் இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.
    திருநெல்வேலியில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் காரையாரில் உள்ள அருவிக்கரை விநாயகருக்கு சித்தி விநாயகர் என்று பெயர். இடதுபுறம் கங்கையும், வலதுபுறம் பார்வதிதேவியும் உள்ளனர். இவ்விநாயகரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்குமாம்.

    மதுரை மீனாட்சி திருக்கோவில் வளாகத்தில் திறந்தவெளியில் வன்னிமரத்தடியில் விநாயகர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இவரை சுற்றி வன்னி, வேம்பு, மந்தாரை, அத்தி, நெல்லி, அரசு, வில்வம், பவளமல்லி, நாவல் ஆகிய ஒன்பது தல விருட்சங்கள் உள்ளன. அவற்றை ஒரேவேளையில் ஒன்றாக தரிசிப்பதால் நவக்கிரக தோஷம் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பர்.

    ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த இடையன்குளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் எதிரே உள்ள மூஞ்சூருக்கு வெந்நீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
    கணவன்-மனைவி பிரச்சினை இருப்பவர்கள் மேல்மலையனூர் தலத்துக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன்-மனைவி இடையே மீண்டும் நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.
    சில கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டை விரிசலாகி விவாகரத்து வரை கூட சென்று விடுவதுண்டு. இத்தகைய நிலையில் இருப்பவர்கள் மேல்மலையனூர் தலத்துக்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் கணவன்-மனைவி இடையே மீண்டும் நல்லுறவு ஏற்படும் என்பது ஐதீகமாகும்.
    சிவனை பிரிந்த பார்வதி இத்தலத்தில்தான் கடும் சோதனைகளுக்குப் பிறகு ஈசனுடன் ஒன்று சேர முடிந்தது. எனவே பெண்கள் இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் கணவனை விட்டு பிரியாத வரத்தைப் பெறுவார்கள்.

    சில பெண்களுக்கு அடிக்கடி கணவரால் நிம்மதி இல்லாத நிலை ஏற்படலாம். கணவர் மது குடித்து விட்டு வந்து அடிக்கக் கூடும். இல்லையெனில் கணவர் வேலைக்கு செல்லாமல், குடும்பத்தை கவனிக்காமல் இருக்கக்கூடும்.

    இத்தகைய பாதிப்புடைய பெண்கள் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கையாகும்.
    மேல் மலையனூர் தலத்தில் உள் ள பெரியாயீ அம்மனுக்கு சிவப்பு கலரில் சேலை எடுத்து நேர்த்திக் கடனாக பெண்கள் செலுத்துவதுண்டு. சில பெண்கள் சிவப்பு, மஞ்சள் கலந்த சேலை எடுத்து சாத்துவார்கள். இந்த நேர்த்திக் கடனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

    ஜாதகத்திலோ ராகு - கேதுகளுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்திருந்தால் அது கால சர்ப்பதோஷமாகும். இந்த தோஷ நிவர்த்திக்கான பரிகாரத்தை பார்க்கலாம்.
    ஒரு ஆணின் ஜாதகத்திலோ, பெண்ணின் ஜாதகத்திலோ ராகு - கேதுகளுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்திருந்தால் அது கால சர்ப்பதோஷமாகும்.

    இப்படிப்பட்ட சர்ப்பதோஷம் அமைந்த ஜாதகங்கள் சந்தோஷத்தை சந்திப்பது அரிதாக இருக்கும். அதுபோல் ஜாதகம் அமைந்தவர்களுக்கு திருமணத்தடை ஏற்படலாம். பிள்ளை பிறக்கவும் தடை ஏற்பட வழி உண்டு.

    அவர்கள் தங்கள் ஜாதகத்தில் ராகு - கேது இருக்கும் இடத்தை நன்கு ஆராய்ந்து அது யார் காலில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குரிய நட்புக்கிரகத்தின் நாளில் அதிகாலையில் நீராடி, புளிப்பு கலந்த பதார்த்தத்தையும், அன்னம், உளுந்து கலந்த பலகாரத்தையும் தயாரித்து தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் படைத்து, மந்தாரை மலரை ராகு படத்திற்குச் சூட்டி வழிபட்டு விரதம் இருப்பது நல்லது.

    அதே போல் கேதுவிற்கு புளிப்பு சேர்ந்த சாதம், கொள்ளு கலந்த பலகாரம் படைத்து ஐந்துவித மலர்களை மாலைகளாக்கி கேது படத்திற்கு சூட்டி வழிபட வேண்டும். விரதம் இருந்து நாக கவசத்தை நாள்தோறும் அல்லது வெள்ளிதோறும் அல்லது பூஜிக்கும் தினத்தில் பாடி வழிபட்டால் சர்ப்பகிரகங்கள் சந்தோஷமான வாழ்வை வழங்கும்.

    அருகில் உள்ள நாகத்துடன் கூடிய விநாயகப் பெருமானையும் வழிபட்டு, பின்னோக்கி ராகுவுக்கு நான்கு சுற்றும், கேதுவுக்கு ஏழு சுற்றும் வர வேண்டும். ஸ்ரீ விக்னேஸ்வரா என்றாலே சர்ப்பதோஷம் நீங்கி விடும்.

    கால சர்ப்ப தோஷத்தை போக்கும் சிறப்பான விநாயகர் தலங்களில் தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுக மங்கலம் தலமும் ஒன்றாகும். ஆயிரம் என்கிற எண்ணோடு சம்பந்தப்பட்ட விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்று. இவர் 2300 ஆண்டுகளுக்கு முன் வந்தவர் என்றும் தமிழ்நாட்டின் முதல் பிள்ளையார் என்றும் கூறப்படுகிறது. பாண்டிய அரசனின் யாகத்திற்காக இந்த விநாயகர் நர்மதை நதிக்கரையிலிருந்து வரழைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டவர் என்றும் ஓர் வரலாறு உள்ளது.

    ஒருசமயம் ஒரு பணக்காரர் 1008 பேர்களுக்கு அன்னம்பாலித்தபோது எண்ணிக்கையில் ஒருவர் குறைந்தது. என்ன செய்வதென்று யோசித்த அவர் விநாயகரிடம் வேண்டிக் கொண்டார். உடனே விநாயகர் இளைஞனாக இத்தலத்தில் வந்த சலனத்தைப் போக்கி ஆயிரத்தெண் பிள்ளையார் ஆனார்.

    கேது கிரகத்தின் அதிஷ்டான தேவதையாக விளங்குவதால் ராகு கேது பரிகாரம் மற்றும் காலசர்ப்ப தோஷ நிவர்த்தித் தலம். அபிஷேகம் மற்றும் சதுர் தேங்காய் 108, 1008 விடப்பட்டு வழிப்படப்படுகிறது. மேலும் கொட்டாரக்குறிச்சி கிராமத்தில் வீராசாமி, உச்சி மாகாளியம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் ஆலயங்கள் உள்ளன.

    திருச்செந்தூரில் அரங்கேறிய சுப்பிரமணிய புஜங்த்தை ஆதிசங்கரர் பாடியதற்கு முன் இந்த ஊரின் விநாயகர் மேல் கணேச பஞ்சரத்தினம் பாடியதாகத் தகவல். ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க கணேச பஞ்ச ரத்தினம் பாடியது இவரை வைத்துத் தான் என்றும் நம்பப்படுகிறது.
    சகட தோஷம் சர்க்கரை நோய் போன்றது வந்து விட்டால் போகாது. வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுவது போல சகட தோஷத்திற்கு தினசரி பரிகாரம் செய்ய வேண்டும்.
    சகட தோஷம் கொண்டு பிறந்தவன் மந்திரியாக ஆனால் கூட பத்து நாளில் பதவியை பறிகொடுத்து விடுவான் என்று சொல்வார்கள். விறகு வெட்டி கஷ்டப்படுகிறானே என்று ஒரு தொழிலாளிக்கு சந்தன காட்டையே எழுதி வைத்தானாம் அரசன். ஆனால் அந்த தொழிலாளி சந்தன காட்டின் மகத்துவத்தை அறியாமல் சந்தன மரத்தை வெட்டி கட்டைகளை எரித்து கரித்துண்டுகளை விற்று பிழைப்பு நடத்தினானாம். இப்படிப்பட்ட அப்பாவிகளை கூட சகட தோஷத்தின் சகபாடிகள் என்று கூறலாம்.

    ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் குரு நின்ற ராசிக்கு ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இராசிகளில் சந்திரன் இருந்தாலும் அந்த ஜாதகத்தை சகட தோஷ ஜாதகம் என்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தோம் என்றால் பலவிதத்திலும் அவர்கள் சோதனை மிகுந்தவர்களாகவே இருப்பதை காணலாம்.

    சகட தோஷம் சர்க்கரை நோய் போன்றது வந்து விட்டால் போகாது. வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுவது போல சகட தோஷத்திற்கு தினசரி பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பூரண விடுதலை உண்டு. தினசரி பரிகாரம் என்றவுடன் அதை செய்ய முடியுமா? முடியாதா? என்று கவலைப்படவேண்டாம். மிக சுலபமாக செய்து விடலாம்.

    ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினசரி காலையில் நூற்றி எட்டுமுறை சொல்லி வாருங்கள். அமாவாசை தோறும் பசுவிற்கு பச்சரிசி தவிடு, மற்றும் அகத்திக்கீரை கொடுத்து வாருங்கள். சகட தோஷம் உங்களை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்ளும். துன்பத்தை விலக்கி இன்பமாக வாழலாம்.
    ×