search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dosham"

    ராகு, கேது ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் ‘சர்ப்ப தோஷம்’ என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சர்ப்ப தோஷம் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களை பாம்புகள் என்று சொல்கிறார்கள். ராகு, கேது ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் ‘சர்ப்ப தோஷம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

    சர்ப்ப தோஷம் பலவித வியாதிகளை உண்டாக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்காது. ராகுத் தலமாக நாகேஸ்வரம் உள்ளது. கேது தலங்களாக ஸ்ரீ காளகஸ்தி, பெரும் பள்ளம் ஆகியவை உள்ளன. இரண்டு கிரகங்களையும் சேர்த்து வழிபடும் சிறப்பான தலமாக திருப்பாம்புரம் தலம் திகழ்கிறது.

    தினமும் ஒன்றரை மணி நேரம் ராகு காலமாகும். இந்த நேரத்தில் நல்ல காரியங்களை மக்கள் செய்வது இல்லை. பாம்பின் தலையை ராகு என்றும் உடலைக் கேது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    ராகுவின் வரலாறும் கேதுவின் வரலாறும் கிட்டத்தட்ட ஒரே வித தன்மையை கொண்டவை. ஸ்ரீராகு ஸம்ஹதா தேவியின் மகனாவார். தேவரும், அசுரரும் பார்கடலில் அமிர்தம் வேண்டி மந்தர மலையை மத்தாக்கி வாசுகியைக் கயிறாக்கிக் கடைந்தனர்.

    பார் கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. கடைசியாகத் தன்வந்திரி பாற்கடலில் இருந்து எழுந்தார். அவரது கரங்களில் அமிர்த கலசம் இருந்தது.
    அதை அசுரர்கள் பிடுங்கிக் கொண்டனர். இந்தச் சமயத்தில் மகாவிஷ்ணு மோகினி வடிவத்தில் வந்தார்.

    அவரைக் கண்ட அசுரர்கள் மயங்கி, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அமிர்தத்தைப் பங்கிட்டுத் தருமாறு வேண்டினர். மோகினி தேவர்களுக்கு அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொடுத்து கொண்டு வந்தாள். அப்போது ராகுவும் கேதுவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் தேவர்களின் உருவம் கொண்டு அமர்ந்து அமிர்தத்தை உண்ண ஆரம்பித்தனர். அவர்கள் சாப்பிட்ட விதத்தைப் பார்த்த சூரியன், சந்திரன் ஆகியோர் அவர்கள் அசுரர்கள் என்பதை மோகினியிடம் கூறினார்கள். உடனே மோகினி கரண்டியினால் ராகுவின் தலையை வெட்டினாள்.

    உடனே ராகுவின் தலை ஆகாயம் சென்றது. தலையற்ற முண்டம் தரையில் வீழ்ந்தது. இதனால் அசுரர்கள் கொதித்தெழுந்தனர். தேவர்- அசுரர் போராட்டம் மிகவும் பயங்கரமாக நடந்தது. அதில் ராகுவின் தலை சிவசிரஸில் இருக்கும் சந்திரனைக் கவ்வியது. அப்போது சந்திரனின் தலையில் உள்ள அமிர் தத்தை ராகுவின் தலை பருகியதால் ராகுவிற்குப் பல தலைகள் உண்டாயிற்று.

    ராகுவின் பல தலைகளைக் கண்டு தேவர்கள் பயந்தனர். சிவபெருமான் ராகுவின் தலைகளை மாலையாக்கிக் கழுத்தில் அணிந்து கொண்டார். ராகுவின் தலைகள் அமைதி அடைந்தன. தேவர்களின் பயம் நீங்கியது.

    ஈசனருளால் ராகு கிரகமாய் இருக்கும் தன்மையைப் பெற்றான். ராகுவை உபாசிக்க ராகுவினால் உண்டாகும் பீடைகள் போகும்.

    ராகுவைப்போலவே கேதுவும் அமிர்தம் பட்ட காரணத்தால் உயிர் பெற்று பல வால்களைப் பெற்றான். சிவனது அருளால் கிரகமாகும் பேற்றைப் பெற்றான்.

    கேதுவைத் திருப்திப்படுத்த மொச்சைப் பயிரைத் தானமாக அளிக்கலாம். இவரை உபாசிப்பவன் கீழான ஆச னத்தில் அமரக் கூடாது. கருகிப் போன ஆகாரங் களை உண்ணக் கூடாது. இவரை உபாசிப்பதால் அந்தஸ்து உயரும்.

    இவர் உதித்தது, ஆடி மாதம் சுக்கில பட்சம் ஆகும். ருத்திரனுடைய நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமையாகும். இந்த விசேஷ நாட்களில் இவரை வழிபடுவது சிறப்புடையதாகும்.

    வானில் இருக்கும் ராகுவும், கேதுவும் பின்னோக்கி நகர்வதாக அறிவியலார் கூறுகின்றனர். ஆகையால் இந்த இரு கிரகங்களையும் சாயாகிரகங்கள் என்று அழைப்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளன என்பதைப் பொறுத்தே முடிவு செய்கிறார்கள். எனவே ராகு-கேது இடத்தைப் பொறுத்தே ஒருவரது வாழ்வில் மேன்மை உண்டாகும். ஆகையால் ஒவ்வொருவரது வாழ்விலும் ராகு-கேது முக்கியத்துவம் பெறுகிறது.
    ராகு கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    ராகு காலத்தில் துர்கா வழிபாடு செய்வது ராகு ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்வது மிகவும் உத்தமமாக கருதப்படுகிறது. ராகு காலத்தில் பாம்புப் புற்றிக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.

    கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.

    நாகத் துவாஜாய வித்மஹே
    பத்ம ஹஸ்தாய தீமஹே
    தந்நோ ராகு ப்ரசோதயாத்

    இந்த மந்திரத்தைத் தினசரி 9 முறை கூறி வந்தால் ராகுவினால் ஏற்படும் அசுப பலன்கள் குறையும்.

    ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகும். அதை நெய்வேத்தியம் செய்து தானம் செய்யலாம். ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந்தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரம், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாகசிலைக்குப் பால்விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க்கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும்.

    பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக் கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். திருமணம் விரைவில் நடக்கவும் இதுபோல் வழிபாடு செய்து வர வேண்டும்.

    ராகு பகவானுக்கு உளுந்து பிரதான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராகுவுக்கு வைத்து வலம் வந்து பூஜித்தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும்.

    ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி ஆகும். எல்லா சிவாலயங்களிலும் வடக்குப் பார்த்த நிலையில் துர்க்கை அம்மன் இருக்கும். அந்த அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பழத்தோலில் விளக்கேற்றி பூஜித்து வர சகலதோஷங்களும் தீரும்.

    தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களைப் படித்து வர வேண்டும்.

    தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

    துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும். நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சினையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

    ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லிவர வேண்டும்.

    கேது பகவானுக்கு பரிகாரமாக ராமேஸ்வரம் சென்று சாந்தி செய்வது உத்தமம். காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோவில் சென்று வழிபாடு செய்வது உத்தமம்.



    வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது உத்தம பலன்கள் உண்டாகும். கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர். முதற்கடவுளான விநாயகப் பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

    நாகர் தலத்தில் நாகவழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு, நாகருக்கு பால் ஊற்றி, மரத்தைச் சுற்றிவரும் பெண்கள் தங்கள் மணாளனுடன் ஒருமித்து வாழவும், மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும், அருளையும் பெறுகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.

    கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும்.

    கேதுவுக்கு உரிய அதிதேவதையான விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்து வர வேண்டும். தினமும் அரசு, வேம்பு, விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம்.

    கேது இருக்கும் கிராகாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது, விநாயகருக்காகவது அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்குச் செய்கின்ற பரிகாரம் கேதுவுக்கும் பொருந்தும் என்ற கருத்துண்டு.

    மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமாளைத் துளசியினால் அர்ச்சித்து வரலாம்.

    கேதுவுக்கு உரிய தியானம் காயத்ரி, அஷ்டோத்திர மந்திரங்களைத் தினமும் ஒருமுறை கூறி வரலாம்.
    பசுவுக்கு நாம் அகத்திக்கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.
    பசுவுக்கு நாம் அகத்திக்கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை, களவு செய்வதால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.

    பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும். பசுவை பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.

    பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும்.பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது.



    இது மிக புண்ணியமான காலமாகும். பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள். ‘மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது. பசு வசிக்கும் இடத்தில், அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.

    மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு, எமன், எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

    உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடத்தில் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது. கோமாதாவை காப்போம், நேசிப்போம், பூஜிப்போம்.

    சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப்போகலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.
    கோவிலுக்கு செல்பவர்கள் அங்குள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டால், அந்த நவ நாயகர்களின் அருள் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப்போகலாம். சிலர் கஷ்டங்களை அனுபவிக்கலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம். நவக்கிரகங்களை பற்றியும், அவற்றின் தோஷங்கள் விலகுவதற்கான எளிய பரிகாரங்களையும் இங்கே பார்க்கலாம்.

    சூரியன்: காசியப முனிவரின் மகன். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை நட்பு கிரகங்கள். புதன் சமமான கிரகம், சுக்ரன், சனி, ராகு-கேது ஆகியவை பகை கிரகமாகும். அதி தேவதை அக்னி, உச்ச ராசி மேஷம், நீச்ச ராசி துலாம். சூரியனுக்கான நட்சத்திரங்கள் உத்திரம், கிருத்திகை, உத்திராடம். தசாபுத்தி காலம் 6 ஆண்டுகள். நைவேத்தியம் சர்க்கரை பொங்கல்.

    சூரியன் லக்னத்தில் இருந்து 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் உச்சம் பெற்று நின்றால், அதிக அளவில் சுப பலனைத் தருவார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் உயர்வான இடத்தில் இருந்தால், அந்த நபர் ஆரோக்கியம், ஐஸ்வரியம், சந்தான பாக்கியம், நீண்ட ஆயுள், அரசு வேலைவாய்ப்பு, அரசியல் யோகம் பெறுவார். அதே நேரம் நீச்சம் பெற்றிருந்தால் ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, உஷ்ண ரோகம், எலும்பு பிரச்சினை வரலாம்.

    சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க, ஞாயிற்றுக்கிழமையில் கோதுமை, செம்பு பாத்திரங்களை தானம் செய்யலாம். பார்வை இழந்தவர்களுக்கு உணவளிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை கோதுமை மீது 10 தீபம் ஏற்றி வழிபட சூரியனின் அருளைப் பெறலாம்.

    சந்திரன் : பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர். வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர். கடக ராசிக்கு அதிபதி. சூரியன், புதன் இருவரும் சந்திரனின் நட்பு கிரகங்கள். செவ்வாய், குரு, சுக்ரன் ஆகியவை சமமான கிரகங்கள். ராகுவும் கேதுவும் பகை கிரகங்கள். சந்திரனின் நட்சத்திரங்கள் ரோகிணி, அஸ்தம், சித்திரை. சந்திரனின் தசா புத்தி காலம்- 10 ஆண்டுகள். இவரது அதி தேவதை நீர் ஆகும். உச்ச ராசி ரிஷபம், நீச்ச ராசி விருச்சிகம்.

    சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் 1, 2, 3, 4, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் நின்று உச்சம் பெற்றால், நல்ல சுப பலன்களை அதிக அளவில் கொடுப்பார். தாய் பாசம், குடும்ப பாசம், விவசாய விருத்தி, கடல் வணிகம், கல்வி ஸ்தாபனம், பால் மற்றும் உணவு வணிகள் சிறப்பான லாபத்தை அளிக்கும். அதே நேரம் 6, 8, 10, 12 ஆகிய இடங்களில் தேய்பிறை சந்திரனாக நின்று நீச்சம் பெற்றால், ரத்த சோகை, நீர் சம்பந்தமான வியாதி, தொண்டை பிரச்சினை, விரும்பிய வாழ்க்கை அமைய கால தாமதம் ஏற்படும்.

    சந்திரனின் தோஷம் நீங்க, திங்கட்கிழமை அம்பாள் சன்னிதி முன்பு நெல் மீது 11 தீபம் ஏற்றுங்கள். திங்கட்கிழமைகளில் அசைவத்தை தவிர்ப்பது, பவுர்ணமி விரதம் இருப்பது நல்லது. பச்சரிசியை தானம் தரலாம்.

    செவ்வாய்: இவர் வீரபத்திரர் அம்சம். சுப்பிரமணியரை தெய்வமாக கொண்ட இவர், பாவ பலனை கொடுக்கும் குரூரர். இவருக்கு சூரியன், சந்திரன், குரு நட்பு கிரகங்களாகும். சுக்ரனும், சனியும் சமமான கிரகங்கள். புதன், ராகு-கேது பகை கிரகங்கள். செவ்வாய் கிரகத்தின் நட்சத்திரங்கள் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம். இவரது தசாபுத்தி காலம் 7 ஆண்டுகள். இவருக்கு உச்ச ராசி மகரம், நீச்ச ராசி கடகம் ஆகும்.

    செவ்வாய் கிரகமானது ஒருவரது ஜாதகத்தில், 3, 6, 11 ஆகிய இடங்களில் இருப்பது 100 சதவீத சுப பலன்களைத் தரும். செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருந்தால் தலைமை பதவி, ரியல் எஸ்டேட், சகோதர உதவி, எதிரியை வெல்லும் துணிச்சல் வந்து சேரும். செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தால், சிறைவாசம், உடலில் ஆறாத காயம், திருமண தடை, பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே இருப்பது, பித்த நோய் உண்டாகக்கூடும். செவ்வாய்க்கிழமைகளில் வெண் பொங்கல் நைவேத்தியமாக படைத்து வைத்து, செண்பக மலர் தூவி 108 முறை செவ்வாய் கிரக துதியை படியுங்கள்.

    புதன்: இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. இவருக்கு சூரியனும் சுக்ரனும் நட்பு கிரகங்கள், செவ்வாய், குரு, சனி, ராகு-கேது சமமான கிரகங்கள், சந்திரன் மட்டும் பகை கிரகமாகும். புதன் கிரகத்தின் நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவையாகும். புதனின் தசாபுத்தி காலம் 17 ஆண்டு. புதனின் அதி தேவதை திருமால்.

    புதன் கிரகமானது ஒருவரது ஜாதகத்தில் 2, 4, 6, 8, 10, 11 ஆகிய இடங்களில் உச்சம் பெற்றிருந்தால், அந்த நபர் 100 சதவீதம் சிறப்பான பலனைப் பெறுவது உறுதி. புதன் நல்ல இடத்தில் இருந்தால் கல்வியில் வெற்றியும், இசை, கவிதை, ஞானம் ஏற்படும். பூர்வீக சொத்து சேரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். நீதி துறையிலும், கணிதத் துறையிலும் மேதையாகும் யோகமுண்டு. புதன் நீச்சம் பெற்றிருந்தால், மந்த புத்தி, குடும்ப பிரச்சினை, தொழில் தடை, மனக்குழப்பம், தோல் வியாதி வந்து சேரும். புதன் கிரக தோஷங்கள் அகல, மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யுங்கள். புதன்கிழமை புதன் ஓரையில் புதன் காயத்ரி மந்திரம் சொல்லி வருவது நல்லது. மதுரை மீனாட்சி வழிபாடு நன்மை தரும். புதன்கிழமை அசைவத்தை தவிர்த்து, துளசி பொடி சாதம் சாப்பிடவும்.

    குரு: இவர். பூரண சுப கிரகம் என்பதால், இவரது பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். சூரியன், சந்திரன், செவ்வாய் இவருக்கு நட்பு கிரகங்கள். சனி, ராகு-கேது சமமான கிரகங்கள். புதனும் சுக்ரனும் பகை கிரகங்கள். குருவின் நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. இவரது தசாபுத்தி காலம் 16 ஆண்டுகள் ஆகும். குருவின் அதி தேவதை பிரம்மன், உச்ச ராசி கடகம், நீச்ச ராசி மகரம்.

    குரு, லக்னத்தில் இருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய இடத்தில் நின்றால் அதிக சுப பலன்களைத் தருவார். அவரே உச்சம் பெற்றிருந்தால் நல்ல ஞானம், படிப்பில் உயர்வு, அரசுப் பணி, பணப்புழக்கம், நல்ல மண வாழ்க்கை, குழந்தை பாக்கியம், நிரந்தர பணி, உடல் ஆரோக்கியம், ஜோதிட ஞானம், லட்சுமி கடாச்சம் ஏற்படும். அதே வேளையில் நீச்சம் பெற்றிருந்தால் மறதி, பக்தி குறைவு, மூளைக்காய்ச்சல், புத்திர பாக்கியம் தடை, உடல் சோர்வு, பணப்பிரச்சினை, குடும்ப பிரச்சினை தோன்றும். வீட்டில் பொன் பொருள் தங்காது.

    குருவின் தோஷம் விலக, வியாழக்கிழமை அசைவத்தை தவிர்த்து, 16 வியாழக்கிழமை இரவு கொண்டை கடலையை மஞ்சள் துணியில் முடிந்து, தலையணை அடியில் வைத்து படுத்து, 17-வது வாரம் ஓடும் நீரில் விடவேண்டும்.

    சுக்ரன்: அசுர குருவான இவரும் சுப கிரகம் தான். புதன், சனி, ராகு-கேது ஆகியவை இவருக்கு நட்பு கிரகங்கள். செவ்வாய், குரு போன்றவை சமமான கிரகங்கள். சூரியன், சந்திரன் இருவரும் பகை கிரகங்கள். சுக்ரனின் நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம் ஆகும். சுக்ரனின் தசாபுத்தி காலம் 20 வருடங்கள். இவரது அதிதேவதை லட்சுமி, உச்ச ராசி மீனம், நீச்ச ராசி கன்னி.

    சுக்ரன் ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 2, 3, 4, 5, 8, 9, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலன் களைத் தருவார். நீச்சம் பெற்றிருந்தால் உயிர் அணுக்கள் குறைபாடு, திருமண கால தாமதம், அவப்பெயர், சிறை தண்டனை, உறவில் பிரிவு, தொழில் நஷ்டம் உண்டாகும்.

    சுக்ரனின் தோஷம் விலக, வெள்ளிக்கிழமை அன்று சுக்ர ஓரையில் ராஜராஜேஸ்வரியை வழிபடுவதோடு விரதம் இருப்பது சிறந்தது. வெள்ளை நிற ஆடை, மொச்சை தானம் வழங்கலாம்.

    சனி: இவர் சூரியனுடைய குமாரர். இவருக்கு புதன், சுக்ரன், ராகு-கேது ஆகியோர் நட்பு கிரகங்கள். குரு சமமான கிரகம், சூரியன், சந்திரன், செவ்வாய் மூவரும் பகை கிரகங்கள். சனியின் நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி. சனியின் தசா புத்தி காலம் 19 ஆண்டுகள். சனியின் அதி தேவதை எமதர்மன், உச்ச ராசி துலாம், நீச்ச ராசி மேஷம்.

    சனி கிரகமானது ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து, 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலனைத் தருவார். உச்சம் பெற்றிருந்தால் தீர்க்க ஆயுள், விவசாயம், இரும்பு, எண்ணெய் தொழிலில் யோகம், கல்வி ஞானம், பொன், பொருள் சேர்க்கை, வாகன யோகம், வெளிநாட்டு யோகம், தலைமைப் பதவி, சுயதொழில் யோகம் தருவார். அதுவே நீச்சம் பெற்றிருந்தால், தீராத பிணி, நரம்பு சோர்வு, மனைவி, குழந்தை வழியில் அவப்பெயர், தொழிலில் பின்னடைவு, வழக்குகள் உண்டாகும்.

    சனியின் தோஷம் விலக, அண்டங் காக்கைக்கு எள் கலந்த சாதம் வைக்க வேண்டும். பாதாள சனியையும், குடும்பத்துடன் உள்ள சனியையும் ஒரே நாளில் வழிபட வேண்டும்.

    ராகு: இவர் அசுரத் தலையும், நாக உடலும் கொண்டவர். மிகுந்த வீரம் உடையவர். ‘கருநாகம்’ என்று அழைக்கப்படுபவர். இவருக்கு சனியும், சுக்ரனும் நட்பு கிரகங்கள். புதன், குரு சமமான கிரகங்கள். சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் பகை கிரகங்கள். ராகுவின் நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவையாகும். இவரது தசாபுத்தி காலம் 18 ஆண்டுகள். அதிதேவதை காளி மற்றும் துர்க்கை, இவரது உச்ச ராசி விருச்சிகம், நீச்ச ராசி ரிஷபம் ஆகும்.

    ராகு ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 3, 6, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலனைத் தருவார். உச்சம் பெற்றிருந்தால் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். மறைமுக வருமானம், குடும்ப ஒன்றுமை, வெளிநாட்டு பயணம், நல்ல மண வாழ்க்கை, பூர்வீச சொத்து, அரசியல் ராஜ்ஜிய சுகம் போன்றவை கிடைக்கும். அதே நேரம் நீச்சம் பெற்றிருந்தால் பாம்பு தீண்டுதல், சிறைவாசம், பொருள் களவு போகுதல், குடிப்பழக்கம், தோல் சார்ந்த நோய்கள், மனக்குழப்பம் தோன்றும்.

    ராகு தோஷம் விலக, இரண்டு சர்ப்பம் சேர்ந்து உள்ள கருங்கல் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும். ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்யலாம்.

    கேது: இவர் நாகத் தலையும், அசுர உடலும் கொண்டவர். சிகி என்றும், செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர். இவருக்கு சனியும், சுக்ரனும் நட்பு கிரகங்கள். புதனும், குருவும் சமமான கிரகங்கள். சூரியன், செவ்வாய், சந்திரன் பகை கிரகங்கள். கேதுவுக்குரிய நட்சத்திரங்கள் அசுவினி, மகம், மூலம் ஆகும். கேதுவின் தசாபுத்தி காலம் 7 ஆண்டுகள். கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தன். உச்ச ராசி விருச்சிகம், நீச்ச ராசி ரிஷபம்.

    கேது ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 3, 6, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலன்களைத் தருவார். உச்சம் பெற்றிருந்தால் ஞான மோட்சம் ஏற்படும். ஆன்மிகம், ஆலய சேவை, மருத்துவ சேவை, பொன் பொருள், பூமி, வாகன யோகம் கிடைக்கும். குடும்பம் மகிழ்ச்சியுறும். ஆசிரம சேவை செய்வீர்கள். நீச்சம் பெற்றால் எதிரியால் பயம், தீய பழக்கம் ஏற்படும். கலைத் துறையில் பின்னடைவு, குடும்ப பிரிவு உண்டாகும்.

    கேது தோஷம் விலக, செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் கதம்ப சாதம் வைத்தும், கதம்ப பூ வைத்தும், கேது கவசம் படிப்பது நல்லது. மேலும் குதிரைக்கு எமகண்ட நேரத்தில் கொள்ளு தானம் செய்வதன் மூலம் நினைத்த எல்லா சுபகாரியம் தடையின்றி நடக்கும்.

    நாடி ஜோதிடர் பாஸ்கர்
    ஆற்ற முடியாத அழுகையால், ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தை சாபமாக மாறும் போது, அது எப்பேர்பட்ட வலிமையான மனிதனையும் உருத் தெரியாமல் அழித்து விடும்.
    ஒரு மனிதன் இந்த பூமியில் பிறப்பதற்கு, அவன் முற்பிறவியிலே செய்த ‘பாவமும், புண்ணியமும்’ தான் காரணம். அதனால் நாம் வாழும் பூமிக்கு ‘தர்ம, கர்ம பூமி’ என்று பெயர்.

    ஒரு சிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து விடுகிறார்கள். ஒரு சிலர் நினைத்ததை திட்டமிட்டு செய்கிறார்கள். ஒரு சிலரோ எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு ஆவலுடன் செய்தாலும் நினைத்த விஷயத்தை அடைய முடிவதே இல்லை. இதற்கு எல்லாம் தனது பிறந்த நேரமே காரணம் என்று நடைமுறையிலே சிலர் பேச நாம் கேட்டிருக்கலாம்.

    ஜாதகத்திலே 9-வது இடம் தான் ‘உயர்வானதை அடைவது’, அதாவது நாம் இந்த உலகத்தில் வந்து நம் ஆசைகளை அடைகின்ற பகுதி. அந்த 9-வது இடத்திற்கு ஒருவரது ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார்; எண்ணியதையும் அடைந்து விடுகிறார்.

    ஒன்பதிலே மோசமான கிரகங்கள் அல்லது பாவ கிரகங்களின் பார்வை இருக்கும்படி பிறந்தவர், தடுமாறுகிறார்; போராடுகிறார்; இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார். ‘எந்த பாவமும் செய்யாத எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்பது பலருடைய ஆதங்கம். அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

    ‘தோஷம்' என்றால் ‘குற்றம் அல்லது குறை’ எனப்படும். ஒருவர் அறிந்தோ, அறியாமலோ செய்யும் வினையின் எதிர்வினை தான் தோஷம். இந்த தோஷம் 2 காரணங்களால் உருவாகுகிறது. அதாவது கோபம், சாபம்.

    ‘கோபம்’ என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு. இயலாமை, பலவீனத்தின் உச்சம். இதையே வேறு விதமாக சொன்னால் ‘கோபம்’ என்பது பாதிக்கப்பட்டவர் அதற்கு காரணமானவர் மீது வெளிப்படுத்தும் உணர்வு.

    ‘சாபம்’ என்பது அகங்காரத்தினால் ஒருவர் செய்யும் தீமையினால் பாதிக்கப்பட்டவர், வேதனையுடன் கண்ணீருடன் வெளிப்படுத்தும் எதிர்மறை வார்த்தைகள்.

    கோபம் நான்கு வகையாக இருக்கிறது.

    1. ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்து விடும்.
    2. 2 நாழிகை, அதாவது 48 மணி நேரம் நீடிக்கும்.
    3. கோபம் - ஒரு நாள் முழுவதும் நீடிக்கும்.
    4. கோபம், அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்து, பகையை உள்ளுக்குள் வளர்த்து விடும்.

    கோபத்தில் இருந்து அவதூறு, வன்செயல், தீய எண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடுசொற்கள், தாக்குதல் போன்ற 8 தீய குணங்கள் தோன்றுகின்றன.

    ஜோதிட சாஸ்திரத்தில் கோபத்தின் வெளிப்பாடாக நாம் கூறும் கிரகங்கள் சூரியன், செவ்வாய், சனி. 1-ல் சூரியன் சுட்டெரிக்கும் கோபம். நியாயமான செயலுக்கு மட்டுமே வரும். நம் ஆத்ம காரன் சூரிய பகவானே. 1-ல் செவ்வாய் அடக்க முடியாத ஆணவம் நிறைந்த கோபம். நம் உடலின் ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பவர் செவ்வாய். 1-ல் சனி இருப்பது நியாயத்தை நிலை நாட்டும் கோபம். நம் கர்ம காரகன் சனி பகவான். அதனால் தான் அவர் துலாத்தில் உச்சம் அடைகிறார்.



    சனி, செவ்வாய் இருவரும் ராகு-கேது, மாந்தியுடன் ஏற்படும் இணைவு சாபத்தை ஏற்படுத்துகிறது. திரிகோணாதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோபமும், சாபமும், ஜாதகருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மறைவு ஸ்தானாதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோபமும் சாபமும் ஜாதகரால் மீள முடியாத தாக்கத்தை உருவாக்கும்.

    எத்தகைய தோஷமானாலும் விமோசனம் உண்டா? இல்லையா? என்பதே கேள்வி. நியாயமான சாபம் பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு, மீள முடியாத விளைவை தருகிறது. ‘ஆறுவது சினம்’ என்ற அவ்வை பாட்டியின் கூற்றிற்கு ஏற்ப, கோபத்தினால் ஏற்பட்ட தோஷத்திற்கு வடிகால் உண்டு. சாபத்தினால் ஏற்பட்ட தோஷத்திற்கு விமோசனம் கிடைப்பது எளிதல்ல.

    கண்ணுக்கு தெரிந்த, தெரியாத பல்வேறு தோஷங்கள் இருந்தாலும், பிரதானமாக ஜாதகத்திலும், பிரசன்னத்திலும் 21 வகையான தோஷங்கள் கண்டறியப்படுகின்றன.

    காற்றை மாசு படுத்துதல், சுத்தமான காற்றைத் தரும் விருட்சங்களை அழித்தல், மழை நீர் பூமியில் புக முடியாமல் கழிவு பொருட்களை பயன்படுத்தி பூமியை மாசு படுத்துவது, நீர் நிலைகளை அழித்து குடியிருப்பு பகுதியாக்குவது போன்ற இயற்கை பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு இயற்கை நிச்சயம் பதிலடி கொடுக்கும்.

    புனித யாத்திரை செல்லும் பயணிகள் புண்ணிய புனித தீர்த்தங்களில் தங்கள் உடைகளை விடுவது, சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி நீர்நிலையை அசுத்தம் செய்வதும் நிச்சயம் கர்மவினையைத் தரும். வினைப்பயனை குறைக்க தவறான வழிமுறையை பயன்படுத்தினால், அது கூடுதல் வினையை சேர்த்த பலனையே கொடுக்கும்.

    பசுவதை செய்பவர்களுக்கு ‘கோ சாபம்’ ஏற்படும். பறவைகளை கூண்டில் அடைத்து வேடிக்கை பார்ப்பவர் களுக்கு ‘பட்சி சாபம்’ ஏற்படும். சக மனிதனின் கோப சாபத்தை விட, இயற்கை விடும் சாபத்திற்கும், ஐந்தறிவு ஜீவன் விடும் சாபத்திற்கும் வலிமை அதிகம்.

    ஒரு உயிர் தாயின் கருவறையில் உருவாகி, இடுகாடு செல்வது வரை அனைத்து நிகழ்வுகளும் பிரபஞ்சத்தின் விருப்பப்படியே நடக்கிறது என்பது உலகறிந்த உண்மை. இந்த உலகம் பிரபஞ்சத்தால் கட்டுப்படுத்தப்படுவதால் தான் இறந்தவருக்கு உயிர் கொடுக்க முடியவில்லை.

    சக மனிதருக்குள் உருவாகும் கோபமும் சாபமுமே மறு பிறவி. கோபமும் சாபமும் இல்லை என்றால் மறுபிறவி என்பதே என்ற ஒன்று கிடையாது. கோபத்தையும் சாபத்தையும் உருவாக்கியவனும், உருவாகச் செய்தவனும் பிறவி எடுத்து தங்கள் கோபத்தையும், சாபத்தையும் தீர்த்துக் கொள்ளும் போதே அந்த தோஷம் நிவர்த்தி ஆகிறது.

    எவ்வளவு பூஜை செய்தாலும், வரம் பெற்றாலும், மாந்த்ரீகம் செய்தாலும் ஒரு நல்லவரை அழிக்க முடியாது. ஆனால் ஆற்ற முடியாத அழுகையால், ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தை சாபமாக மாறும் போது, அது எப்பேர்பட்ட வலிமையான மனிதனையும் உருத் தெரியாமல் அழித்து விடும்.

    - பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி.
    மனிதருக்கு உண்டாகும் தோஷங்களை நிவர்த்தி செய்ய வேண்டி தாயத்து மந்திரித்து பூஜித்து நோயாளிகள், குழந்தைகள், பெண்கள், பேய் பிசாசு பூதம் பிடித்தவர்களுக்கு அணிவித்து சிகிச்சை செய்வதே குளிசமாடல் (அ) குளிசங்கட்டல் எனப்படும்.
    மனிதருக்கு உண்டாகும் தோஷங்களை நிவர்த்தி செய்ய வேண்டி தாயத்து மந்திரித்து பூஜித்து நோயாளிகள், குழந்தைகள், பெண்கள், பேய் பிசாசு பூதம் பிடித்தவர்கள் ஆகியோருக்கு அணிவித்து சிகிச்சை செய்வதே குளிசமாடல் (அ) குளிசங்கட்டல் எனப்படும்.

    * இதில் பரிகாரம் என்பது செம்பு வெள்ளி தங்கம் முதலிய உலோக தகடுகளில் சக்கரம் அல்லது கோடுகளைக் கீறி அந்த கட்டங்களுக்குள் மந்திர எண்எழுத்துக்களை பதித்து சிறு குழாயினுள் செலுத்தி பாதிப்புற்றவர்களின் உடலில் கை, கால்கள், இடுப்பு, புஜம், கழுத்து முதலிய இடங்களில் கட்டுவதாகும். இதனால் பேய், பிசாசு, பில்லி, சூனியம், கிரகதோஷம், நோய் இவற்றினால் வந்த பாதிப்பு நீங்கும், மற்றும் வசியம் உட்பட அஷ்ட கர்மங்கள் சித்தியும் ஆகும், தீயசக்தி விலகி செல்வசெழிப்பு உண்டாகும்.



    * நஞ்சு முறிவிற்காக சில தெய்வீக மூலிகை வேர்களை தாயத்தில் அடைத்து மாந்திரீகம் செய்வோர், விஷக்கடி வைத்தியர், பாம்பாட்டிகள் ஆகியோர் தமது உடலில் அணிந்து கொள்வதாகும், இது தங்களை பாதுகாத்து கொள்வதற்கும், கடி விஷங்களை இறக்குவதற்கும் பயன்படுத்துவர்.

    * கொடிக்குளிசம் என்பது சிறு குழந்தைகளுக்கு தொப்புள் கொடியை உலர்த்தி தாயத்தில் அடைத்து இடுப்பில் கட்டிவைத்தல், குழந்தைக்கு உடல்நிலை கோளாறோ அல்லது மாந்திரீக கோளாறோ ஏற்படும்போது அந்த தொப்புள் கொடியை பாலில் உரைத்து ஊட்டவோ அல்லது புகை போட்டு நாசியில் இழுக்க செய்யவோ பயன்படுத்துவர்.

    * காப்புகட்டுதல் என்பது தெய்வீக மூலிகைகளின் சாப நிவர்த்திக்காகவும், அவற்றின் முழுபயனை பெறுவதற்காகவும் மந்திர சாஸ்திரப்படி அவற்றிற்கு குறிப்பிட்ட நேரத்தில் கட்டுவதாகும்.
    திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் இல்லாதோர் திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள மூலவரை வழிபட்டால் அவர்களுக்கு விரைந்து திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் அமையும்.
    கும்பகோணத்திலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் திருவீழிமிழலை என்னும் ஊரில் அமைந்துள்ள இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயத்தில் காட்சியளித்து வரும்  சிவபெருமானை தரிசனம் செய்தால், கண்ணில் ஏற்பட்ட நோய்கள் குணமாகிவிடும், திருமணம் வாய்ப்பு தள்ளிச் செல்கிறவர்களுக்கு, திருமணம் விரைந்து நிகழும், புத்திர பாக்கியம் அமையப்பெறாதவர்களுக்கு குழந்தைபேறு அமையும், பொருளாதார மற்றும் சொத்துப் பிரச்சனைகள் நீங்கும் என்பது ஹிந்துக்களின் தொன்மையான நம்பிக்கையாகத் திகழ்ந்து வருகிறது.

    இத்திருத்தல மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற திருநாமத்தை கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும், இந்த  ஆலயத்தில் மட்டுமே சிவ பெருமான், பார்வதி அம்மையுடன் மானுட ரூபம் கொண்டு, திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இந்த திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

    திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் இல்லாதோர் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள மூலவரை நேரில் வந்து வழிபட்டால் அவர்களுக்கு விரைந்து திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் அமையும் என்பது ஹிந்துக்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் நம்பிக்கையாகத் திகழ்ந்து வருகிறது.

    கண்ணில் ஏதேனும் உபாதைகள் இருந்தால், இந்த ஈஸ்வரனின் தரிசனத்தால் அவை சீராகிவிடும் என்று கூறப்படுகிறது. மஹா விஷ்ணுவின் கண்ணை சிவபெருமானின் பாதத்தில் இன்றும் காணலாம்.

    இந்த கோவிலில் வழிபாடு செய்ய செல்பவர்கள் விளாம்பழமும் தாமரை மலரும் வாங்கி செல்வது விசேஷம்.

    கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து திருவீழிமிழலைக்கு செல்ல வேண்டும்.

    நம்முடைய பாரம்பரியத்தில் நாக வழிபாடு மிகவும் பழமையான ஒன்று. நாகங்கள், நாக வழிபாடு, அதன் பலன்கள் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
    நாகராஜாவை வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் அதிகம். நம்முடைய பாரம்பரியத்தில் நாக வழிபாடு மிகவும் பழமையான ஒன்று. நாகங்கள், நாக வழிபாடு, அதன் பலன்கள் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

    இறை அம்சம் கொண்ட நாகங்களில் பல வகைகள் உண்டு. ஆனாலும் ராகுவும், கேதுவுமே வழிபடப்படுகின்றன. நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் இடம்பெற்றுள்ளதே இதற்கு காரணம்.

    திருமணப் பொருத்தம் பார்க்கும் போதும், மற்ற காலக்கட்டங்களில் ஒருவரின் ஜாதகத்தைப் பார்க்கும் போதும் அவரது ஜாதகத்தில் நாக தோஷம் இருக்கிறதா என்பதை பார்ப்பது வழக்கம். நாக தோஷம் இருந்தால் உரிய பரிகாரங்கள் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

    நமது இந்து மத சாஸ்திரங்களில் காமதேனு, பசு மாடு ஆகியவற்றுக்கு அடுத்து முக்கியமான இடம் வகிப்பது நாகங்கள் மட்டுமே. பத்மா, ஐந்து தலைக்கொண்ட பச்சை வண்ண மகாபத்மா, ஆனந்தா, ஆயிரம் தலைக்கொண்ட சேஷநாக் அல்லது ஆதிசேஷன் ஆகிய நாகங்கள் நம்முடைய தர்மத்தில் முக்கியமான இடம் வகிக்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் நாகராஜர் ஆலயமே உள்ளது. அந்தத் திருத்தலத்தில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் பாம்பு உருவத்துடன் உள்ளன. வெளிச் சுவர் மற்றும் நுழைவாயில் கோபுரத்திலும் நாக சிலை அமைந்துள்ளது

    நமது பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் நாக தேவதைகள் வணங்கி பூஜிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பல இடங்களில் பாம்பு புற்றுடன் கூடிய நாகங்கள் அம்மனாக பல ஆலயங்களில் வழிபடப்படுகின்றன. அவற்றில் சேலம் மாரியம்மன், திருவக்கரை வக்கிரகாளி போன்றவை முக்கியமானவை.

    சிவாலயங்களில் நாகத்தின் மீதே பாலை ஊற்றி சிவலிங்கத்தின் மீது அதுவழியும் வகையில் பூஜைகள் செய்கின்றனர். இப்படியாக நாகங்கள் பலவிதங்களிலும் பூஜிக்கத் தகுந்தவை.

    புத்திர பாக்கியம் கிடைக்க நாகங்களில் ஆனந்தாவையும், புத்திரி பாக்கியம் கிடைக்க வாசுகியையும், நோய் நிவாரணம் நிவாரணம் பெற கார்கோடனையும் பூஜிக்கலாம். நமது பூர்வ ஜென்ம பாபம் அகல கேஷா, குளுமை வியாதியினால் அவதிப்படுபவர்கள் குளிகை மற்றும் மோட்ஷப்பிராப்தி பெற மகாபத்மாவையும் வணங்கிட வாழ்க்கை நலம் பெறும்.
    ஜாதக ரீதியாக தோஷம் இருந்தால் திருமணம் தடை இருக்கும். பரிகாரம், பிராயச்சித்தம் என அதிக செலவில்லாமல், இதற்கான தீர்வை எளிதில் காணலாம்.
    ஜாதக ரீதியாக தோஷம் இருந்தால் திருமணம் தடை இருக்கும். பரிகாரம், பிராயச்சித்தம் என அதிக செலவில்லாமல், இதற்கான தீர்வை எளிதில் காணலாம். வெள்ளி அல்லது செவ்வாய் கிழமையில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று, தோஷம் நீங்க சில பூஜைகள் செய்யலாம். பூஜைக்கு முன்பு இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.

    தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும்.



    இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமண தடை நீங்கி, நல்ல வரன் அமைந்து மங்களமாக முடியும்.

    மந்திரம் :

    ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
    ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
    ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
    ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
    சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
    சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருத

    ராகு, கேது ஆகிய இரு கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். இந்த தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும், பரிகாரங்களையும் பார்க்கலாம்.
    ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களுமே நாகங்கள். இந்த ராகு, கேது ஆகிய இரு கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளன என்பதை வைத்து அறிந்து கொள்ள முடியும்.

    பாம்பின் தலையை ராகு என்றும் உடலைக் கேது என்றும் குறிப்பிடுகிறார்கள்.வானில் இருக்கும் ராகுவும், கேதுவும் பின்னோக்கி நகர்வதாக அறிவியலார் கூறுகின்றனர். ஆகையால் இவ்விரு கிரகங்களையும் சாயாகிரகங்கள் என்கிறது ஜோதிட நூல்கள். ராகு கேது தோஷங்களால் ஏற்படும் விளைவுகள், பரிகாரங்கள் ஆகியவற்றையும் ராகுவைப் பற்றியும் அறிவோம்.

    சர்ப்ப தோஷம் பலவித வியாதிகளை உண்டாக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்காது. ராகுத் தலமாக நாகேஸ்வரம் உள்ளது. கேது தலங்களாக ஸ்ரீ காளகஸ்தி, பெரும் பள்ளம் ஆகியவை உள்ளன. இரண்டு கிரகங்களையும் வழிபடும் தலம் திருப்பேரை.

    கேதுவைத் திருப்திப்படுத்த மொச்சைப் பயிரைத் தானமாக அளிக்கலாம். இவரை உபாசிப்பவன் கீழான ஆசனத்தில் அமரக் கூடாது. கருகிப் போன ஆகாரங்களை உண்ணக் கூடாது. இவரை உபாசிப்பதால் அந்தஸ்து உயரும்.

    ஆடி மாதம் சுக்கில பட்சத்தில் கேது உதித்தார். ருத்திரனுடைய நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமையாகும். இந்த விசேஷ நாட்களில் கேதுவை வழிபடுவது சிறப்புடையதாகும்.

    ராகு கேது இந்த இரண்டு கிரகங்கள் நம்மை பயமுறுத்துவது அல்ல. உரிய காலகட்டங்களில் முறையான பரிகாரங்களை செய்வதன் மூலம் நற்பலன்களை நிச்சயமாக அடைய முடியும்.
    சனிதிசை, கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி உள்ளவர்கள் திருநறையூர் நாச்சியார் கோவிலில் எட்டு வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்துவந்தால் சிரமங்கள் குறைந்து முன்னேற்றம் அடைவது நிதர்சனமான உண்மை.
    ஆயுட் காரகன் என்று சொல்லப்படும், சனீஸ்வரபகவான் தனது இரண்டு மனைவிகளான மந்தா தேவி, ஜேஸ்டா தேவி இருவரோடும் தனது புதல்வர்களான காலத்தை நிர்ணயிக்கும் குளிகன், ஆயுளை நிர்ணயிக்கும் மாந்தி ஆகியோருடன் குடும்ப சமேதராய் அருள்பாலிக்கும் ஒரே இடம் திருநறையூர். இந்தியா முழுவதுமுள்ள கோயில்களில் இல்லாத சிறப்பாக தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் உள்ள திருநறையூர் நாச்சியார் கோயிலில் மங்களச் சனியாக குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார்.

    ஸ்ரீ ராமபிரானின் பிதாவாகிய தசரத சக்ரவர்த்திக்கும் சனீஸ்வர பகவானுக்கு  நடந்த நிகழ்வைப் பார்ப்போம்.

    சனி ரோஹினி நட்சத்திரத்தில் 12 வருட காலங்கள் வாசம் செய்து வெளியேறினால் ரோஷிணி சங்கடபேதம் என்னும் கடும் பஞ்சம் ஏற்படும். இதை எவராலும் தடுக்க முடியாது என்று சிவன் நாரதரிடம் தெரிவிக்க.. நாரதர் வசிஷ்ட்ட மகரிஷியிடம் கூறுகிறார். வசிஷ்ட மகரிஷி தசரதனிடம் தெரிவிக்கிறார்.

    இதைக் கேட்ட தசரதன் சனி ரோஷிணியை விட்டு கடக்கும் முன் தடுத்து நிறுத்தி போரிட தயாரானார். இந்நிலைக் கண்ட சனீஸ்வர பகவான் தசரதரை நோக்கி  ‘மானிட அரசே! உன் வீர பராக்கிரமத்தை புகழ்கிறேன். அதே நேரத்தில் பூவுலகில் மக்கள் மீது நீ கொண்ட நலனை நினைத்தும் மகிழ்கிறேன். ஆனாலும் என்னால் உங்களுக்கு உதவ இயலாது. எனக்கு வழி விடுங்கள் என்று கூறுகிறார். அப்படியும் விலகாத தசரத சக்ரவர்த்தி, சனீஸ்வர பகவானிடம் உள்ளம் உருக ஸ்லோகத்தை சொல்கிறார்.

    இதைக் கேண்டு மனமிறங்கிய சனிபகவான் சரி.. உங்கள் விருப்பப்படி செய்கிறேன். என்னை திருநறையூரில் வந்து வழிபடுங்கள். நான் உங்களுக்கு மங்கள சனியாக தரிசனம் தந்து யாரும் தர இயலாத இரண்டு வரங்களைத் தருகிறேன் என்றார். தசரதரும் மகிழ்ந்து திருநறையூர் வந்து அங்குள்ள பெரிய குளத்தில் நீராடி சனிபகவானை நினைத்து வணங்கினார்.

    சனிபகவான் குடும்ப சமேதராய் காட்சி தந்து அவர் கூறியபடி இரண்டு வரங்களைத்தருகிறார். முதலாவது வரம் ரோஹிணி சகட பேத காலத்தில் தாம் யாருக்கும் எந்த கஷ்டத்தையும் கொடுப்பதில்லை எனவும், இரண்டாவதாக குடும்ப சமேதராய் உள்ள இவ்வாலயத்திற்கு வந்து என்னை தரிசித்து வழிபடுவோருக்கு மற்ற எட்டு கிரகங்களால் ஏற்படும் தீய பலன்களை நீக்குவேன் என்றும் வரம் அருளுகிறார்.

    இத்திருக்கோயிலில் குடும்ப சமேதராய் எங்கும் காணமுடியாத வகையில் தசர சக்ரவர்த்தி கைதொழ சாந்த சொரூபமாய் காட்சியளிக்கிறார் சனி பகவான். இங்குள்ள சனிபகாவனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறி சனிபகவானின் உண்மையான நிறமான நீலவண்ணத்தைக் காட்டுவது மகா சிறப்பு.

    அதோடு வேறெங்கும் காண முடியாத உற்சவமூர்த்திக்கு திருக்கல்யாணம், சனிப்பெயர்ச்சிக்கு நடைபெற்று திருவீதி உலா வருவது தனிசிறப்பு. சனிதிசையில் உள்ளவர்களும், கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி ஆகிய காலங்களில் உள்ளவர்கள் எட்டு வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்துவந்தால் சிரமங்கள் குறைந்து முன்னேற்றம் அடைவது நிதர்சனமான உண்மை. 
    ×