search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dosha Parihram"

    திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் இல்லாதோர் திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள மூலவரை வழிபட்டால் அவர்களுக்கு விரைந்து திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் அமையும்.
    கும்பகோணத்திலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் திருவீழிமிழலை என்னும் ஊரில் அமைந்துள்ள இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயத்தில் காட்சியளித்து வரும்  சிவபெருமானை தரிசனம் செய்தால், கண்ணில் ஏற்பட்ட நோய்கள் குணமாகிவிடும், திருமணம் வாய்ப்பு தள்ளிச் செல்கிறவர்களுக்கு, திருமணம் விரைந்து நிகழும், புத்திர பாக்கியம் அமையப்பெறாதவர்களுக்கு குழந்தைபேறு அமையும், பொருளாதார மற்றும் சொத்துப் பிரச்சனைகள் நீங்கும் என்பது ஹிந்துக்களின் தொன்மையான நம்பிக்கையாகத் திகழ்ந்து வருகிறது.

    இத்திருத்தல மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற திருநாமத்தை கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும், இந்த  ஆலயத்தில் மட்டுமே சிவ பெருமான், பார்வதி அம்மையுடன் மானுட ரூபம் கொண்டு, திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இந்த திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

    திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் இல்லாதோர் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள மூலவரை நேரில் வந்து வழிபட்டால் அவர்களுக்கு விரைந்து திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் அமையும் என்பது ஹிந்துக்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் நம்பிக்கையாகத் திகழ்ந்து வருகிறது.

    கண்ணில் ஏதேனும் உபாதைகள் இருந்தால், இந்த ஈஸ்வரனின் தரிசனத்தால் அவை சீராகிவிடும் என்று கூறப்படுகிறது. மஹா விஷ்ணுவின் கண்ணை சிவபெருமானின் பாதத்தில் இன்றும் காணலாம்.

    இந்த கோவிலில் வழிபாடு செய்ய செல்பவர்கள் விளாம்பழமும் தாமரை மலரும் வாங்கி செல்வது விசேஷம்.

    கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து திருவீழிமிழலைக்கு செல்ல வேண்டும்.

    வாலாஜாபேட்டையில் நவக்கிரககோட்டை எனும் புகழ்பெற்ற விநாயகர் தலம் உள்ளது. இந்த விநாயகர் பக்தர்களுக்கு ஏற்படும் ராகு-கேது தோஷங்களை போக்குபவராக வழிபடப்படுகிறார்.
    சென்னை- வேலூர் நெடுஞ்சாலையில் 110 கி.மீ. தொலைவில் வாலாஜாபேட்டையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் நவக்கிரககோட்டை எனும் புகழ்பெற்ற விநாயகர் தலம் உள்ளது.

    மகாமண்டபத்தில் விநாயகரின் 32 திருவுருவங்களை கொண்ட இத்தலத்தில் பிரதான மூர்த்தியாக ஸ்ரீநவசித்தி விநாயகர் விளங்குகிறார். மூலவருடன் இரண்டு விநாயகர்கள் சுயம்புவாக உள்ளனர். நடுவில் சிவலிங்க வடிவில் உள்ள மூர்த்தத்தின் நடுப்பாகத்தில் நாகம் படமெடுத்த நிலையிலும் திகழ்கிறது. சிந்தையில் தெளிவும், மனக்குழப்ப நிவர்த்தியும், ராகு கேது தோஷ நிவர்த்தியும் கிட்டும் தலமாக திகழ்கிறது.

    பாபநாசம் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலின் வடபுறம் உள்ள விநாயகரின் தலைக்குமேல் ஐந்து தலைநாகம் குடைபிடித்துள்ளது. மேலும் அவரின் இடுப்பு மற்றும் பத்து கரங்களிலும் பாம்புகள் காட்சியளிக்கின்றன. இந்த விநாயகர் பக்தர்களுக்கு ஏற்படும் ராகு-கேது தோஷங்களை போக்குபவராக வழிபடப்படுகிறார்.

    சிவனுக்கும், அம்பிகைக்கும் நடுவில் இருக்கும் விநாயகரை சோமகணபதி என்று அழைக்கிறார்கள். அந்த கணபதியை தரிசித்த அடுத்த நொடியே நாம் செய்த பாவங்கள் அனைத்தும் மறையும் என்பது ஐதீகம். சோமகணபதியை காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள தேனம்பாக்கம் சிவாலயத்தில் தரிசிக்கலாம்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் பழங்காமூரில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நீண்டகாலமாக உள்ள புற்று ஒன்று விநாயகரின் வடிவமாகவே மாறி உள்ளது. இந்த விநாயகர் பக்தர்களின் பாவங்களைப் போக்குகிறார்.

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பவழத்தால் செய்யப்பட்ட விநாயகரை செவ்வாய்க்கிழமை தோறும் தவறாமல் வணங்க வேண்டும். பவழத்தால் விநாயகர் செய்ய வசதியில்லாதவர்ள் செம்மண் அல்லது குங்குமத்தில் விநாயகர் செய்தும் வழிபடலாம்.

    பில்லி சூனியம் போன்ற கொடுமையான தீய சக்திகள் விலகுவதற்கு அரசும், வேம்பும் பின்னியபடி உள்ள மரத்தடியில் இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும்.
    திருநெல்வேலியில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் காரையாரில் உள்ள அருவிக்கரை விநாயகருக்கு சித்தி விநாயகர் என்று பெயர். இடதுபுறம் கங்கையும், வலதுபுறம் பார்வதிதேவியும் உள்ளனர். இவ்விநாயகரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்குமாம்.

    மதுரை மீனாட்சி திருக்கோவில் வளாகத்தில் திறந்தவெளியில் வன்னிமரத்தடியில் விநாயகர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இவரை சுற்றி வன்னி, வேம்பு, மந்தாரை, அத்தி, நெல்லி, அரசு, வில்வம், பவளமல்லி, நாவல் ஆகிய ஒன்பது தல விருட்சங்கள் உள்ளன. அவற்றை ஒரேவேளையில் ஒன்றாக தரிசிப்பதால் நவக்கிரக தோஷம் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பர்.

    ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த இடையன்குளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் எதிரே உள்ள மூஞ்சூருக்கு வெந்நீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
    ×