என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dosa"
- சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம்.
- இந்த ரெசிபி செய்ய 5 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கப்
இட்லி பொடி - தேவைக்கேற்ப
நெய் - விருப்பத்திற்கேற்ப
செய்முறை
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெலிதாக ஊற்றி சுற்றி நெய் விடவும்.
பின்னர் அதன் மேல் இட்லி பொடியை பரவலாக தூவி தோசை மொறு மொறு என்று வந்ததும் இரண்டாக மடித்து எடுத்து பரிமாறவும்.
இந்த தோசையை திருப்பி போடக்கூடாது.
இப்போது அருமையான மொறு மொறு நெய் பொடி தோசை ரெடி.
- காய்கறிகள் சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
- காலையில் மீந்து போன மாவில் மாலையில் குழந்தைகளுக்கு இந்த ரெசிபி செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - 2 கப்
வெங்காயம்- 1,
பீன்ஸ் - 10,
கோஸ் - 50 கிராம்
கேரட் - 1,
கொத்தமல்லி - சிறிதளவு,
ப.மிளகாய் - 2,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், பீன்ஸ், கோஸ், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், பீன்ஸ், கோஸ், உப்பு சேர்த்து வேக விடவும்.
காய்கள் முக்கால் பாகம் வெந்ததும் அதை கரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து, அதனுடன் கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சத்தான வெஜிடபிள் தோசை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள ஏதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். விருப்பமான காய்கறிகள் எதை வேண்டுமானலும் இதில் சேர்த்து கொள்ளலாம்.
- எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த கிழங்கினை ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
- சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் பி, வைட்டமின் டி, இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
சர்க்கரை வள்ளி கிழங்கு - 75 கிராம்
தோசை மாவு - 1 கப்
எண்ணெய் அல்லது நெய் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையானளவு
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் - 1
செய்முறை
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சர்க்கரை வள்ளி கிழங்கை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கிழங்குடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த கிழங்குடன் தோசை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு தோசை ரெடி.
- பாலக்கீரையை தினமும் சாப்பிட்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
- இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க பாலக்கீரை உதவுகிறது.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
பாலக் கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் (விழுதாக அரைக்கவும்) - 3
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் இரண்டு வகை அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பாலக்கீரையை ஆய்ந்து, சுடு தண்ணீரில் 5 நிமிடம் வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கீரை, சீரகம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும், அரைத்த மாவுடன் சேர்க்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் சூப்பரான சத்தான பாலக்கீரை தோசை தயார்.
ஊறுகாயுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்!
வெள்ளை சோளம் - 1 கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - அரை கப்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
சோளம், இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் கலந்து கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஆறு மணி நேரம் ஊறிய பின்னர் மிக்ஸியில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து, 8 மணி நேரம் புளிக்க விடவும்.
மாவு நன்கு புளித்தவுடன் தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சாம்பார் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும்.
பச்சை பயறு - 1 கப்
அரிசி - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி - 1 இன்ச்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைத்து நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்படி அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பயறு தோசை ரெடி!!!
இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
பாலக்கீரை - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
வெங்காயம் - 2
இஞ்சி - 1 அங்குல துண்டு,
பச்சை மிளகாய் - 2,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், பாலக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன், உப்பு சேர்த்து நன்றாக கரைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, ப.மிளகாய், பாலக்கீரை, வெங்காயத்தை போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கிய கீரையை மாவில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேகமாக வைத்து எடுத்து பரிமாறவும்.
கேழ்வரகு மாவு - 1/2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
பாசிப்பருப்பு - 1 கப்,
பச்சரிசி - கால் கப்,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
சின்ன வெங்காயம் - 10,
செய்முறை:
அரிசி + பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நன்றாக ஊறிய அரிசி, பருப்புடன் மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அத்துடன் ஊறிய பருப்பையும், அரிசியையும் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இந்த தோசைக்கு புதினா துவையல், தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.
ரவை - 1 கப்
அரிசி மாவு - 1 1/2 கப்
மைதா மாவு - 4 டேபிள் ஸ்பூன்
கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு
பச்சைமிளகாய் - 5
செய்முறை :
கொத்தமல்லி, முந்திரி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும். மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தோசை வார்க்கும் முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாகச் சூடானதும் கரண்டியால் ரவாதோசை மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை மீதும் கொஞ்சம் எண்ணெய் தெளித்து வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சட்னிகளுடன் சூடாகப் பரிமாறவும்.
சூப்பரான ரவா ரோஸ்ட் ரெடி.
தூதுவளை கீரை - அரை கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - கால் கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
இஞ்சி, மிளகாய் விழுது - சிறிதளவு
செய்முறை:
தூதுவளை கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.
அரிசி, உளுந்து இரண்டையும் மூன்று மணி நேரம் ஊறவைத்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
வெந்தயத்தையும் ஊறவைத்து அதனுடன் தூதுவளை சேர்த்து அரைத்து மாவு சேர்க்க வேண்டும்.
பின்னர் மாவு கலவையுடன் உப்பு சேர்த்து சில மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
அதன் பிறகு மாவுடன் இஞ்சி மிளகாய் விழுதை கலந்து கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
புழுங்கல் அரிசி - 1 கப்
பச்சரிசி - 1 கப்
உளுந்து - 1/4 கப்
கொள்ளு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
கொண்டைக்கடலை - 2 ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
பாசிப்பருப்பு - 1 ஸ்பூன்
பட்டாணி பருப்பு - 1 ஸ்பூன்
காராமணி - 1 ஸ்பூன்
வேர்க்கடலை - 1 ஸ்பூன்
மொச்சை பயறு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உளுந்து, அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
மொச்சை பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, காராமணி இவைகளை கழுவி இரவே ஊற வைக்கவும்.
வேர்க்கடலையை தவிர மற்ற பருப்புகளை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
வேர்க்கடலையை சிவக்க வறுத்து ரவை போல பொடித்து கொள்ளவும்.
ஊறவைத்த பருப்புகளை உப்பு சேர்த்து நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 2 மணிநேரம் புளிக்க விடவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடனாதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்