search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dismissal"

    • 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
    • குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்தது என கூறி

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூர் மற்றும் பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுண்ணாம்புக்கல் மற்றும் கிராவல் மண் எடுத்து செல்லக்கூடிய லாரிகள் அதிவேகத்தில் செல்வதாகவும், அதிக பாரம் மற்றும் தார்ப்பாய் போடாமல் செல்வதாகவும் தொடர்ந்து வந்த புகாரின் பேரில் அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் அப்பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மேலப்பழுவூர் அருகே சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தபோது அதிக பாரம் ஏற்றிக்கொண்டு தார்ப்பாய் போடாமல் வந்தது தெரிய வந்தது. மேலும் சுண்ணாம்புக்கல் எடுத்து செல்வதற்கான உரிய அனுமதி இல்லாததை அறிந்த கோட்டாட்சியர் லாரியை பறிமுதல் செய்து கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    அதேபோல் பூண்டி கிராமத்தின் வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்ததில், அதிகபாரம் ஏற்றிக்கொண்டு தார்ப்பாய் போடாமல் வந்தது மற்றும் உரிய அனுமதி இல்லாதது தெரியவந்தையடுத்து அந்த லாரியையும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் இது குறித்து மேலப்பழுவூர் கிராம நிர்வாக அலுவலர் ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் பூண்டி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரிடம் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளுக்கும் அபராதம் விதித்து லாரியை விடுவித்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள் உரிய அனுமதி இன்றி பாரம் ஏற்றி வந்தது குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை என அறிந்த அரியலூர் கோட்டாட்சியர் முறையான புகார் அளிக்காதது, குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்தது என கூறி 2 கிராம நிர்வாக அலுவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்

    • கோவில் பணியாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
    • காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் தேர் ஆடிப்பூரத்தன்று கவிழ்ந்தது. 8 பேர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

    இவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண் வழங்கிய சுற்றுச்சூழல இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தேர் விபத்து தொடர்பாக இரண்டு தற்காலிக பணியாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்து தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கைக்கு பின் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவாரூரில் ஒஎன்ஜிசி நிறுவனம் பதித்த குழாயில் 2021-ம் ஆண்டு எற்பட்ட கசிவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதே நிலை தொடர்ந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த பிரிவை நிரந்தரமாக மூடத்தான் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. வேறு எந்த திட்டத்தை தொடங்குவதற்கும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை.

    தமிழக விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் செயல்படுத்தப்படும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து நாட்டு விளையாட்டு வீரர்களும் சொந்த நாட்டில் இருப்பது போல உணரும் வகையில் தேவையான அனைத்து வித அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கலெக்டர் கவிதா ராமு, எம்.எல்.ஏ. முத்துராஜா, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • முறைகேடு செய்த ரேசன்கடை விற்பனையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டது.
    • முறைகேடு செய்த கொண்டையம்பட்டி நியாயவிலைக்கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளை ஜூன் மாதத்தில் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான பறக்கும்படையினர் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது வேலை நேரத்தில் கடை திறக்காமல், ரேசன் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமலும், இருப்புக் குறைவு மற்றும் இருப்பு கூடுதல் இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. இவற்றில் கடுமையான முறைகேடு செய்த அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி நியாயவிலைக்கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது குடிமைப்பொருள் குற்றப்புல னாய்வுத்துறையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது போன்று நியாயவிலைக் கடையை குறித்த நேரத்தில் திறக்காமல் இருப்பது, ரேசன் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நியாயவிலைக்கடையின் விற்பனையாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஒன்றிய உதவி பொறியாளர், உள்பட 3 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள 30 ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முன்பு பொது மக்கள் பயன்படுத்தும் ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகளும் நடைபெற்றது.

    பிரதமரின் உத்தரவுப்படி தற்போது விவசாய பணிகளுக்கு 100 நாள் தொழிலாளர்கள் பயன்படுத்தபட்டு வருகின்றனர். ஆனால் இந்த பணிகளை அரசியல் பிரமுகர்கள் எடுத்து அதிகாரி கள் துணையுடன் முறைகேடு செய்வதாக புகார் எழுந்து வருகிறது.

    அதே போன்று இலங்கைச் சேரி கிராமத்தை சேர்ந்தவரின் விவசாய நிலங்களில் வரப்பு அமைக்க ரூ.2 லட்சத்து 10 ஆயிரம், நூறு நாள் வேலை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் 36 பணியாளர்களை கொண்டு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரை பணிகள் நடைபெற்று வருவதாக செந்துறை ஊராட்சி ஒன்றியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    பணிகாலத்தின் போது 4-ந்தேதி அன்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிதளத்தில் யாரும் இல்லை. ஆனால் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைக்கு அறிக்கை மட்டும் அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்த பணி முறைகேட்டில் ஈடுபட்ட ஒன்றிய உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய மேற்பார்வையாளர் சண்முகம், செந்துறை ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம் ஆகிய 3 பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் விஜயலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர், துணைவட்டார வளர்ச்சி அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    சாலை வசதி இல்லாத முந்திரிகாட்டிற்கு சுமார் 1 கிமீ தூரம் நடந்தே சென்று ரகசிய ஆய்வு செய்து எடுக்கப்பட்ட அரியலூர் கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை அரியலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    காஞ்சீபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் செய்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த சி.ஹரிபிரபாகரன் (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹரிபிரபாகரன், தனது டுவிட்டர் பக்கத்தில் ஊடகத்தினரை பற்றி தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டதால், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹரிபிரபாகரன், தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆஸ்பத்திரிக்குள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, செய்தி சேகரிக்கவும், படம் எடுக்கவும் பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பிஸ்கட்டுகளுக்காக குரைக்கும் தெரு நாய்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு பதிலாக நுழைவு வாயிலிலேயே நிறுத்திவைக்கப்படும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×