search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Development Work"

    • முதல் கட்டமாக காவல் நிலையம் முன்பு பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

    கடையநல்லூர்:

    ஆய்க்குடி பேரூராட்சியில் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்டமாக காவல் நிலையம் முன்பு பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    ஆய்க்குடி, அகரகட்டு, கம்பிளி பகுதிகளில் சின்டெக்ஸ் தொட்டிகள், பயணிகள் நிழல் குடை, கழிவுநீர் ஓடை, வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ. 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையம் முன்பு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான், ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ், பேரூராட்சி துணை தலைவர் மாரியப்பன், ஆய்க்குடி தி.மு.க. பேரூர் செயலாளர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நகர்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் விதமாக தனிநபர் வேலைவாய்ப்புத் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.
    • இப்பணிக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.363 மதிப்பூதியமாக நேரடியாக பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மதியம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, நகர் நல அலுவலர் நமச்சிவாயம், உதவி பொறியாளர் சந்திரபோஸ், கண்காணிப்பாளர் கிளமண்ட் மற்றும் கவுன்சிலர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், மேயர் சண். ராமநாதன் பேசியதாவது:-நகர்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் விதமாக தனிநபர் வேலைவாய்ப்புத் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக, மாநகராட்சியில் உள்ள மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு எண்.29 முதல் 41 வரையிலான பகுதிகளில் 7 எண்ணிக்கையிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்படி, மண்டலம் 3-க்கு உட்பட்ட வார்டு எண்.29 முதல் 41 வரையிலான பகுதிகளில் மரம் வளர்க்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதன்படி ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 25,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    இப்பணிக்கு அப்பகுதிவாழ் பொதுமக்கள் மட்டுமே பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணிக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.363 மதிப்பூதியமாக நேரடியாக பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.பணியாளர்களினால் மேற்கொள்ளப்படும் பணிகள் மரக்கன்றுகள் நடுவதற்கு குழி ஏற்படு த்துதல், மரக்கன்றுகள் நடுதல், 50 நாளைக்கு குடிநீர் விட்டு பராமரித்தல் ஆகும்.மாநகராட்சி மூலம் 25,000 மரக்கன்றுகள் கொள்முதல் செய்தல், குடிநீர் விநியோகம் செய்தல், சுமார் 4000 எண்ணிக்கையிலான மரக் கூண்டுகள் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    நஞ்சநாடு ஊராட்சிக்குட்பட்ட பசவகல் பகுதியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ஒரு பயனாளிக்கு ரூ.1.70 வீதம் ரூ.3.40 லட்சம் மதிப்பில் 300 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் 2 வீடுகளையும், குருத்துக்குளி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 40 மீட்டர் நடைபாதை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் பொதுசுகாதாரம் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட கல்லக்கொரை, மற்றும் நஞ்சநாடு மேல்நிலைப்பள்ளி அருகில் சாய்வான பகுதியில் மரம் வளர்வதற்கு ஏதுவாக நீர்குழி அமைக்கும் பணியினை பார்வையிட்டார். இந்த நீர்குழிகள் அமைத்தல் மூலம் மழை காலங்களில் மழைநீர் வீணாகாமல் மரம், செடி, கொடிகள் வளர பயன்பெறும்.

    இந்த ஆய்வின் போது ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ராமன், நாகராஜ், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்க அணைப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சி பணிக்காக ரூ.1¼ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஏலகிரி கோடை விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரிமலையில் கோடை விழா நேற்று தொடங்கியது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி வரவேற்றார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரவி, லோகநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சுற்றுலாத்துறை ஆணையர் பழனிகுமார் சிறப்புரையாற்றினார்.

    அமைச்சர் கே.சி.வீரமணி கோடை விழாவை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் பல்துறை பணி விளக்க கண்காட்சியை திறந்து வைத்தார். அமைச்சர் நிலோபர் கபில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியினை திறந்து வைத்தார்.

    விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் பேசியதாவது:-

    இந்த கோடை விழாவில் சுற்றுலா பயணிகள், பொது மக்கள் தங்களை புதுப்பித்து கொண்டு உள்ளத்தாலும், இல்லத்தாலும் மகிழ்ச்சி அடைகின்றனர். கோடை விடுமுறையை கொண்டாடி மகிழ்வதால், அடுத்த சில மாதங்களுக்கு தங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள ஏலகிரியின் இயற்கையும், கோடை விழாவும் வசந்த வாசலாக மக்களுக்கு திகழ்கிறது.

    மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் சுற்றுலா தலங்கள் எத்திசையும் புகழ் மணக்கக்கூடிய சிறப்பை பெற்றுள்ளது. இந்தாண்டு வரவு - செலவு திட்டத்தில், சுற்றுலாத் துறைக்கு ரூ.173 கோடியே 42 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாணியம்பாடி வட்டம் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்க அணைப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சி பணிக்காக ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் வேலூர் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் துணை பதிவாளர் பாஸ்கர், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசன், அன்பரசன், ஜோலார்பேட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ரமேஷ், ஜோலார்பேட்டை நகர சபை முன்னாள் தலைவர் வசுமதி சீனிவாசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிச்சாண்டி நன்றி கூறினார்.

    விழாவை முன்னிட்டு மங்கல இசை, கிராமிய கலை நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, பல்சுவை நிகழ்ச்சி, லேசர் நடன நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மலர் கண்காட்சியும் இடம் பெற்றது.

    2-வது நாள் நிறைவு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 
    ×