என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » detained
நீங்கள் தேடியது "detained"
சவூதி அரேபியாவில் மதகுருமார்கள், உரிமை தொடர்பாக பேசுபவர்கள் மீது வன்முறையை தூண்டுவதாக பிரபல மதகுரு சபர் அல்-ஹவாலி மற்றும் அவரது 3 மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். #SaudiArabia
ரியாத்:
சவூதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதே நேரத்தில் இஸ்லாமிய நாடான சவூதியில் அந்நிய கலாச்சாரங்களை புகுத்தி வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், மேற்கத்திய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் அவரது வழிமுறைகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் பலர் விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஊழல் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை பிரபல மதகுரு சபர் அல்-ஹவாலி முன்வைத்து வந்தார். இதையடுத்து, மதகுருமார்கள் மற்றும் உரிமை தொடர்பாக பிரச்சாரம் செய்பவர்கள் மீது வன்முறையை தூண்டுவதாக சபர் அல்-ஹவாலி மற்றும் அவரது மகன்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சபர் அல்-ஹவாலி அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படவில்லை எனவும், வன்முறையை தடுக்கவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுதொடர்பாக லண்டனை மையமாக கொண்டுள்ள சவூதி அமைப்பான ஏ.எல்.கியூ.எஸ்.டி, சவூதி ராஜ குடும்பத்தின் மோசமான நிலை குறித்து புத்தகம் ஒன்றை வெளியிட்டதாகவும், அதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. #SaudiArabia
சவூதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதே நேரத்தில் இஸ்லாமிய நாடான சவூதியில் அந்நிய கலாச்சாரங்களை புகுத்தி வருவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், மேற்கத்திய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் அவரது வழிமுறைகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் பலர் விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஊழல் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை பிரபல மதகுரு சபர் அல்-ஹவாலி முன்வைத்து வந்தார். இதையடுத்து, மதகுருமார்கள் மற்றும் உரிமை தொடர்பாக பிரச்சாரம் செய்பவர்கள் மீது வன்முறையை தூண்டுவதாக சபர் அல்-ஹவாலி மற்றும் அவரது மகன்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சபர் அல்-ஹவாலி அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படவில்லை எனவும், வன்முறையை தடுக்கவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுதொடர்பாக லண்டனை மையமாக கொண்டுள்ள சவூதி அமைப்பான ஏ.எல்.கியூ.எஸ்.டி, சவூதி ராஜ குடும்பத்தின் மோசமான நிலை குறித்து புத்தகம் ஒன்றை வெளியிட்டதாகவும், அதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. #SaudiArabia
ஓசூரில் பணம் வைத்து சூதாடியதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓசூர்:
ஓசூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோ ஏரிக்கரையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த மஞ்சுநாத் (வயது 39), அஞ்செட்டி சீனிவாசன் (27), பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோ ரமேஷ் (24), மற்றொரு ரமேஷ் (22), தர்மபுரியைச் சேர்ந்த முனுசாமி (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.600 மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல வைஷ்ணவி நகர் பகுதியில் ஓசூர் டவுன் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக ஓசூர் ஜெய்சக்தி நகரைச் சேர்ந்த பிரகாஷ் (30), மணிகண்டன் (30), சிப்காட் சூர்யா நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (32), வினோத் (29), மத்திகிரி அருகே உள்ள பாரந்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (32) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.700 மற்றும் 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓசூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோ ஏரிக்கரையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த மஞ்சுநாத் (வயது 39), அஞ்செட்டி சீனிவாசன் (27), பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோ ரமேஷ் (24), மற்றொரு ரமேஷ் (22), தர்மபுரியைச் சேர்ந்த முனுசாமி (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.600 மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல வைஷ்ணவி நகர் பகுதியில் ஓசூர் டவுன் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக ஓசூர் ஜெய்சக்தி நகரைச் சேர்ந்த பிரகாஷ் (30), மணிகண்டன் (30), சிப்காட் சூர்யா நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (32), வினோத் (29), மத்திகிரி அருகே உள்ள பாரந்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (32) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.700 மற்றும் 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்க இருந்த பேரணியை தடுப்பதற்காக பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். #JammuKashmir #YaseenMalik
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் அப்பாவி பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது. இதனை கண்டித்து அம்மாநிலத்தில் உள்ள பிரிவினைவாத இயக்கங்கள் உட்பட பல தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக், ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பேரணி நடக்க இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்த பேரணியை தடுக்கும் வகையில், காவல்துறையினர், யாசின் மாலிக்கின் இல்லத்தில் வைத்து இன்று காலை அவரை கைது செய்தனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பதற்காக யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர்கள் சையது அலி ஷா ஜிலானி, மிர்வாயிஸ் மவுலவி உமர் பாரூக் மற்றும் மாலிக் ஆகியோர் பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்பட்டதை கண்டித்தும், காரணம் இன்றி இளைஞர்களை கைது செய்ததை எதிர்த்தும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தை அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #YaseenMalik
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் அப்பாவி பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது. இதனை கண்டித்து அம்மாநிலத்தில் உள்ள பிரிவினைவாத இயக்கங்கள் உட்பட பல தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, பிரிவினைவாத இயக்கத்தலைவர் யாசின் மாலிக், ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பேரணி நடக்க இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்த பேரணியை தடுக்கும் வகையில், காவல்துறையினர், யாசின் மாலிக்கின் இல்லத்தில் வைத்து இன்று காலை அவரை கைது செய்தனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பதற்காக யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர்கள் சையது அலி ஷா ஜிலானி, மிர்வாயிஸ் மவுலவி உமர் பாரூக் மற்றும் மாலிக் ஆகியோர் பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்பட்டதை கண்டித்தும், காரணம் இன்றி இளைஞர்களை கைது செய்ததை எதிர்த்தும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தை அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #YaseenMalik
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X