search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheating money"

    ஓசூரில் பணம் வைத்து சூதாடியதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஓசூர்:

    ஓசூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோ ஏரிக்கரையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த மஞ்சுநாத் (வயது 39), அஞ்செட்டி சீனிவாசன் (27), பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோ ரமேஷ் (24), மற்றொரு ரமேஷ் (22), தர்மபுரியைச் சேர்ந்த முனுசாமி (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.600 மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல வைஷ்ணவி நகர் பகுதியில் ஓசூர் டவுன் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக ஓசூர் ஜெய்சக்தி நகரைச் சேர்ந்த பிரகாஷ் (30), மணிகண்டன் (30), சிப்காட் சூர்யா நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (32), வினோத் (29), மத்திகிரி அருகே உள்ள பாரந்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (32) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.700 மற்றும் 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
    ×