search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதகுரு"

    • தன்பாலின ஈர்ப்பாளராக இருந்த இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
    • சீக்கிய மதகுரு ஹர்தேவ் திருமணம் செய்து வைத்தார்.

    பஞ்சாப், பதிந்தா நகரை சேர்ந்த மணிஷா(வயது 21), டிம்பிள்(27). இணை பிரியாத தோழிகளான இருவரும் சண்டிகர் அருகில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்தபோது காதலித்தனர்.

    தன்பாலின ஈர்ப்பாளராக இருந்த இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து பெற்றோர் மூலமாக உள்ளூர் சீக்கிய குருத்வாராவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என 70 பேர் இத்திருமணத்தில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சீக்கிய மதகுரு ஹர்தேவ் திருமணம் செய்து வைத்தார்.

    பின்னர் இந்த திருமணம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. உடனே, இதுகுறித்து சீக்கிய மத குருக்களின் தலைவரான ரக்பீர் சிங் தன்பால் திருமணம் இயற்கைக்கு மாறானது. சீக்கிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்றார். இதை தொடர்ந்து மதகுரு ஹர்தேவ் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • க்விலேரியோ ஏசுநாதரின் மறுஅவதாரமாக தன்னை அறிவித்து கொண்டுள்ளார்
    • இந்த அமைப்பிற்கு 3500க்கு மேற்பட்டோர் ஆதரவாளராக உள்ளனர்

    தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸில் உள்ளது மிண்டனாவ் நகரம்.

    இந்நகரத்தில் தற்போது ஒமேகா டி சலோனேரா (Omega de Salonera) என்றும் முன்னர் சொக்கோரோ பயனிஹான் சேவைக்குழு (Soccoro Bayanihan Services) என்றும் அழைக்கப்பட்ட ஒரு மத அமைப்பு செயல்படுகிறது. தன்னை பின்பற்றுபவர்களை தவிர வேறு எவராலும் எளிதில் உள்ளே நுழைய முடியாதவாறு ஆயுதமேந்திய காவலர்கள் சூழ, அதன் தலைவர் ஜே ரென்ஸ் பி க்விலேரியோ (Jey Rence B Quilario) என்பவரால் ஒரு மலைப்பகுதியில் இது செயல்படுகிறது.

    2019ல் அந்த பிராந்தியத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்திற்கு பிறகு அச்சத்தில் வாழ்ந்து வந்த மக்களிடம், உலகம் அழிய போவதாகவும் அதிலிருந்து தப்ப தன்னிடம் சரணடையுமாறும் கூறி மூளை சலவை செய்துள்ளார். ஏசுநாதரின் மறுஅவதாரமாக தன்னை அறிவித்து கொண்டுள்ள க்விலேரியோ மீது அவரது ஆதரவாளர்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

    உறுப்பினர்களிடம் பெருகின்ற நிதியிலிருந்தும், போதை மருந்து கடத்தல் மூலமாகவும் நிதி பெறும் இந்த அமைப்பில் சுமார் 1600 குழந்தைகள் உட்பட 3,500 பேருக்கும் மேல் நம்பிக்கையாளர்களாக உள்ளனர்.

    சில தினங்களுக்கு முன்னால் 8 குழந்தைகள் அங்கிருந்து தப்பித்து வந்தனர். அங்கு நடைபெறும் கொடுமைகள் குறித்து அவர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளனர்.

    க்விலேரியோ, மைனர் சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல் நடத்துவதாகவும், அங்குள்ள ஆண்களுக்கு அச்சிறுமிகளை கட்டாய திருமணம் செய்து வைப்பதாகவும், அதற்கு அச்சிறுமிகளின் பெற்றோர்களும் ஒப்பு கொள்வதாகவும், அந்த மலைப்பகுதியில் வசிக்கும் பிற சிறுமிகள் மீதும் அவர் பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவதாகவும் புகாரளித்தனர்.

    தற்போது இவர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

    • மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத முறைப்படி நடத்த முடிவு செய்தனர்.
    • இறுதியில் ஹீப்ரு பாடல்கள் படியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு யூத இனத்தை சேர்ந்தவர்களும் வசித்து வந்தனர். தற்போது இந்த ஆலயங்கள் அனைத்தும் காட்சிகூடங்களாக மாறிவிட்டன. இதனால் இங்கு திருமணம் போன்ற சடங்குகள் இப்போது நடப்பதில்லை.

    இந்நிலையில் கொச்சியை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகள் மஞ்சுஷா மரியம் இம்மானுவேலுக்கும், அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ரிச்சர்ட்டு ரோவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத முறைப்படி நடத்த முடிவு செய்தனர். தற்போது யூத ஆலயங்களில் இந்த திருமணம் நடப்பதில்லை என்பதால் கொச்சியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் யூத ஆலயம் போன்ற கூடாரம் அமைக்கப்பட்டது.

    அந்த கூடாரத்தில் யூத முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. இதனை நடத்தி கொடுக்க இஸ்ரேலை சேர்ந்த மதகுரு வந்திருந்தார். அவர் முன்னிலையில் முதலில் மணமக்கள் மோதிரம் மாற்றி திருமண ஒப்பந்தம் செய்து கொண்டனர். அடுத்து கெதுபா படித்து, கண்ணாடியை உடைத்து திருமண பந்தத்தில் இணைந்தனர். இறுதியில் ஹீப்ரு பாடல்கள் படியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது.

    இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதுபற்றி விருந்துக்கு வந்தவர்கள் கூறும்போது, கடந்த 2008-ம் ஆண்டு இங்கு யூத முறைப்படி திருமணம் நடந்தது. அதன்பின்பு 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அதுபோன்ற திருமணம் நடந்துள்ளது, என்றனர்.

    • பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு முன்னாள் தேசிய செயலாளர் எர்ணாகுளம் தலைமை ஜூடிசியல் கோர்ட்டில் புகார்.
    • போலீசார் விசாரணை நடத்தி முஸ்லீம் மதகுரு மீது இந்திய தண்டனை சட்டம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டேட்டியை சேர்ந்தவர் வசீம் அல் ஹிகாமி.

    முஸ்லீம் மதகுருவான இவர், கிறிஸ்தவர்கள் பற்றியும், கிறிஸ்தவம் பற்றியும் அவதூறான கருத்துக்களை பேசியதாகவும், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும் புகார் எழுந்தது.

    இதுபற்றி பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு முன்னாள் தேசிய செயலாளரான அனுப் ஆண்டனி எர்ணாகுளம் தலைமை ஜூடிசியல் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி முஸ்லீம் மதகுரு வசீம் அல் ஹிகாமி மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ, 295 ஏ மற்றும் 505 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    ×