என் மலர்
நீங்கள் தேடியது "திருமண பந்தம்"
- துணையின் கடந்த காலம் என்பது அவரிடம் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது.
- நம்பிக்கையை சிதைப்பது உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
மனிதர்களாகிய அனைவரும் ஏதேனும் ஒரு விஷயத்தில் குறைபாடுடையவர்கள்தான். ஆனால் துணையின் குறைபாடு பற்றியோ, அவரின் எரிச்சலூட்டும் பழக்கவழக்கங்கள் பற்றியோ மற்றவர்களிடம் பேசுவது சரியாக இருக்காது. அதுபற்றி அவருக்கு தெரியவரும்போது அவமானமாக உணரலாம்.
தன்னுடைய குறையை மற்றவர்களிடம் பகிரங்கப்படுத்தி தன்னை அவமதிப்பதாக கருதலாம். எந்த சந்தர்ப்பத்திலும் துணையின் குறையை சுட்டிக்காட்டி மனம் நோகச்செய்யக்கூடாது. மற்றவர் முன்னிலையில் தன்னை மதிப்புடன் நடத்தவில்லை என்ற உணர்வை அவரிடத்தில் ஏற்படுத்திவிடும். அவரிடம் தென்படும் குறைகளை நிதானமாக புரியவைத்து திருத்துவதற்குத்தான் முயற்சிக்க வேண்டும். மனைவியிடம் குறையே இருந்தாலும் மற்றவர் முன்னிலையில் பாராட்டி பாருங்கள். அவர் தன் தவறை சரி செய்து, எந்த அளவுக்கு மாறி இருக்கிறார் என்பதை அடுத்த முறை நேரடியாகவே தெரிந்து கொள்ளலாம்.
கடந்த காலம்
துணையின் கடந்த காலம் என்பது அவரிடம் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது. அதை உங்களை நம்பி பகிர்ந்து கொண்டிருக்கலாம். அதை பற்றி மற்றவர்களுடன், குடும்பத்துடன் கூட விவாதிப்பது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். துணையை சங்கடப்படுத்தலாம். துணையின் தனிப்பட்ட தகவல்களை, அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மனஸ்தாபத்தை உண்டாக்கி விடும்.
ஆளுமை
துணையின் செயல்பாடுகளை விமர்சிப்பது, கேலி செய்வது அவமரியாதைக்குரிய செயலாகும். அதனை மற்றவர்கள் முன்னிலையில் திரும்ப திரும்ப விமர்சனம் செய்வது அவர் மீது எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கிவிடும். அதனை சரி செய்வது கடினம். உளவியல் ரீதியாக நீண்ட கால உறவுக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமைந்துவிடும். துணையின் ஆளுமை திறனை அவமதிப்பதாகிவிடும். விமர்சனத்தை விட பாராட்டு மற்றும் புரிதலுக்கு முன்னுரிமை கொடுங்கள். துணை மனம் நெகிழ்ந்து போய்விடுவார்.
நிதிநிலை
துணையின் நிதி நிலைமையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது அவருடைய தனியுரிமையை மீறுவதாக அமைந்துவிடும். கடன், வருமானம் அல்லது செலவு செய்யும் பழக்கம் எதுவாக இருந்தாலும் அதனை மற்றவர்களிடம் கூற வேண்டியதில்லை. துணை வீண் செலவு செய்வதாக கருதினால் அதுபற்றி அவரிடம் பேசி நிதி நிலையை சீராக கையாள ஊக்குவிக்க வேண்டும்.
அச்சம்
மனைவியின் ஆள் மனதில் அச்சத்தையோ, அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விஷயங்கள் புதைந்திருக்கும். அது ஒருவித பயத்தையும், பாதுகாப்பின்மையையும் உருவாக்கி இருக்கும். நீண்ட நாட்களாக மனதை ஆட்கொண்டிருந்த அந்த விஷயங்களை தன் கணவரிடம் தெரிவித்து மன ஆறுதல் தேடி இருக்கலாம். அவர் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே அந்த விஷயங்களை கூறி இருக்கலாம்.
அவை மற்றவர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ தெரிந்திருக்க வேண்டியதில்லை. தெரியப்படுத்த வேண்டிய அவசியமுமில்லை. அதனை புரிந்து கொள்ளாமல் மற்றவர்களிடம் கூறுவது கணவன் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துவிடும். ஒரு துணை தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கணவரிடம் வெளிப்படுத்தும்போது உணர்ச்சி ரீதியான பாதுகாப்பையும் எதிர்நோக்குகிறார். கணவர் தனக்கு ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறார். அந்த நம்பிக்கையை சிதைப்பது உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
தகவல் தொடர்பு
எந்தவொரு வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவிற்கும் தகவல் தொடர்பு முதுகெலும்பாகும். நட்பாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி தகவல் தொடர்பு திறன் அவசியமானது. அது புரிதலை வளர்த்தெடுக்கும், தேவையற்ற மோதலை தடுக்கும். துணையிடம் எண்ணங்களையும் உணர்வுகளையும் தெளிவாக வெளிப்படுத்தும்போது தவறான புரிதல்கள் மற்றும் அனுமானங்களை தடுக்கும்.
- திருமண உறவு நீண்ட காலம் நீடிக்க அன்பு மட்டுமே போதாது.
- தம்பதியருக்குள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம்.
திருமண பந்தம் என்பது வாழ்வின் இறுதி காலம் வரை நீடித்து நிலைத்திருக்கக்கூடியது. அதனை வலிமையாக கட்டமைக்க மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ ஆகலாம். எந்த அளவுக்கு தம்பதியருக்குள் அசைக்கமுடியாத நம்பிக்கை நிலவுகிறதோ அதற்கேற்ப இந்த அளவுகோல் அமையும், மாறுபடக்கூடும். ஆனால் இருவருக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்பட சில மணித்துளிகளே போதுமானதாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் உறவை வலுப்படுத்த மனைவி பற்றி மற்றவர்களிடமோ, குடும்ப உறவினர்களிடமோ ஒருபோதும் பகிரக்கூடாத உளவியல் ரீதியான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
அன்பு
திருமண உறவு நீண்ட காலம் நீடிக்க அன்பு மட்டுமே போதாது. வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளை கடந்து உறவு நிலைத்திருக்க துணையின் மீது மரியாதை மற்றும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அவரிடம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
சண்டை
தம்பதியருக்குள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். அது கருத்து மோதலாகவோ, வாக்குவாதமாகவோ மாறி இருவரும் ஒருவருக்கொருவர் மணிக்கணக்கில் பேசிக்கொள்ளாமல் இருக்கலாம். அதுபற்றி நண்பர்களிடமோ, குடும்பத்தினரிடமோ கூறி ஆலோசனை கேட்பது நல்லதல்ல. ஆரம்பத்தில் அவர்களின் ஆலோசனை ஏற்புடையதாகவோ, பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவோ தோன்றினாலும் அது நிரந்தர தீர்வை ஏற்படுத்திக்கொடுக்காது.
தம்பதியர் இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் விவாதங்கள் பற்றி நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்வது துணையை பற்றிய அவர்களின் பார்வையை மாற்றிவிடும். துணை மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடும். உளவியலாளர்களின் கருத்துபடி, தம்பதியருக்கிடையே மோதல் ஏற்படுவது இயல்பானது. அதற்கு அவர்களே தீர்வு காண வேண்டும். மூன்றாம் நபரிடம் பகிரும்போது துணை பற்றி பெரும்பாலும் எதிர்மறையான எண்ணங்களே அவர்களின் மனதில் பதியும். அல்லது ஒருதலைபட்சமாக இருவரில் யாராவது ஒருவருக்கு அவர்கள் ஆதரவு கரம் நீட்டலாம். அது தம்பதியருக்கிடையே விரிசலை அதிகரிக்க செய்துவிடும்.
- மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத முறைப்படி நடத்த முடிவு செய்தனர்.
- இறுதியில் ஹீப்ரு பாடல்கள் படியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு யூத இனத்தை சேர்ந்தவர்களும் வசித்து வந்தனர். தற்போது இந்த ஆலயங்கள் அனைத்தும் காட்சிகூடங்களாக மாறிவிட்டன. இதனால் இங்கு திருமணம் போன்ற சடங்குகள் இப்போது நடப்பதில்லை.
இந்நிலையில் கொச்சியை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகள் மஞ்சுஷா மரியம் இம்மானுவேலுக்கும், அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ரிச்சர்ட்டு ரோவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத முறைப்படி நடத்த முடிவு செய்தனர். தற்போது யூத ஆலயங்களில் இந்த திருமணம் நடப்பதில்லை என்பதால் கொச்சியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் யூத ஆலயம் போன்ற கூடாரம் அமைக்கப்பட்டது.
அந்த கூடாரத்தில் யூத முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. இதனை நடத்தி கொடுக்க இஸ்ரேலை சேர்ந்த மதகுரு வந்திருந்தார். அவர் முன்னிலையில் முதலில் மணமக்கள் மோதிரம் மாற்றி திருமண ஒப்பந்தம் செய்து கொண்டனர். அடுத்து கெதுபா படித்து, கண்ணாடியை உடைத்து திருமண பந்தத்தில் இணைந்தனர். இறுதியில் ஹீப்ரு பாடல்கள் படியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது.
இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதுபற்றி விருந்துக்கு வந்தவர்கள் கூறும்போது, கடந்த 2008-ம் ஆண்டு இங்கு யூத முறைப்படி திருமணம் நடந்தது. அதன்பின்பு 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அதுபோன்ற திருமணம் நடந்துள்ளது, என்றனர்.
- இருவரும் எப்படி வாழ திட்டமிடுகிறீர்கள் என்பதை விவாதித்துவிடுவது நல்லது.
- பெற்றோரின் பங்களிப்பு, தலையீடு பற்றி முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது.
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு மணமக்கள் இருவரும் இல்லற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றி திறந்த மனதுடன், நேர்மையான, அர்த்தமுள்ள கலந்துரையாடலை நடத்துவது முக்கியமானது.
அத்தகைய விவாதம் திருமண வாழ்க்கையை தெளிவான கண்ணோட்டத்துடன் கட்டமைக்க உதவிடும். தடுமாற்றமோ, கருத்துவேறுபாடோ இன்றி சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு வழிவகை செய்துவிடும். அதற்கு செய்ய வேண்டிய 10 விஷயங்களை பட்டியலிடுகிறோம்.

திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைப்பதற்கு மட்டுமல்ல திருமணத்தை நடத்தும் போதும் நிதி விஷயம் பற்றி இருவரும் விவாதிப்பது நல்லது. ஏனெனில் விமரிசையாக திருமணத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கி செலவு செய்தால், பின்பு திருமணத்திற்கு பிறகு அந்த கடனை அடைப்பதற்கு இருவரும்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
அதனால் திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்வது? இருவரும் திருமணத்திற்கு முன்பு அன்றாடம் செய்யும் செலவுகள் என்னென்ன? ஏற்கனவே கடன் இருந்தால் அதனை எப்படி திருப்பி செலுத்துவது உள்ளிட்ட குடும்ப வரவு செலவு திட்டங்களை கையாள்வது பற்றி விவாதிப்பது நல்லது.
சேமிப்பை பற்றி விவாதிக்கும்போது ஓய்வு கால சேமிப்பு பற்றிய திட்டமிடலும் இடம் பெறுவது இறுதி கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க உதவிடும்.

குழந்தை
குழந்தை பெற்றுக்கொள்வது பற்றியும் திருமணத்திற்கு முன்னரே விவாதித்துவிடுவது நல்லது. ஏனெனில் இருவரில் ஒருவர் குழந்தை பேற்றை தள்ளிப்போட விரும்பலாம். அப்படி விரும்பினால் அதற்கான காரணத்தை விளக்குவது அவசியமானது.
ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பலரும் திருமண வயதை எட்டிய பிறகும் காலதாமதமாகவே திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படி இருக்கையில் குழந்தை பேற்றை தள்ளிப்போடுவது நல்லதல்ல.
எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? குழந்தைகளை பராமரிப்பது எப்படி? இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் குழந்தை வளர்ப்புக்கு செய்ய வேண்டிய மாற்று ஏற்பாடுகள், குழந்தைக்கான கல்விச்செலவு உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொண்டு விவாதிப்பது சிறப்பானது.
வேலை-வாழ்க்கை சமநிலை
திருமணத்திற்கு முன்பு துணை வேலைக்கு சென்று வந்திருக்கலாம். திருமணத்திற்கு பிறகும் வேலையை தொடர விருப்பப்படலாம். அவரின் கருத்துக்களை கேட்டறிந்து வேலை நேரம், வேலைக்கு சென்று வர ஆகும் பயண நேரம், துணையின் தனிப்பட்ட வாழ்க்கை முறை உள்ளிட்ட விஷயங்களை கேட்டறிந்து கொள்வது நல்லது.
வேலை, குடும்பத்தை நிர்வகிப்பதற்கு இது உதவும். மேலும் அவரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முன்வருவது துணை மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். திருமண பந்தத்தை வலுவடையச் செய்யும்.

குடும்ப அமைப்பு
திருமணத்திற்கு முன்பு வரை மணமகனோ, மணமகளோ இருவரும் பெற்றோரின் ஆதரவில்தான் வசித்திருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டிற்கு அடியெடுத்து வைக்கும் பெண் அங்கு புதிய உறவுகளுடன் பழகி வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.
திருமணத்திற்கு பிறகு மணமகன் பெற்றோருடன் சேர்ந்து வசிப்பதற்கு விரும்பலாம். மணப்பெண்ணோ தனியே சுதந்திரமாக வாழ விரும்பலாம். அதனால் இருவரும் எப்படி வாழ திட்டமிடுகிறீர்கள் என்பதை திருமணத்திற்கு முன்பே விவாதித்துவிடுவது நல்லது.
தனிக்குடித்தனத்தை விரும்பினால் அதுபற்றி மணமகன் முன்கூட்டியே பெற்றோரிடம் விளக்கி கூறிவிடுவது நல்லது. அது திருமணத்திற்கு பிறகு தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படுவதை தடுக்க உதவிடும்.
குடும்பத்தின் பங்கு
இருவருமே தங்கள் திருமண வாழ்க்கையில் அவரவர் பெற்றோரின் பங்களிப்பு, தலையீடு பற்றி முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நலன் கருதியே செயல்படுவார்கள் என்றாலும் தேவையில்லாமல் தலையீடு செய்வது பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.

கூடுமானவரை அவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அதுபற்றி இருவரும் விவாதித்து தெளிவான முடிவை எடுத்துவிட வேண்டும். முக்கியமான விஷயங்களில் அவர்களிடம் கருத்து கேட்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா விஷயத்திலும் தலையீடு செய்வதற்கு அனுமதிக்காமல் இருப்பது நல்லது.
ஆரோக்கியம்
இருவருக்கும் ஏதேனும் உடல்நல பிரச்சினைகள், நாள்பட்ட நோய்கள் அல்லது மரபணு சார்ந்த நோய் தாக்கங்கள் இருந்தால் அதுபற்றி விவாதித்துவிடுவது நல்லது. அதில் இருந்து மீண்டு வரும் வழிமுறைகள், நோய்களை முற்றிலும் குணமாக்கும் தன்மை பற்றி மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்லது.
சச்சரவுகள்
வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் புதுமண தம்பதியர்களுக்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள், கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை திருமணத்திற்கு முன்னரே கண்டறிந்துவிடுவது சாலச்சிறந்தது. அதற்கு ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இருவரும் தத்தம் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இறை நம்பிக்கை
இறை நம்பிக்கை விஷயத்தில் இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதும் நல்லது. ஆன்மிக ஈடுபாடு கொண்டவராக துணை இருந்தால் அவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து செயல்படுவது அவசியமானது. அது திருமண பந்தத்தை வலுவுடன் வைத்திருக்க துணைபுரியும்.

நட்பு
குடும்பம், உறவுகளை பற்றி தெரிந்து கொள்வது போலவே இருவரும் அவரவர் நெருங்கிய நண்பர்களை பற்றியும் விவாதித்து அறிந்து கொள்ள வேண்டும். அந்த நட்பு எந்த அளவிற்கு ஆழமானது என்பதையும் விளக்கி விட வேண்டும். திருமணத்திற்கு பிறகு அந்த நட்பு வட்டத்தை தொடரலாமா? எந்த அளவுக்கு தொடர்பில் வைத்திருப்பது என்பதையெல்லாம் முன்கூட்டியே விவாதித்துவிடுவது நல்லது.
இலக்கு
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இலக்குகள் இருக்கும். லட்சியங்கள், கனவுகள் இருக்கும். அது பற்றி பேசி தெரிந்து கொள்வதும், அதனை நிறைவேற்றுவதற்கு தம்மால் இயன்ற ஆதரவை வழங்குவதும் இருவருக்குமிடையேயான திருமண பந்தத்தை இன்னும் வலுமையாக்கும்.






