search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief-Minister Rangasamy"

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு
    • தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பஸ்பாஸ் அளிப்பது போல் புதுவை மாநிலத்தில் பெண் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச பஸ்பாஸ் அளிக்க வேண்டும்

    புதுச்சேரி:

    புதுவை துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் சங்க நிர்வாகிகள் சுமதி, தாயாரம்மாள், காயல்விழி, மங்கையர்கரசி, அம்சவள்ளி ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தினக் கூலியாக ரூ 300-க்குக் குறைவாக பெறும் துப்புரவு தொழிலாளர்கள் தினம் ரூ 50 அளவிற்கு பஸ்ஸிற்கு செலவு செய்கின்றனர். மீதி உள்ள கூலியில் பி,எப், இ.எஸ்.ஐ பிடித்தம் போக மிக சொற்பமான வருவாயில் குடும்பம் நடத்த சிரமப்படுகின்றனர். ஆகவே தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பஸ்பாஸ் அளிப்பது போல் புதுவை மாநிலத்தில் பெண் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச பஸ்பாஸ் அளிக்க வேண்டும்

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவை கடற்கரை சாலையில் கோலாகல விழா நடைபெற்றது.
    • மேடையிலிருந்து கீழே இறங்கிய முதல்-அமைச்சர், நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    புதுவை அரசின் சார்பில் கடற்கரை சாலையில் 77-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை சாலையில் மேடை, கொடிக் கம்பம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் அமர்ந்து சுதந்திரதினத்தை பார்வையி டவும் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

    காலை 8.55 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடற்கரை சாலைக்கு காரில் வந்தார். அவரை தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா வரவேற்று அழைத்துச் சென்றார்.

    தொடர்ந்து மேடைக்கு சென்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார். தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது. மேடையிலிருந்து கீழே இறங்கிய முதல்-அமைச்சர், நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

    தொடர்ந்து மேடை திரும்பிய அவர், சுதந்திர தின உரையாற்றினார். பின்னர் சிறப்பாக பணி யாற்றிய போலீசார், வீர, தீர செயல்கள் புரிந்தவர்கள், சுகாதார கள பணியாளர்க ளுக்கு விருது, பதக்கம், சான்றிதழ்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். தொடர்ந்து பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு நடந்தது.

    காவல்துறையின் பல்வேறு பிரிவுகள், முன்னாள் ராணுவவீரர்கள், தீயணைப்பு, என்.எஸ்.எஸ்., என்.சி.சி., அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பு மரி யாதயை முதல்-அமைச்சர் ரங்கசாமி மேடையிலிருந்து ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்கள், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    பின்னர் சிறந்த அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு வழங்கினார். தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்கட்சித் தலைவர் சிவா, செல்வகணபதி எம்.பி.,

    எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கென்னடி, சம்பத், ஜான்குமார், கல்யாணசுந்தரம், அங்காளன், கே.எஸ்.பி.ரமேஷ், ரிச்சர்டு, லட்சுமி காந்தன், பாஸ்கர், வி.பி.ராமலிங்கம் மற்றும் அரசு அதிகாரிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சுதந்திர தின விழாவை யொட்டி கடற்கரை சாலை யில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டி ருந்தது. பார்வையாளர்க ளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது.

    புதுவை நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டி ருந்தது. கடற்கரை சாலை யின் பின்புறம் கடலில் கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
    • முதல்- அமைச்சர் ரங்கசாமி அரசு துறையில் சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் சுதந்திர தினவிழா  கடற்கரை சாலையில் நடந்தது.

    விழாவில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, தேசியக் கொடி ஏற்றி வீர, தீர செயல் புரிந்த போலீசா ருக்கு விருதுகளை வழங்கி னார். ஏனாம் சிறப்பு பிரிவு சிறப்பு நிலை ஏ.எஸ்.ஐ. ரமணமூர்த்தி, காரைக்கால் சிறப்புநிலை ஏ.எஸ்.ஐ. செல்வராஜ், புதுவை ஆயுதப்படை சிறப்பு நிலை எஸ்.ஐ. சைமன்டேவிட், ரெட்டியார்பாளையம் போலீஸ் ஏட்டு ரகுராமன் ஆகியோருக்கு முதல்-அமைச்சரின் காவல் பதக்கமும், புதுவை காவலர் பயிற்சி பள்ளி எஸ்.ஐ பிரதீப்குமாருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் காவல் பதக்கம்,

    புதுவை எஸ்.பி. வம்சித ரெட்டி, ஊர்க்காவல்பிரிவு எஸ்.பி. சரவணன், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், காவலர் பயிற்சி பள்ளி எஸ்.ஐ. ராஜேஷ், மாகி காவல்நிலைய எஸ்.ஐ. ஜெய்சங்கர், புதுவை குற்ற ஆவணப்பிரிவு சுந்தர்ராஜன், ஆயுதப்படை ஏ.எஸ்.ஐ. பஞ்சநாதன், முத்தியால்பேட்டை காவல் நிலைய ஏ.எஸ்.ஐ. வேல்முருகன், கட்டுப்பாட்டு அறை ஏ.எஸ்.ஐ. மணிமொழி, பெரியகடை காவல்நிலைய ஏட்டு முகுந்தன், கடலோர காவல்பிரிவு ஏட்டு ஆனந்த்,

    புகைப்பட பிரிவு ஏட்டு ரங்கநாதன், பயிற்சி பள்ளி காவலர் நாதமணி, காரைக் கால் சிறப்பு அதிரடிப்படை காவலர் தமிழ்வேலன், புதுவை பயிற்சி பள்ளி சிறப்பு காவலர் மார்ஸ் அருள்ராஜ், கோட்டுச்சேரி காவலர் பிரேம்குமார், காட்டேரிக் குப்பம் காவலர் ராஜேஷ் குமார், இந்திய ரிசர்வ் பட்டாலியன் ஏ.எஸ்.ஐ. பாலமுருகன், ஏட்டுகள் பன்னீர்செல்வம், ஆனந்தவேலு ஆகியோருக்கு ராஜீவ்காந்தி காவல் பதக்க மும், புதுவை மாநிலத்தில் 2022-ம் ஆண்டில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட உருளையன் பேட்டை காவல் நிலையத் துக்கு விருதையும் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    உருளையன்பேட்டை விருதை இன்ஸ்பெக்டர் பாபுஜி பெற்றுக் கொண்டார்.

    மேலும் முதல்- அமைச்சர் ரங்கசாமி அரசு துறையில் சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கினார்.

    புதுவை ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவம், ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சிறந்த கல்வி நிறுவனத்துக் கான முதல்-அமைச்சரின் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பொது நிர்வாகத்தில் சிறந்து விளங் கிய தொழிலாளர் துறைக்கு ரொக்கப்பரிசும், சான்றி தழும் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் நாரா யணன், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜீவா னந்தம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார உதவியாளர் சரவணன், லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய துணை மருத்துவ செவிலியர் சுபா, வில்லியனூர் சமூகநல செயல்பாட்டாளர் சர்மிளா பானு, புதுவை வர்த்தக சமூக பொறுப்பு பங்கா ளராக எச்.டி.எப்.சி. வங்கி ஆகியோருக்கு முதல்- அமைச்சரின் கள பணியா ளர் விருது வழங்கப்பட்டது.

    இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறையில் சிறப்பாக பணியாற்றிய திட்ட அதிகாரி பாலாஜி, சித்த மருத்துவ திட்ட அதி காரி இந்திரா, ஆயுர்வேத மருத்துவ அதிகாரி தீப்தி மரியா, மருந்தாளுநர்கள் பெர்னாட்சன், ஜெகநாதன், நித்யா, முதுநிலை எழுத்தர் சுதா, கணக்கு மேலாளர் அனில்குமார் ஆகியோருக்கு முதல்-அமைச்சரின் சிறந்த சேவைக்கான விருதும் வழங்கப்பட்டது.

    தேசிய மாணவர் படையில் முதுநிலை பிரிவு மாணவர் பூமேதகனுக்கு முதலமைச்சரின் தங்க பதக்கமும், பரத்ராஜிற்கு கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கம், தமிழ் செல்வன் கல்வி செயலரின் வெண்கல பதக்கமும், இளநிலை பிரிவில் மணிஷா முதல்-அமைச்சரின் தங்க பதக்கம், ரங்களின் கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கம், ஆகாஷ் கல்வி செயலரின் வெண்கல பதக்கம் பெற்றனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
    • வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு வேளாண்துறையில் விவசாயிகளுக்கு தேவை யான டிராக்டர், பவர்டில்லர், நெல்நடவு எந்திரம், களையெடுக்கும் எந்திரம், மேம்படுத்தப்பட்ட உபகரணங்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

    மத்திய அரசு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ரூ.224 கோடி இதற்காக பெறப்பட்டுள்ளது. இதுவரை புதுவை பிராந்தியத்தை சேர்ந்த 28 பயனாளிகளுக்கு மானியத்தில் எந்திரங்கள், உபகரணங்கள் வாங்க ரூ.54.43 லட்சம் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    இப்போது அடுத்த 7 பயனாளிகளுக்கு எந்தரம் வாங்க ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆணைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியின் போதுவேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • மத்திய நிதி மந்திரியிடம் அரசு சார்பில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தார்.
    • புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர்.

    புதுச்சேரி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன்  புதுவைக்கு வந்தார்.

    மத்திய நிதி மந்திரி புதுவை வருகை தலைமை செயலகத்தில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளோடு புதுவையின் நிதி நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மத்திய நிதிமந்திரி வருகையையொட்டி சென்னையிலிருந்து நேற்று இரவு கவர்னர் தமிழிசை புதுவைக்கு காரில் வந்தார். அவர் வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவர் புதுவைக்கு வர காலதாமதம் ஏற்பட்டது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, மத்திய நிதி மந்திரியிடம் அரசு சார்பில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தார்.

    அவரிடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கவர்னர் வர தாமதம் ஆவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் மாளிகையில் காத்திருந்தார்.

    நள்ளிரவு 12.30 மணிக்கு வந்த கவர்னர் தமிழிசையுடன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மத்திய நிதி மந்திரியிடம் புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
    • நாட்டின் விடுதலைக்காக உழைத்த தலைவர்களின் தியாகத்தைப் பற்றி இளந்தலைமுறையினர் அறிவது அவசியம்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் சீனிவாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேயர் ராமலிங்கக் கவுண்டர் அரசு தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம், தியாகிகள் உருவச் சிலை திறப்பு விழா நடந்தது.

    விழாவுக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி புதிய கட்டிடத்தையும், சிலைகளையும் திறந்து வைத்து பேசினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    நாட்டின் விடுதலைக்காக உழைத்த தலைவர்களின் தியாகத்தைப் பற்றி இளந்தலைமுறையினர் அறிவது அவசியம். ஆகவே தலைவர்களது தியாகத்தை இளந்தலைமுறையினருக்கு கற்பிக்கவேண்டும்.

    சுதந்திரப் போராட்டத் தியாகிகளது சிலைகளை பள்ளிக்கூடங்கள் போன்ற வற்றில் அமைப்பதும், அச்சிலைகளது அடியில் அவர்களது கருத்துள்ள வாசகங்களை பொறிப்பதும் அவர்களது தியாகத்தை நினைவுகூறுவதாக அமைகிறது. அவர்களது பெயர்களையும் நாம் முக்கிய இடங்களுக்கு சூட்டுவதும் தியாகத்தை இளந்தலைமுறையினர் நினைவு கூர்வதற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிறைவேற்றும்

    அறிவித்த எல்லா திட்டங்களையும் அரசு நிறைவேற்றும். பொது மக்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம். குறிப்பாக மாணவர்க ளுக்கு அறிவித்த திட்டங்கள் நிச்சயம் செயல்படுத்தப் படும். இந்தியா சார்பில் சர்வதேச போட்டியில் பங்கேற்று புதுவை வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு விரைவில் உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். உடல் ஆரோக்கியத்துக்கு பிள்ளைகள் விளை யாட்டி லும் ஆர்வம் காட்ட வேண்டும்.

    புதுவையில் எளிதாக கிடைக்கும் கல்வியை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மத்திய அரசின் உதவியோடு புது வையை சிறந்த முறையில் முன்னேற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் நமச்சிவாயம் பேசும் போது சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் எந்தெந்த பள்ளிகளில் சூட்டப்பட்டுள்ளதோ அங்கு அவர்களின் சிலைகள் வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சம்பந்தம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக விடுதலை வீரர் சீனுவாசன் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாண சுந்தரம் வரவேற்றார். முடிவில் ராமலிங்க கவுண்டர் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.

    • 17 ஆயிரம் முதியோருக்கு புதிதாக உதவித்தொகை வழங்க ஆணை பெற்றார்.
    • மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுதான் ஒரு நல்ல அரசுக்கு உதாரணம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நான் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும், நான் சொன்னால் தட்டாமல், எல்லோரும் செய்ய வேண்டும் என நினைப்பது சர்வாதி காரத்தின் உச்சகட்டம்.

    முதல்-அமைச்சர் நினைத்தது எது நடக்கவில்லை? கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 300-க்கும் மேற்பட்டோரை பணி நிரந்தரம் செய்தார்.

    பதவி ஏற்றவுடன் முதியோர் உதவித் தொகையை ரூ.500 உயர்த்தினார். 17 ஆயிரம் முதியோருக்கு புதிதாக உதவித்தொகை வழங்க ஆணை பெற்றார். காரைக்கால் துறைமுகத்தை தனியாருக்கு கைமாற்ற சம்மதம் பெற்றார்.

    புதுவையில் 6 மதுபான ஆலைகளை தொடங்க அனுமதி பெற்றார். புதுவை மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் கவர்ச்சி நடன மதுபார்கள் திறக்க அனுமதி பெற்றார். நகர பகுதிக்குள் இருந்த பார்களை மாநில எல்லைகளில் இடமாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.

    இதற்கெல்லாம் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் முதல்-அமைச்சரால் எப்படி அனுமதி பெற முடிந்தது. இதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள், தற்போது எதற்கு அனுமதி தர மறுக்கிறார்கள் என முதல்-அமைச்சர் நீலிக்கண்ணீர் வடிப்பதன் அர்த்தம் என்ன?

    தற்போதுள்ள அதிகாரிகள் வானத்தில் இருந்து குதித்தவர்களா? அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு எந்த திட்டத்தையும் செயல்படுத்தினால் அதிகாரிகள் ஏன் மறுப்பு சொல்லப் போகிறார்கள்? முதல்- அமைச்சருக்கு எதிர்கேள்வி கேட்டால் பிடிக்காது.

    சட்டவிரோதமாக, சுயலாபத்துக்காக திட்டங்களை கொண்டு வந்தால் அதிகாரிகள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அதற்குரிய விளக்கத்தை அளித்து, திட்டங்களையும், மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுதான் ஒரு நல்ல அரசுக்கு உதாரணம்.

    எதற்கெடுத்தாலும் மாநில அந்தஸ்து இல்லை, அதிகாரம் இல்லை என புலம்புவதையும், விரக்தியாக பேசுவதையுமே முதல்-அமைச்சர் வாடிக்கையாக வைத்துள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் நீங்கள் விரும்பியபடி கூட்டணி அரசுதானே செயல்படுகிறது.

    1963-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட யூனியன் பிரதேச சட்டத்தில் தேவையான திருத்தத்தை டெல்லியில் முகாமிட்டு கொண்டு வரலாமே? அதிகாரிகளை அழைத்து பேசி இப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றியும், தேவையான திருத்தங்களையும் மத்திய கூட்டணி அரசின் உதவியோடு செயல்படுத்த முதல்-அமைச்சர் முன்வராதது ஏன்?

    முதல்-அமைச்சர் இருக்கையில் இருக்கிறேன் என எண்ண தோன்றுகிறது என புலம்பிக் கொண்டே, அதே பதவியில் நீடிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. காமராஜர் வழியில், உங்களால் முடியவில்லை என்றால், இளைஞர்கள் ஆளட்டும் என வழிவிட்டு விலகி செல்ல வேண்டியதுதானே? இப்படியெல்லாம் யார் நம்மை எதிர்த்து கேள்வி கேட்கப் போகிறார்கள்? என்ற எண்ணம்தான் முதல்-அமைச்சரை கபட நாடகம் ஆட வைக்கிறது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குகிறது. அரிதாரம் பூசி, முகமூடி அணிய வேண்டிய காலம் வந்துவிட்டது. தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள, மக்களை ஏமாற்றும் காலம் நெருங்கிவிட்டது என எண்ணும் உங்களின் மனவோட்டம் தெளிவாக புரிகிறது.

    பலரை ஒருநாள் ஏமாற்றலாம், சிலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால் எப்போதும் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. புதுவை மக்கள் விழித்துள்ளனர், முதல அமைச்சரை பற்றி உணர்ந்துள்ளனர். இனி அவரின் புலம்பலும், பொய்யுரையும் மக்களிடம் என்றும் எடுபடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • மாநில கபடி சங்கத் தலைவர் விஜயராணி ஜெயராமன் வரவேற்பு
    • சர்வதேச மற்றும்தேசிய அளவில் விளையாடும் வீரர்களுக்கு விருதுகள் பெறுவதற்காக விண்ணப்பிக்க விடுபட்ட சங்கங்கள் விண்ணப்பக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விளையாட்டு வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கும் கபடி சங்க தலைவரும் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினருமான விஜயராணி ஜெயராமன் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுவை மாநில விளையாட்டு குழுமம் மற்றும் ராஜீவ் காந்தி விளையாட்டு பள்ளி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் உருவாக்கி தந்திருப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தவையாகும்.

    புதுவையில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளையாட்டு ஆணையம் உருவாக்குவதை முதல்-அமைச்சர் ரங்கசாமி நிறைவேற்றியுள்ளார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கும் புதுவை மாநில கபடி சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.  கல்வித்துறை வளாகத்தில் முதல்-அமைச்சரும் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேர்மனுமான ரங்கசாமி தலைமையில், விளையாட்டுத் துறை அமைச்சரும் ஆணையத்தின் துணை சேர்மனுமான நமச்சிவாயம் முன்னிலையில் ஆணையத்தின் உறுப்பினர் செயலர்கள், கபடி, டேபிள் டென்னிஸ், வாலிபால் ஆகிய விளையாட்டு சங்கத் தலைவர்கள், புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள் பங்கேற்ற ஆணையத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடந்தது. இந்த கூட்டத்தில், புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு இயக்குனரகம் உருவாக்க வேண்டும், ஆணையத்திற்கு நிர்வாக அமைப்பை உருவாக்குதல், புதுச்சேரியில் விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு நிரந்தர பணி நியமனம், ஊதிய உயர்வு வழங்குதல், சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டில் பங்கேற்கும் விளையாட்டு சங்கங்களுக்கான செலவின தொகையை வழங்குதல், சர்வதேச மற்றும்தேசிய அளவில் விளையாடும் வீரர்களுக்கு விருதுகள் பெறுவதற்காக விண்ணப்பிக்க விடுபட்ட சங்கங்கள் விண்ணப்பக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி விளையாட்டுத் துறையில் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பொன்னாளாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலையில் நடந்த பொதுக்குழு கூட்டம் கருதப்படுகிறது.

    இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் விளையாட்டுத்துறை சிறந்த வளர்ச்சியை பெறுவதற்கான தொடக்கமாக உள்ளது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆண்கள், பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று வரும் நிலையில் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறந்த செயல்பாடுகள் மூலம் புதுவையில் விளையாட்டு துறை மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பாக வளர்ச்சி பெறும்.

    இதற்கு முத்தாய்ப்பாக உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு புதுவை மாநில கபடி சங்கம் சார்பிலும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் என்ற முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயராணி ஜெயராம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. கடிதம்
    • பள்ளி மாணவ-மாணவியர்கள் பள்ளிக்கு செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.

    புதுச்சேரி: 

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஒரு கடிதம் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் தொடர் வெயில் தாக்கத்தினால் பொதுமக்களும், வயதானவர்களும், மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2 தினங்களாக வெயில் 105 பாரன்ஹீட் அளவை தாண்டியுள்ளது. தற்போதைய வெப்ப நிலையானது கடந்த மாதத்தைவிட அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அஞ்சக்கூடிய நிலை உள்ளது.

    புதுவையில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் வருகிற 7-ந் தேதி தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

    தற்போதுள்ள சூழ்நிலையில் 30, 40 வயதுள்ளவர்களே வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெய்யிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் சிறு வயதுள்ள பள்ளி மாணவ-மாணவியர்கள் பள்ளிக்கு செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.

    பல பள்ளிகளில் போதிய காற்று வசதியும் இல்லாத நிலையில் மாணவர்கள் வகுப்பறை யில் அமர்வதற்கே சிரமப்படுவார்கள். எனவே முதல்-அமைச்சர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை 7-ம் தேதிக்கு பதிலாக 15-ந் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கடிதம் அளித்துள்ளேன்.

    இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் புறப்பட்டனர்.

    புதுச்சேரி:

    தேசிய மாணவர் படையினரின்கடலூர் தேசிய மாணவர் கப்பல் படை பிரிவு மற்றும் தேசிய மாணவர் கப்பல் படை பிரிவு மாணவர்கள் இணைந்து கடல் பாய்மரப்படகு சாகச பயணத்தை மேற்கொண்டனர்.

    ரங்கசாமி தொடங்கி வைத்தார்

    புதுவை துறைமுகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பாய்மர படகு கடல் சாகச பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ. தேசிய மாணவர் கப்பல் படை பிரிவு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் முதல்- அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    மாணவர் பருவத்திலேயே மாணவர்கள் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பாதுகாப்பில் மாணவர்களும் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது.

    இளம் வயதில் நாட்டு பற்றை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும். 11 நாட்கள் கடலில் சாகச பயணம் மேற்கொள்வது என்பது எளிதான ஒன்று அல்ல. இந்த பயணத்திற்கு துணிவு வேண்டும். இதன் மூலம் சிறந்த அனுபவம் கிடைக்கும்.

    இளம் வயதில் பிள்ளைகளை நல்வழிப்படுத்த இதுபோன்ற சாகச பயணங்கள் துணை புரியும். மாணவர்களுக்கு கல்வியோடு சிறந்த ஒழுக்கத்தை வழங்க வேண்டும்.

    இளம் வயதில் கற்பது தான் மாணவர்களுக்கு மனதில் பதியும். புதுவையில் மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் புறப்பட்டனர்.

    302 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவுள்ள இந்த பாய்மர படகு சாகசப் பயணம் புதுவையில் தொடங்கி கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் சென்றடைந்து மீண்டும் அதே வழியில் திரும்பும்.

    இந்த குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம், மரம் நடுதல், கடற்கரை தூய்மைப் பணித் திட்டம் எனப் பல சமூக சேவை சார்ந்த நிகழ்வுகளை நடத்த உள்ளனர்.

    தேசிய மாணவர் படை மாணவர்களின் உள்ளத் திறன் மேம்படுவதோடு கடல் பயணம் குறித்த அச்சம் நீங்கி ஆயுதப்படையில் மாணவர்களை சேரும் எண்ணத்தை தூண்டும் பயிற்சியாக கடல் பயிற்சி அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
    • பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டப் பேரவையில் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை அரச வேளாண்துறை மூலம் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர், நெல் நடவு எந்திரம், களையெடுக்கும் எந்திரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட உபகரணங்களை வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

    மத்திய அரசின் நிதி பெற்று இந்த திட்டம் செயல்படுத்த ப்படுகிறது. இந்த ஆண்டு ரூ.2 1/4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெறும் புதுவை பிராந்தியத்தை சேர்ந்த முதல் 7 பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டப் பேரவையில் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினர். சபாநாயகர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், செல்வகணபதி எம்.பி, ராமலிங்கம் எம்.எல்.ஏ, வேளாண் துறை இயக்குநனர் பாலகாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
    • ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை அறிமுகப் படுத்துவது கல்வியை பாதிக்கும் என்றும் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பள்ளிகளில் ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

     நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும், 11-ம் வகுப்பிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது. இதற்காக அரசு பள்ளி களில் படிக்கும் மாணவர்க ளுக்கு சி.பி.எஸ்.இ. பாடபுத்தகம் வழங்க அரசு கொள்முதல் செய்து வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாட வகுப்புகளை நடத்தும் வகையில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதேநேரத்தில் தமிழ் விருப்ப பாடமாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் ஆசிரியர்களும், மாணவர்களும் தயாராகாத சூழ்நிலையில் ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை அறிமுகப் படுத்துவது கல்வியை பாதிக்கும் என்றும் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வலியுறுத்தி சமூக நல அமைப்புகள் சார்பில் நாளை கல்வித்துறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்தனர்.

    அப்போது, சமூகநல அமைப்பினர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாய்வழி மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையிலும் தாய்மொழி வழி கல்வியை பிரதானப் படுத்தப்பட்டுள்ளது. அதோடு, நாடு முழுவதும் மாவட்டந்தோறும் மருத்துவ கல்லுரியை தொடங்க வேண்டும் என்றும், அதிலும் தாய்மொழியிலேயே மாணவர்கள் மருத்துவம் படிக்க அந்தந்த பிராந்திய மொழிகளில் மருத்துவ கல்வியை தொடங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இத்தகைய சூழலில் தமிழை விருப்ப பாடமாக அரசு பள்ளிகளில் வைப்பது மத்திய அரசின் கொள்கைக்கு விரோதம். மேலும், கர்நாடக மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. கல்வியில் கன்னடம் கட்டாய பாடமாக்கப் பட்டுள்ளது. எனவே புதுவை அரசு பரிசீலனை செய்து தமிழை கட்டாய பாடமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம், முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். கல்வித்துறை செயலர் ஜவகரை அழைத்து ஆலோசனையும் நடத்தினர். தொடர்ந்து சமூகநல அமைப்பினரும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்படும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாய பாடமாக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் இருந்து அரசாணை பெறப்பட்டு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் உறுதியளித்தார்.

    இதையடுத்து நாளை கல்வித்துறை முற்றுகையிடும் போராட்டத்தை தள்ளி வைப்பதாக சமூக நல அமைப்பினர் தெரிவித்தனர். அதோடு, வருகிற 4-ந்தேதி அவசர கதியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்றும், அரசு, தனியார் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கல்வி உரிமை மாநாடு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

    ×