என் மலர்
புதுச்சேரி

கபடி சங்கத் தலைவர் விஜயராணி ஜெயராமன்.
பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் முக்கிய தீர்மானம்
- மாநில கபடி சங்கத் தலைவர் விஜயராணி ஜெயராமன் வரவேற்பு
- சர்வதேச மற்றும்தேசிய அளவில் விளையாடும் வீரர்களுக்கு விருதுகள் பெறுவதற்காக விண்ணப்பிக்க விடுபட்ட சங்கங்கள் விண்ணப்பக்கவும் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விளையாட்டு வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கும் கபடி சங்க தலைவரும் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினருமான விஜயராணி ஜெயராமன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுவை மாநில விளையாட்டு குழுமம் மற்றும் ராஜீவ் காந்தி விளையாட்டு பள்ளி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் உருவாக்கி தந்திருப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தவையாகும்.
புதுவையில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளையாட்டு ஆணையம் உருவாக்குவதை முதல்-அமைச்சர் ரங்கசாமி நிறைவேற்றியுள்ளார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கும் புதுவை மாநில கபடி சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கல்வித்துறை வளாகத்தில் முதல்-அமைச்சரும் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேர்மனுமான ரங்கசாமி தலைமையில், விளையாட்டுத் துறை அமைச்சரும் ஆணையத்தின் துணை சேர்மனுமான நமச்சிவாயம் முன்னிலையில் ஆணையத்தின் உறுப்பினர் செயலர்கள், கபடி, டேபிள் டென்னிஸ், வாலிபால் ஆகிய விளையாட்டு சங்கத் தலைவர்கள், புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள் பங்கேற்ற ஆணையத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடந்தது. இந்த கூட்டத்தில், புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு இயக்குனரகம் உருவாக்க வேண்டும், ஆணையத்திற்கு நிர்வாக அமைப்பை உருவாக்குதல், புதுச்சேரியில் விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு நிரந்தர பணி நியமனம், ஊதிய உயர்வு வழங்குதல், சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டில் பங்கேற்கும் விளையாட்டு சங்கங்களுக்கான செலவின தொகையை வழங்குதல், சர்வதேச மற்றும்தேசிய அளவில் விளையாடும் வீரர்களுக்கு விருதுகள் பெறுவதற்காக விண்ணப்பிக்க விடுபட்ட சங்கங்கள் விண்ணப்பக்கவும் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி விளையாட்டுத் துறையில் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பொன்னாளாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலையில் நடந்த பொதுக்குழு கூட்டம் கருதப்படுகிறது.
இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் விளையாட்டுத்துறை சிறந்த வளர்ச்சியை பெறுவதற்கான தொடக்கமாக உள்ளது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆண்கள், பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று வரும் நிலையில் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறந்த செயல்பாடுகள் மூலம் புதுவையில் விளையாட்டு துறை மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பாக வளர்ச்சி பெறும்.
இதற்கு முத்தாய்ப்பாக உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு புதுவை மாநில கபடி சங்கம் சார்பிலும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் என்ற முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயராணி ஜெயராம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.






