என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு விருது
    X

    கோப்பு படம்.

    உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு விருது

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
    • முதல்- அமைச்சர் ரங்கசாமி அரசு துறையில் சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் சுதந்திர தினவிழா கடற்கரை சாலையில் நடந்தது.

    விழாவில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, தேசியக் கொடி ஏற்றி வீர, தீர செயல் புரிந்த போலீசா ருக்கு விருதுகளை வழங்கி னார். ஏனாம் சிறப்பு பிரிவு சிறப்பு நிலை ஏ.எஸ்.ஐ. ரமணமூர்த்தி, காரைக்கால் சிறப்புநிலை ஏ.எஸ்.ஐ. செல்வராஜ், புதுவை ஆயுதப்படை சிறப்பு நிலை எஸ்.ஐ. சைமன்டேவிட், ரெட்டியார்பாளையம் போலீஸ் ஏட்டு ரகுராமன் ஆகியோருக்கு முதல்-அமைச்சரின் காவல் பதக்கமும், புதுவை காவலர் பயிற்சி பள்ளி எஸ்.ஐ பிரதீப்குமாருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் காவல் பதக்கம்,

    புதுவை எஸ்.பி. வம்சித ரெட்டி, ஊர்க்காவல்பிரிவு எஸ்.பி. சரவணன், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், காவலர் பயிற்சி பள்ளி எஸ்.ஐ. ராஜேஷ், மாகி காவல்நிலைய எஸ்.ஐ. ஜெய்சங்கர், புதுவை குற்ற ஆவணப்பிரிவு சுந்தர்ராஜன், ஆயுதப்படை ஏ.எஸ்.ஐ. பஞ்சநாதன், முத்தியால்பேட்டை காவல் நிலைய ஏ.எஸ்.ஐ. வேல்முருகன், கட்டுப்பாட்டு அறை ஏ.எஸ்.ஐ. மணிமொழி, பெரியகடை காவல்நிலைய ஏட்டு முகுந்தன், கடலோர காவல்பிரிவு ஏட்டு ஆனந்த்,

    புகைப்பட பிரிவு ஏட்டு ரங்கநாதன், பயிற்சி பள்ளி காவலர் நாதமணி, காரைக் கால் சிறப்பு அதிரடிப்படை காவலர் தமிழ்வேலன், புதுவை பயிற்சி பள்ளி சிறப்பு காவலர் மார்ஸ் அருள்ராஜ், கோட்டுச்சேரி காவலர் பிரேம்குமார், காட்டேரிக் குப்பம் காவலர் ராஜேஷ் குமார், இந்திய ரிசர்வ் பட்டாலியன் ஏ.எஸ்.ஐ. பாலமுருகன், ஏட்டுகள் பன்னீர்செல்வம், ஆனந்தவேலு ஆகியோருக்கு ராஜீவ்காந்தி காவல் பதக்க மும், புதுவை மாநிலத்தில் 2022-ம் ஆண்டில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட உருளையன் பேட்டை காவல் நிலையத் துக்கு விருதையும் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    உருளையன்பேட்டை விருதை இன்ஸ்பெக்டர் பாபுஜி பெற்றுக் கொண்டார்.

    மேலும் முதல்- அமைச்சர் ரங்கசாமி அரசு துறையில் சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கினார்.

    புதுவை ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவம், ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சிறந்த கல்வி நிறுவனத்துக் கான முதல்-அமைச்சரின் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பொது நிர்வாகத்தில் சிறந்து விளங் கிய தொழிலாளர் துறைக்கு ரொக்கப்பரிசும், சான்றி தழும் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் நாரா யணன், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜீவா னந்தம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார உதவியாளர் சரவணன், லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய துணை மருத்துவ செவிலியர் சுபா, வில்லியனூர் சமூகநல செயல்பாட்டாளர் சர்மிளா பானு, புதுவை வர்த்தக சமூக பொறுப்பு பங்கா ளராக எச்.டி.எப்.சி. வங்கி ஆகியோருக்கு முதல்- அமைச்சரின் கள பணியா ளர் விருது வழங்கப்பட்டது.

    இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறையில் சிறப்பாக பணியாற்றிய திட்ட அதிகாரி பாலாஜி, சித்த மருத்துவ திட்ட அதி காரி இந்திரா, ஆயுர்வேத மருத்துவ அதிகாரி தீப்தி மரியா, மருந்தாளுநர்கள் பெர்னாட்சன், ஜெகநாதன், நித்யா, முதுநிலை எழுத்தர் சுதா, கணக்கு மேலாளர் அனில்குமார் ஆகியோருக்கு முதல்-அமைச்சரின் சிறந்த சேவைக்கான விருதும் வழங்கப்பட்டது.

    தேசிய மாணவர் படையில் முதுநிலை பிரிவு மாணவர் பூமேதகனுக்கு முதலமைச்சரின் தங்க பதக்கமும், பரத்ராஜிற்கு கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கம், தமிழ் செல்வன் கல்வி செயலரின் வெண்கல பதக்கமும், இளநிலை பிரிவில் மணிஷா முதல்-அமைச்சரின் தங்க பதக்கம், ரங்களின் கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கம், ஆகாஷ் கல்வி செயலரின் வெண்கல பதக்கம் பெற்றனர்.

    Next Story
    ×