search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chicken Recipes"

    • சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 200 கிராம்

    உருளைக்கிழங்கு - 2

    ப.மிளகாய் - 2

    உப்பு - சுவைக்கு

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    மிளகு தூள் - அரை டீஸ்பூன்

    சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    மலாய் அல்லது கிரீம் - 2 டீஸ்பூன்

    பிரெட் தூள் - தேவையான அளவு

    முட்டை - 2

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி சிறிது உப்பு, சில்லி பிளேக்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    குக்கரில் சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 1 விசில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

    விசில் போனவுடன் குக்கரை திறந்து உருளைக்கிழங்கை எடுத்து விட்டு அதில் தண்ணீர் வற்றும் வரை சிக்கனை அடுப்பில் வைத்து வேக விடவும்.

    தண்ணீர் வற்றியதும் சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் உருளைக்கிழங்கை தோல் நீக்கி போட்டு மசிக்கவும்.

    அடுத்து அதில் மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், வெண்ணெய், மலாய் அல்லது கிரீம், உப்பு, கொத்தமல்லி,ப.மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும். இது சற்று தளர்வாக தான் இருக்கும்.

    ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி நன்றாக பரப்பி விடவும்.

    அப்போது சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து பிரெட் தூளில் போட்டு பிரட்டி வேண்டிய வடிவில் பிடிக்கவும். சிக்கன் மசாலா தளர்வாக இருக்கும் என்பதால் பிரெட் தூளில் பிரட்டினால் மட்டுமே சரியான வடிவில் வரும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    அடுத்து மற்றொரு முறை பிடித்து வைத்த கட்லெட்டை முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதை மிதமான தீயில் வைத்து தான் செய்ய வேண்டும்.

    இப்போது சூப்பரான சிக்கன் மலாய் கட்லெட் ரெடி.

    • இந்த ரெசிபி மிகவும் காரமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும்.
    • குழந்தைகளுக்கு சிக்கன் 65 என்றால் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 3

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

    அரிசி மாவு - 1 டீஸ்பூன்

    முட்டை - 1

    கறிவேப்பிலை - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

    சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பொளலில் சோள மாவு, அரிசி மாவு, முட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை, சோள மாவு கலவையில் சேர்த்து கலந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் பொரித்து, எடுத்து விட வேண்டும்.

    பின் அந்த எண்ணெயில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இறுதியில் அதனை ஒரு தட்டில் போட்டு, அதன் மேல் பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் தூவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி ரெடி!!!

    • சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1/2 கிலோ

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூ

    முந்திரி - ஒரு கைப்பிடி

    மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்

    மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்

    மஞ்சள்தூள் - சிறிதளவு

    மிளகு - அரை ஸ்பூன்

    சீரகம் - அரை ஸ்பூன்

    சோம்பு - கால் ஸ்பூன்

    கசகசா - கால் ஸ்பூன்

    பட்டை, கிராம்பு - சிறிதளவு

    ஏலக்காய் - 2

    ஜாதிக்காய் - 1

    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

    நெய் - 4 ஸ்பூன்

    எலுமிச்சை ஜூஸ் - 1 ஸ்பூன்

    சோயா சாஸ் - ஸ்பூன்

    தயிர் - 1 ஸ்பூன்

    பால் - 2 ஸ்பூன்

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

    பாதி முந்திரி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், புதினா மல்லித்தழையை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு, அதில் இஞ்சி, பூண்டு விழுது, முந்திரி மிளகு அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தயிர், நெய், எலுமிச்சை சாறு, சோயா சாஸ், தேவையான அளவு உப்பு போட்டு நன்கு பிசைந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதமுள்ள முந்திரியை போட்டு சிவந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் ஊறவைத்த சிக்கன் மசாலா கலவையை போட்டு, மிதமான தீயில் கிளறவும்.

    சிக்கனில் உள்ள நீரே போதுமானதும். சிக்கன் நன்றாக வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லி தழைதூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான செட்டிநாட்டு முந்திரி சிக்கன் கிரேவி ரெடி.

    • காய்கறிகள், சிக்கன் சேர்த்து செய்யும் சூப் உடலுக்கு நன்மை அளிக்கிறது.
    • இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - கால் கிலோ

    வெங்காயம் - 1

    காளான் – 1 கப்

    கேரட் – 3

    பீன்ஸ் - 3

    கோஸ் - சிறிய துண்டு

    தனி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

    பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு,மிளகு தூள், கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு

    வெண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வேகவைத்து கொள்ளவும்.

    பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை கொரகொரப்பாக தட்டி வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை போட்டு வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகள், காளான் சேர்த்து வதக்கவும்.

    இதற்கு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி காய்கறிகளை வேக விடவும்.

    இப்போது வேக வைத்த சிக்கனை சேர்த்து கொள்வதோடு உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்க வேண்டும்.

    காய்கறிகள் மற்றும் சிக்கன் வெந்துள்ளதா? என சரிபார்த்துவிட்டு சிக்கன் வெஜிடபிள் சூப்பை பரிமாறலாம்.

    • கிரீன் சிக்கன் டிக்கா சூப்பராக இருக்கும்.
    • இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ

    பச்சை மிளகாய் - 4

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

    புதினா - 2 கைப்பிடி

    கொத்தமல்லி - 1 கைப்பிடி

    எலுமிச்சை சாறு - பாதி

    மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்

    நெய் - 2 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கொத்தமல்லி அனைத்தையும் விழுதாக அரைக்கவும்.

    * சிக்கனுடன் அரைத்த விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஊற வைக்கவும்.

    * ஊறிய சிக்கனை மைக்ரோவேவ் ஓவனில் கிரில் செய்து எடுக்கவும்.

    * மைக்ரோவேவ் ஓவன் இல்லையெனில், பேனில் நெய் விட்டு, மிதமான சூட்டில் சிக்கனை போட்டு வேக விட்டு எடுக்கவும்.

    * சுவையான கிரீன் சிக்கன் டிக்கா ரெடி.

    • வித்தியாசமான இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - அரை கிலோ

    பெரிய வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 4

    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்

    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

    சீரகத்தூள் - அரை ஸ்பூன்

    மல்லித்தூள் - 2 ஸ்பூன்

    மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கியதும் மசாலா தூள் வகைகள் சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனவுடன் வேகவைத்து உதிர்த்த சிக்கன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.

    தண்ணீர் சுண்டி சிக்கன் சுருள வெந்தவுடன் மிளகு தூள் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.

    சுவைாயன பிச்சி போட்ட சிக்கன் வறுவல் ரெடி.

    • சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ரெசிபி அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் கீமா - 1/2 கிலோ

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    தக்காளி - 2

    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 4

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 2 டீஸ்பூன்

    தயிர் - 1 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய், உப்பு- தேவையான அளவு

    பட்டை, கிராம், ஏலக்காய் - சிறிதளவு

    செய்முறை :

    சிக்கன் கீமாவை சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி,ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கிய பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள் தயிர் சேர்த்து கிளறி விடவும்.

    அடுத்து அதில் சிக்கனை சேர்த்து கிண்டி விட்டு மூடி போட்டு வேக விடவும்..

    அடுத்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    ஒரு 15 நிமிடங்களுக்கு நீர் வற்றி திக்கான பதம் வந்ததும் சிறிதளவு கொத்தமல்லி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.

    இப்பொழுது நமக்கு சுவையான சிக்கன் கீமா ரெசிபி ரெடியாகிவிட்டது.

    • இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • சிக்கன் சிந்தாமணி செய்முறையை பார்க்கலாம்..

    கோயம்புத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் சிக்கன் சிந்தாமணியும் ஒன்று. நம்மில் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக் கொள்வது ஊறுக்காய், உருளைக்கிழங்கு வறுவல் அதிகபட்சமாக சிப்ஸ். ஆனால் கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணியை செய்வார்களாம். அந்த அளவுக்கு சாதம், கஞ்சி, தோசையென எல்லா வகையான உணவுகளுக்கும் சிறந்த சைடிஷாக சிக்கன் சிந்தாமணி பொருந்துகிறது.

    இதில் மசாலா பொடி எதுவும் சேர்க்காமல் காரம் மட்டும் தூக்கலாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் சேர்க்கும் மிளகாயின் சுவை. சிக்கன் என்றாலே சூடு என்பார்கள். ஆனால், சிக்கன் சிந்தாமணி மட்டும் உடலுக்கு சூடே கிடையாது. காரணம் அதை மண் சட்டியில், நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஊற்றி சமைப்பார்கள். ஈரோடுவாசிகள் சிக்கன் சிந்தாமணியை மிளகாய் கறி எனவும் அழைப்பார்கள். எப்போதுமே சிக்கனை வைத்து வறுவல், தொக்கு, பிரட்டல் என ஒரே மாதிரியான ரெசிபிக்களை சமைத்து கொண்டிருப்பவர்கள் இந்த வாரம் சன்டே சமையலில் சிக்கன் சிந்தாமணியை சமைத்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    நாட்டுக்கோழி - 1 கிலோ

    கடலை எண்ணெய் - 50 மிலி

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    சிவப்பு மிளகாய் - 150 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    பூண்டு - 5

    தக்காளி - 1

    பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 கைபிடி அளவு

    சீரகம் - 1 ஸ்பூன்

    நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்

    செய்முறை

    சிக்கன் சிந்தாமணியை மண்சட்டியில் சமைத்தால் மட்டுமே அதன் பாரம்பரிய சுவை கிடைக்கும்.

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    பூண்டை தோல் நீக்கி இடித்துகொள்ளவும்.

    சீரகத்தை இடித்து வைக்கவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    அடுப்பில் சட்டியை வைத்து அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும். 

    அடுத்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இடித்த பூண்டை சேர்த்து வதக்கவும். 

    பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் நாட்டுக்கோழியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    தேவையான அளவு உப்பு சேர்த்து விட்டு, காரமும் சரியாக இருக்கிறதாக என ஒருமுறை ருசிப்பார்க்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து சிக்கனை 15 நிமிடம் வேக வைக்கவும். 

    இப்போது இளசான தேங்காய் துண்டுகள், இடித்த சீரகம் சேர்த்து நன்கு கிளறவும். 

    மீண்டும் 15 நிமிடத்திற்கு சிக்கனை சுண்ட வேக விடவும்.

    இறுதியாக நல்லெண்ணெய் சேர்த்து கறிவேப்பிலையை தூவவும். 

    அடுப்பை அணைத்து விட்டு சுடச்சுட பரிமாறலாம்.

    சுவையான கொங்குநாடு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி தயார்.

    • குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • அந்த ரெசிபியை செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 3

    சிக்கன் கொத்துக் கறி மசாலா - 100 கிராம்,

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கன் கொத்துக் கறி மசாலாவில் இருக்கும் சிக்கனை பிய்ந்து வைக்கவும்,

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் முட்டையை சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.

    அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றவும்.

    மூடிவைத்து மிதமான தீயில் பாதி அளவு முட்டையை வேகவிடவும்.

    பிறகு அதில் பிய்ந்து வைத்த சிக்கனை முட்டையின் மேல் தூவி மூடிவைத்து 1 நிமிடம் வேகவிட்டு மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் ஆம்லெட் தயார்.

    • சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த ரெசிபி செய்து அசத்துங்கள்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/4 கிலோ

    பெரிய வெங்காயம் - 1

    குடைமிளகாய் - சிறியது 1

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    தக்காளி - 2

    கொத்தமல்லி - சிறிது

    உப்பு - சுவைக்கேற்ப

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    பிரியாணி இலை - 1

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 1

    வறுத்து அரைப்பதற்கு...

    மல்லி விதைகள் - 2 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    வரமிளகாய - 3

    பட்டை - 1 இன்ச்

    செய்முறை:

    * வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    * வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், குடைமிளகாயை சேர்த்து ஒருமுறை வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவி பின்னர் அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியைப் போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி, உப்பு மற்றும் மீதமுள்ள வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

    * பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, 1 கப் நீர் ஊற்றி மூடி வைத்து 10-15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும் அல்லது குக்கரில் போட்டு 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ளலாம்.

    * இறுதியில் குக்கரைத் திறந்து, கிரேவி அதிகம் வேண்டுமானால் தேவையான அளவு நீர் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு, வதக்கி வைத்துள்ள குடைமிளகாயையும் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கடாய் சிக்கன் கிரேவி தயார்.

    • குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிக்கனை ஊறவைக்க...

    சிக்கன் லெக் பீஸ் - 7

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்

    தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

    இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    முட்டை - 1

    சோள மாவு - 1 டீஸ்பூன்

    மைதா - 1 டீஸ்பூன்

    எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

    சாஸ் செய்ய

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    பூண்டு - 2 பல்

    இஞ்சி - 2

    சிவப்பு மிளகாய் - 2

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்

    தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன்

    தண்ணீர் - தேவையான அளவு

    வெங்காய தால் - கார்னிஷ் செய்ய

    செய்முறை

    பூண்டு, சிவப்பு மிளகாய், வெங்காய தாள், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி கெட்ச்அப், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள், முட்டை, சோள மாவு மற்றும் மைதா மாவு போட்டு நன்றாக கலந்து அதில் சிக்கனை போட்டு நன்றாக பிரட்டி 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

    ஒரு மணி நேரம் நன்றாக ஊறியதும், அதனை எண்ணையில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். சிக்கன் பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும்.

    ஒரு காடாயினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, இஞ்சி, புதிய சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் சோயா சாஸ், மிளகாய் சாஸ் மற்றும் தக்காளி கெட்ச்அப் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பின்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    கடைசியாக அதில் வறுத்த சிக்கன் போட்டு மசாலா சிக்கனை சேரும் படி 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

    இறுதியாக, அதில் வெங்காய தாள் தூவி இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் லாலிபாப் மசாலா ரெடி.

    • சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • இன்று சிக்கன் சூப் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 300 கிராம்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    தண்ணீர் - 2 கப்

    அரைப்பதற்கு...

    சின்ன வெங்காயம் - 10

    கொத்தமல்லி - 1/4 கப்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்

    ஏலக்காய் - 1

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    கறிவேறிப்பிலை - சிறிது

    பெரிய வெங்காயம் - 1 சின்ன வெங்காயம்

    செய்முறை:

    * முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

    * பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மிளகு, சீரகத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

    * பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

    * பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.

    * பின்பு தேவையான அளவு நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் சூப் தயார்.

    ×