search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tikka"

    • கிரீன் சிக்கன் டிக்கா சூப்பராக இருக்கும்.
    • இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ

    பச்சை மிளகாய் - 4

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

    புதினா - 2 கைப்பிடி

    கொத்தமல்லி - 1 கைப்பிடி

    எலுமிச்சை சாறு - பாதி

    மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்

    நெய் - 2 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கொத்தமல்லி அனைத்தையும் விழுதாக அரைக்கவும்.

    * சிக்கனுடன் அரைத்த விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஊற வைக்கவும்.

    * ஊறிய சிக்கனை மைக்ரோவேவ் ஓவனில் கிரில் செய்து எடுக்கவும்.

    * மைக்ரோவேவ் ஓவன் இல்லையெனில், பேனில் நெய் விட்டு, மிதமான சூட்டில் சிக்கனை போட்டு வேக விட்டு எடுக்கவும்.

    * சுவையான கிரீன் சிக்கன் டிக்கா ரெடி.

    பன்னீரில் டிக்கா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பன்னீர் டிக்கா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை நாண், சப்பாத்தி, தோசை, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பனீர் துண்டுகள் - 250 கிராம்
    தயிர் - 1/4 கப்
    துருவிய இஞ்சி - 1 மேசைக்கரண்டி
    தனியா தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கிரேவிக்கு :

    தக்காளி - 3
    பச்சைமிளகாய் - 4
    மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
    தனியா தூள் 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
    தயிர் - 3 மேசைக்கரண்டி
    சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளியையும் பச்சைமிளகாயையும் மிக்சியில் நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.

    ஒரு  பாத்திரத்திரத்தில் பன்னீர் துண்டுகள், தயிர், துருவிய இஞ்சி, தனியா தூள், மிளகாய் தூள் சிறிது உப்பு போட்டு நன்றாக கலந்து ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த பன்னீர் மசாலா துண்டுகளை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதினை சேர்த்து கிளறவேண்டும்.

    அடுத்து அதனுடன் மஞ்சள்தூள், தனியா தூள், கரம்மசாலா, பெருங்காயத்தூள், சீரகம், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.

    கடைசியில் தயிரையும் சர்க்கரையும் சேர்த்து இறக்கவேண்டும்.

    இறக்கிய பின் வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்க்க கலந்து பரிமாறவும்.

    சூப்பரான பன்னீர் டிக்கா மசாலா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டலில் கிடைக்கும் ஃபிஷ் டிக்காவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சதுரமாக வெட்டப்பட்ட மீன் துண்டுகள் - 1/2 கிலோ,
    தயிர் - 1 கப்,
    கடுகு பவுடர் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
    பெருஞ்சீரக தூள் - 1/2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    வினிகர் - 4 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தயிர், கடுகு பவுடர், உப்பு, சீரகத் தூள், பெருஞ்சீரக தூள், மிளகாய்த் தூள், கடுகு, மஞ்சள் தூள், வினிகர், இஞ்சி பூண்டு விழுது எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த இந்த மசாலாவில் மீனை சேர்த்து நன்கு கலந்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

    பிறகு ஸ்க்யூவர் குச்சியில் ஒவ்வொரு துண்டுகளாக குத்தி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஃபிஷ் டிக்கா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×