search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess Olympiad"

    • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்றது.
    • பதக்கம் பெற்ற வீரர்களுக்கு விருது அளிக்கும் விழாவும் நடைபெற்றது.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது.

    செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.

    நிறைவு விழாவில் டிரம்ஸ் சிவமணியுடன் முதல்வர் ஸ்டாலினும் டிரம்ஸ் வாசித்து அசத்தினார்.

    இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன் என சர்வதேச கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, பதக்கம் பெற்ற வீரர்களுக்கு விருது அளிக்கும் விழா நடைபெற்றது.

    இந்நிலையில், 3வது போர்டில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது அக்கா வைஷாலி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. அக்காவும் தம்பியும் ஒன்றாக சேர்ந்து விருது வென்றது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்தார்.
    • செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் விஸ்வநாதன் ஆனந்த்.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.

    செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.

    நிறைவு விழாவில் இந்தியாவின் இதயத் துடிப்பு (ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, நவீன்குமார், கீ போர்டு ஸ்டீபன் தேவசிஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் அசத்தினர். டிரம்ஸ் வாசித்தபடியே மேடையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இருந்த இருக்கை அருகே சென்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின் எழுந்து நின்று சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து அசத்தினார்.

    இந்நிலையில், இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன் என சர்வதேச கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    மேலும், செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

    • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி நடந்தது.
    • அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்தார்.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.

    செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-மந்திரிகளின் புகைப்படம் இடம்பெற்றுள்ளன.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் கியூபிக் நிறங்களை ஒன்று சேர்த்து சிறுவர்கள் அசத்தினர்.

    இந்தியாவின் இதயத் துடிப்பு (ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, நவீன்குமார், கீ போர்டு ஸ்டீபன் தேவசிஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் அசத்தினர்.

    அதன்பின், டிரம்ஸ் வாசித்த படியே மேடையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இருந்த இருக்கை அருகே சென்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின் எழுந்து நின்று சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து அசத்தினார்.

    • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
    • இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர்.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.

    செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-மந்திரிகளின் புகைப்படம் இடம்பெற்றுள்ளன.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் கியூபிக் நிறங்களை ஒன்று சேர்த்து சிறுவர்கள் அசத்தினர்.

    இந்நிலையில், இந்தியாவின் இதயத் துடிப்பு (ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, நவீன்குமார், கீ போர்டு ஸ்டீபன் தேவசிஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் அசத்தினர்.

    • செஸ் ஒலிம்பியாட் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் ஆகியோர் தங்கம் வென்றனர்.
    • தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கம் வென்றார்.

    சென்னை:

    44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு மேலாக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது.

    இறுதி நாளான இன்று இந்திய அணி 2 வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது. செஸ் ஒலிம்பியாடில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

    இந்நிலையில், ஆடவர் இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ள பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹல் சரின், எரிகேசி அர்ஜுன் ஆகியோர் விளையாடினர்.

    இதில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். மேலும், எரிகேசி அர்ஜுன் வெள்ளி வென்றார். பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார்.

    தனிநபர் பிரிவில் வைஷாலி, தானியா சச் தேவ், திவ்யா தேஷ்முக் ஆக்யோரும் வெண்கலம் வென்று அசத்தினர்.

    • மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
    • மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று மற்றும் இன்றைய தோல்வி காரணமாக இந்திய அணி தங்கப்பதக்க வாய்ப்பை தவறவிட்டது.

    சென்னை:

    86 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

    இறுதி சுற்று ஆட்டங்கள் இன்று முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

    மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று மற்றும் இன்றைய தோல்வி காரணமாக இந்திய அணி தங்கப்பதக்க வாய்ப்பை தவறவிட்டது. இன்று இந்திய ஏ அணி அமெரிக்காவிடம் தோல்வியடைந்த நிலையில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

    ஆடவர் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றுள்ளது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.

    • 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் ‘பி’ அணி ஜெர்மனியை எதிர் கொண்டது.
    • கடைசி சுற்றின் முடிவில் 18 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தை இந்தியா தட்டிச் சென்றது.

    சென்னை:

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் 'பி' அணி ஜெர்மனியை எதிர் கொண்டது.

    இந்த போட்டியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. கடைசி சுற்றின் முடிவில் 18 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தை இந்தியா தட்டிச் சென்றது. 

    ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி 19 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. அர்மீனியா அணி 19 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

    • திவ்யா தேஷ்முக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்லோவாகியா நாட்டு வீராங்கனையை 33-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
    • இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய பிரத்யுஷா போடா வெற்றி பெற்றார்.

    சென்னை:

    186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை 10 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்றான 11 ஆம் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் இந்திய மகளிர் பி அணியில் விளையாடிய திவ்யா தேஷ்முக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்லோவாகியா நாட்டு வீராங்கனையை 33-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    அதைபோல இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய பிரத்யுஷா போடா தன்னை எதிர்த்து போட்டியிட்ட கஜகஸ்தான் வீராங்கனையை 41-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

    • மகளிர் பிரிவில் 21 பேருக்கு பீடே மாஸ்டர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
    • ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, ஆசிய கண்டங்களை சேர்ந்த வீரர்கள் இதற்கு தகுதி பெற்று உள்ளனர்.

    சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 17 பேருக்கு பீடே (சர்வதேச செஸ் கூட்டமைப்பு) மாஸ்டர் பட்டம் வழங்கப்படுகின்றன. உடனடியாக இந்த பட்டங்களை பெற ஒருவர் குறிப்பிட்ட காலத்துக்குள் ரேட்டிங் புள்ளிகள் 2,100-யை பெற்று இருக்க வேண்டும். போட்டி முடிவில் மேலும் சில வீரர்கள் பீடே மாஸ்டர் பட்டம் பெற வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே இந்திய வீரர்கள் இந்த பட்டங்களை பெற்று விட்டனர். ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, ஆசிய கண்டங்களை சேர்ந்த வீரர்கள் இதற்கு தகுதி பெற்று உள்ளனர்.

    மகளிர் பிரிவில் 21 பேருக்கு பீடே மாஸ்டர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பட்டங்களை பெற குறைந்தது 1900 ரேட்டிங் புள்ளிகள் பெற்று இருக்க வேண்டும்.

    • இந்திய ‘பி’, இந்திய ‘ஏ’, அமெரிக்கா ஆகிய 3 அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன.
    • இந்திய ‘பி’ அணி சுலோவாக்கியாவையும், இந்திய ‘சி’ அணி கஜகஸ்தானையும் சந்திக்கின்றன.

    சென்னை:

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

    11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் ரவுண்டு கடந்த 29-ந் தேதி தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். இதன் ஓபன் பிரிவில் 186 அணிகளும், மகளிர் பிரிவில் 166 அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இதன் 10-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. ஓபன் பிரிவில் இந்தியா பி-உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. இந்திய ஏ அணி 2.5-1.5 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தியது. இந்திய சி அணி-சுலோவாக்கியா அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.

    ஓபன் பிரிவில் உஸ் பெகிஸ்தான், அர்மெனியா தலா 17 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. டைபிரேக்கர் அடிப்படையில் உஸ்பெகிஸ் தான் முதல் இடத்திலும், அர்மெனியா 2-வது இடத்திலும் இருக்கிறது.

    இந்திய 'பி', இந்திய 'ஏ', அமெரிக்கா ஆகிய 3 அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. டை பிரேக்கர் அடிப்படையில் இந்திய 'பி' அணி 3-வது இடத்திலும், இந்திய 'ஏ' அணி 4-வது இடத்திலும், அமெரிக்கா 5-வது இடத்திலும் உள்ளன. இந்திய 'சி' அணி 28-வது இடத்தில் இருக்கிறது.

    இன்று நடைபெறும் 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய 'பி' ஜெர்மனியை எதிர் கொள்கிறது. இந்திய 'ஏ' அணி அமெரிக்காவுடனும், இந்திய 'சி' அணி கஜகஸ்தானுடனும் மோதுகின்றன.

    பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி 3.5-0.5 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது. இந்திய 'பி' அணி 3-1 என்ற கணக்கில் நெதர்லாந்தையும், இந்திய 'சி' அணி 3-1 என்ற கணக்கில் சுவீடனையும் தோற்கடித்தது.

    மகளிர் பிரிவில் ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா, பக்தி குல்கானி ஆகியோரை கொண்ட இந்திய 'ஏ' அணி 17 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி தங்கப் பதக்கத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தங்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    போலந்து, அசர்பெய்டான், உக்ரைன் ஜார்ஜியா ஆகிய 3 அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. டை பிரேக்கர் அடிப்படையில் போலந்து 2-வது இடத்திலும், அசர் பெய் ஜான் 3-வது இடத்திலும், உக்ரைன் 4-வது இடத்திலும், ஜார்ஜியா 5-வது இடத்திலும் உள்ளன.

    இந்திய 'ஏ' அணி கடைசி சுற்றில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது. இந்திய 'பி' அணி சுலோவாக்கியாவையும், இந்திய 'சி' அணி கஜகஸ்தானையும் சந்திக்கின்றன.

    முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வழங்கப்படும். இதனால் இன்றைய கடைசி சுற்று மிகவும் முக்கியத்துவம் பெற்றது.

    • வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்குகிறார்.
    • சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி பங்கேற்கிறார்.

    186 நாடுகள் பங்கேற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.

    இதையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நடக்கிறது.

    விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று வெற்றி பெறும் செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

    சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி, சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், செஸ் சம்மேளன நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்

    நிறைவு விழாவில் 600 கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கம் செஸ் காய்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    கண்கவர் கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு உள்ளேயே மொத்தம் 10-க்கும் மேற்பட்ட அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்று போட்டி நடைபெற்றது.
    • இதில் பிரக்ஞானந்தா 76-வது காய் நகர்த்தலில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தினார்.

    சென்னை:

    186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்றில் ஓபன் பிரிவில் இந்தியா 2-வது அணி உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதியது.

    10-வது சுற்று ஆட்டத்தில் இந்தியா 2 அணியில் உள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா உஸ்பெகிஸ்தான் வீரர் சிந்தரோவ் ஜாவோகிருடன் மோதினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 77-வது நகர்த்தலில் சிந்தரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    ×