என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட்: மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தல்
- மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
- மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று மற்றும் இன்றைய தோல்வி காரணமாக இந்திய அணி தங்கப்பதக்க வாய்ப்பை தவறவிட்டது.
சென்னை:
86 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.
இறுதி சுற்று ஆட்டங்கள் இன்று முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று மற்றும் இன்றைய தோல்வி காரணமாக இந்திய அணி தங்கப்பதக்க வாய்ப்பை தவறவிட்டது. இன்று இந்திய ஏ அணி அமெரிக்காவிடம் தோல்வியடைந்த நிலையில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
ஆடவர் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றுள்ளது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்