search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    செஸ் ஒலிம்பியாட்: மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தல்
    X

    செஸ் ஒலிம்பியாட்: மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தல்

    • மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
    • மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று மற்றும் இன்றைய தோல்வி காரணமாக இந்திய அணி தங்கப்பதக்க வாய்ப்பை தவறவிட்டது.

    சென்னை:

    86 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

    இறுதி சுற்று ஆட்டங்கள் இன்று முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

    மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று மற்றும் இன்றைய தோல்வி காரணமாக இந்திய அணி தங்கப்பதக்க வாய்ப்பை தவறவிட்டது. இன்று இந்திய ஏ அணி அமெரிக்காவிடம் தோல்வியடைந்த நிலையில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

    ஆடவர் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றுள்ளது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.

    Next Story
    ×