என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - பாசத்தை மட்டுமின்றி பரிசையும் பகிர்ந்த அக்கா, தம்பி
- செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்றது.
- பதக்கம் பெற்ற வீரர்களுக்கு விருது அளிக்கும் விழாவும் நடைபெற்றது.
சென்னை:
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது.
செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.
நிறைவு விழாவில் டிரம்ஸ் சிவமணியுடன் முதல்வர் ஸ்டாலினும் டிரம்ஸ் வாசித்து அசத்தினார்.
இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன் என சர்வதேச கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பதக்கம் பெற்ற வீரர்களுக்கு விருது அளிக்கும் விழா நடைபெற்றது.
இந்நிலையில், 3வது போர்டில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது அக்கா வைஷாலி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. அக்காவும் தம்பியும் ஒன்றாக சேர்ந்து விருது வென்றது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்