search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "breast cancer"

    ஒருவரது குடும்ப பரம்பரையில் யாரேனும் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் இருந்திருக்குமானால், அவருக்கும் மார்பக புற்றுநோய் உருவாவதற்குரிய வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    மார்பக புற்றுநோய் உடைய ஒரு குடும்ப வரலாறு இருக்கும் பெண்கள், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக இடர் வாய்ப்பு பிரிவில் இருக்கின்றனர் என்றாலும், மார்பக புற்றுநோய் உள்ள அநேக பெண்களுக்கு அவர்களது குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு இல்லை.

    புள்ளிவிவர ரீதியாக மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நபர்களில் ஏறக்குறைய 5 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு உள்ளது. மார்பக புற்றுநோய் இருந்த ஒரு முதல் டிகிரி உறவினர், இரண்டாம் டிகிரி உறவினர் அல்லது குடும்பத்தின் ஒரே தரப்பில் பல தலைமுறைகள் உங்களுக்கு இருப்பார்களானால், உங்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான இடர்வாய்ப்பு அதிகமாக இருக்கக்கூடும்.



    * மார்பக புற்றுநோய் தொற்றக்கூடியது அல்ல.

    * மரபணு மாற்றம் BRCA1 அல்லது BRCA2 ஒருவரது DNAவில் கண்டறியப்படுமானால், அவருக்கு நிச்சயமாக மார்பக புற்றுநோய் உருவாகக்கூடும்.

    * BRCA1 அல்லது BRCA2-ஐ கொண்டிருப்பதாக அறியப்படும் குடும்பங்களைப் பொறுத்தவரை, அந்த குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் தீங்கு விளைவிக்கக்கூடிய BRCA 1 அல்லது BRCA 2 மரபணு பிறழ்வை தனது உடலில் கொண்டிருப்பதில்லை மற்றும் அந்த குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு புற்றுநோய் நேர்வும் இந்த மரபணுக்களில் ஒன்றில் உள்ள தீங்குவிளைவிக்கக்கூடிய மரபணு பிறழ்வுடன் தொடர்புடையதல்ல. மேலும், BRCA 1 அல்லது BRCA 2 மரபணு பிறழ்வுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பக மற்றும்  கருப்பைப்புற்றுநோய் உருவாவதில்லை. ஆனால், BRCA 1 அல்லது BRCA 2-ல் மரபு வழியில் மரபணு பிறழ்வுள்ள ஒரு பெண்ணுக்கு, அதுபோன்ற மரபணு பிறழ்வில்லாத ஒரு பெண்ணைவிட மார்பக புற்றுநோய் உருவாவதற்கு ஏறக்குறைய ஐந்து மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

    * வியர்வை அடக்கிகள் (Antiperspirants) மற்றும் துர்நாற்றம் போக்கிகள் (Deodorants) மார்பக புற்றுநோயை விளைவிப்பதில்லை. 
    40 முதல் 49 வயதிலிருந்து பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பெண்கள் மாதந்தோறும் சுய மார்பக பரிசோதனை செய்தல் நலம்.
    மாதவிலக்கு ஏற்பட்ட 7 முதல் பத்து நாட்களுக்குள் மார்பகத்தை பரிசோதித்து கொள்ளலாம். மார்பில் கட்டிகள், தடித்த பகுதிகள், வீக்கங்கள் இருக்கிறதா என கூர்ந்து கவனித்தல் வேண்டும். மார்பகங்களில் ஏதேனும் முடிச்சுகள் உள்ளதா என கவனித்தல் வேண்டும். இரு மார்பகங்களின் அளவு வடிவ மாற்றங்களை கவனித்தல் வேண்டும்.

    இவை அனைத்தும் பரிசோதித்த பின்னர் படுக்கையில் படுத்தபடி பரிசோதிப்பது அவசியம். ஒரு கையை தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு மறு கையை வைத்து எதிர் மார்பகத்தை ஒரு வட்ட சுழற்சிபோல் தடவி பார்க்க வேண்டும். இப்பரிசோதனையில் மார்பக காம்பு மற்றும் அக்குள் பகுதியையும் தடவி பார்த்தல் வேண்டும். மார்பக கட்டி அழுத்தமாகவும் ஓரங்கள் ஓழுங்கற்றும் வலியின்றியும் இருக்கிறதா என கவனித்தல் வேண்டும்.

    மறையாத கட்டிகளையும் மாற்றமின்றி காணப்படும் கட்டிகளையும் நன்கு தடவி பார்த்து கண்டுபிடிக்க வேண்டும். சில கட்டிகள் திடீரென தோன்றி அளவில் பெரிதாக காணப்படும். தாய் அல்லது சகோதரிகளுக்கு புற்றுநோய் இருத்தல். கர்ப்பம் தரிக்காதவர்கள். 35 வயதுக்கு மேலே முதலாவதாக கர்ப்பம் தரித்தவர்கள். சிறு வயதிலே மாதவிலக்கு நின்று போனவர்கள். மாதவிலக்கு முற்று பெற்றவர்கள். இவர்களுக்கெல்லாம் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்.



    மார்பில் இயல்புக்கு மாறான குழியோ அல்லது தோல் தடித்து வட்டமாகவோ காணப்படுதல். மார்பின் தோல் ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள மிகச்சிறிய குழிகள் போன்று காணப்படுதல். வலியுடனோ அல்லது வலியில்லாமலோ அக்குகளில் காணப்படும் வீங்கிய நீணநீர் முடிச்சுகள். குணமாகாத சிவந்த தோலோ அல்லது புண்னோ தென்படுதல்.

    முலைகாம்பிலிருந்து இயல்புக்கு மாறான கசிவுகள் வெளிப்படுதல். ஆரம்ப நிலையில் வலியோ எரிச்சலோ இருக்காது. பிற்பட்ட நிலைகளில் வலி ஏற்படும். பரிசோதித்தல் மாமோகிராம் என்பது மார்பகத்தை சிறப்பு முறையில் கதிர்வீச்சு மூலம் மிகச் சிறிய கட்டிகளைக் கூட எளிதில் கண்டறிய இயலும். இப்பரிசோதனை மூலம் புற்றுநோயின் ஆரம்பகால கட்டத்திலே கண்டறிந்து குணமாக்க முடியும்.

    40 முதல் 49 வயதிலிருந்து பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பெண்கள் மாதந்தோறும் சுய மார்பக பரிசோதனை செய்தல் நலம். 3 வருடங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனையும் செய்தல் வேண்டும்.

    50 வயதுக்கு மேல் ஓராண்டுக்கு ஒரு முறை மாமோகிராம் பரிசோதனை செய்வது நலம். மாமோகிராம் பரிசோதனை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனைகளுக்கு பின்பே புற்று கட்டி என்பது உறுதிசெய்யப்படும். மார்பகத்தில் கட்டி ஏற்பட்டால் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக அவசியம்.
    மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாக இதுவரை இல்லை. மார்பக புற்றுநோய் யாருக்கெல்லாம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று பார்க்கலாம்.
    நேற்று வரை நம்முடன் சிரித்துப் பேசி மகிழ்ந்த பெண்கள், திடீரென இன்று புற்றுநோய்க்கு இரையாகி, நம் கண்முன்னே தவணை முறையில் உயிரை விடுவதைப் பார்க்கிறோம். ஆனால் மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாக இதுவரை இல்லை. அதேநேரம் யாருக்கெல்லாம் இந்த மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    அவற்றை பார்க்கலாம்...

    பொதுவாக புற்றுநோய் உயிரணுக்கள், ஈஸ்ட்ரஜன் எனப்படும் ஹார்மோனால் வளர்ந்து, பின்னர் பல இடங்களுக்கு  பிரியக்கூடியதாகும்.

    இள வயதில் அதாவது 9 வயதுக்கு முன்பு பூப்பெய்துவது, மிக தாமதமான மெனோபாஸ், அதாவது 55 வயதுக்குப் பிறகு... இந்த இரண்டுமே மார்பகப் புற்றுநோய்க்கான பிரதான காரணங்கள்.

    30 வயதுக்குப் பிறகு முதல் குழந்தையைப் பிரசவிப்பது ஒரு காரணமாக உள்ளது.

    பெண்களுக்கு பூப்பெய்தியதில் இருந்து, 15 வருடங்களில், உடலுக்கு ஒரு மாற்றம் தேவைப்படும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் வரும். அதை ஈடுகட்ட உடலுக்கு சில தற்காலிக மாற்றங்கள் அவசியம். அது நடக்காத போது புற்றுநோய் அபாயம் அதிகமாகும்.

    கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள், எடை விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதிகப்படியான கொழுப்பு, ஈஸ்ட்ரோஜென்னாகவே மாறும். அது ஆபத்தின் அறிகுறி.

    அதிகப்படியாக கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதும், மெனோபாஸுக்கு பிறகு பெண்மையைத் தக்க வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்கிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபியும் கூட மார்பகப் புற்றுநோய்க்கு வாசல்படியாக உள்ளது.

    தினமும் அரை கோப்பை ஒயின் அல்லது சிறிதளவு பீர் அருந்துவது மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்று உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியத்தின் ஓர் அறிக்கை கூறுகிறது.

    50 வயதை கடந்த பெண்ணாக மாதவிடாய் காலத்தை கடந்தவராக இருக்கும் பட்சத்தில், உங்களது குடும்பத்தில் மார்பக புற்றுநோயால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அந்நோய் உங்களுக்கு வருவதற்கான அபாயம் அதிகமாகவே இருக்கின்றது.

    அநேக மார்பக கட்டிகள் புற்றுநோயாக இருப்பதில்லை. ஆனால் மார்பக கட்டி என்றாலே உடனடியாக புற்று நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது போல் நீர்கசிவு, ரத்த கசிவு இருந்தால் மருத்துவ பரிசோதனை மிக மிக அவசியம் ஆகும். பெண்கள் ஒவ்வொரு மாதமும் மார்பகத்தில் கட்டி இருக்கின்றதா என சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் 15.7 சதவீதம் அளவுக்கு புற்றுநோய் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. #Cancer
    மும்பை:

    இந்தியாவில் இருதய நோய்க்கு அடுத்தபடியாக புற்று நோயால் அதிகம் பேர் மரணம் அடைகின்றனர். இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதில், கடந்த 6 ஆண்டுகளில் நாட்டில் 15.7 சதவீதம் அளவுக்கு புற்று நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு நாடு முழுவதும் புற்றுநோய் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதில் 11.5 லட்சம் பேர் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டில் 10 லட்சம் பேருக்கு இந்த நோய் தாக்கியிருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த 6 ஆண்டுகளில் உதடு மற்றும் வாய் புற்று நோய் மிகப்பெரிய அளவில் தாக்கியுள்ளது. தற்போது அது 11.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்த படியாக நகர் புறங்களில் பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோய் அதிகமாக உள்ளது.


    கடந்த 2012-ம் ஆண்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரை தாக்கிய இந்த புற்று நோய் 2018-ம் ஆண்டில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை ஆட் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த புற்று நோய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

    மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் நோயை கண்டறியும் தொழில் நுட்ப வசதியின் வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக புற்று நோய் விரைவாக கண்டறியப்பட்டு மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று இந்திய புற்று நோய் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் டைரக்டர் டாக்டர் ரவி மெக் ரோத்ரா தெரிவித்துள்ளார். #Cancer
    பெண்களை போல் ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கு சாத்திய கூறுகள் உள்ளன. இதனால் பெண்களுக்கு எவ்வளவு பாதிப்பையும் வலியையும் தருமோ அதே அளவு பாதிப்பு தான் ஆண்களுக்கும் உண்டாகும்.
    பெண்களுக்கு வருகிற மார்பகப் புற்றுநோயைப் போல ஆண்களுக்கான மார்பக புற்றுநோய் அவ்வளவு எளிதாக யாருக்கும் வருவதில்லை. அது மிகவும் அரிதான ஒன்றுதான் என்றாலும், பெண்களுக்கு எவ்வளவு பாதிப்பையும் வலியையும் தருமோ அதே அளவு பாதிப்பு தான் ஆண்களுக்கும் உண்டாகும்.

    புற்றுநோயைப் பொறுத்தவரையில் விளைவுகளில் எந்தவிதமான மாற்றமும் வேறுபாடும் கிடையாது. அதனால், மார்பகப் புற்றுநோய் வந்ததைவிட அதை சரிசெய்ய முயற்சி செய்வதைவிட, வரும்முன் காப்பதற்கு முயற்சி செய்வது நல்லது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    அறிகுறிகள்

    மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுதான். ஆனால் ஆண்கள் மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டும்தான் வரும் என்று நினைத்துக் கொண்டு, அது காட்டும் சில அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் அஜாக்கிரதையாகக் கடந்துவிடுகிறார்கள். கீழ்கண்ட அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை செய்வது நல்லது.



    மார்பகங்களில் சின்ன சின்னதாக கட்டி வருவது

    மார்புக் காம்புகளின் வடிவத்தில் மாற்றங்கள் உண்டாதல்

    மார்புக் காம்பிலிருந்து நீர் வடிதல்

    மார்புக் காம்புகளில் வலி

    மார்பகம் சிவந்து போதல், தோல் உரிதல் (அ) மார்பில் ஏதேனும் மாற்றங்கள் உண்டாதல்

    எந்த நோயாக இருந்தாலும் அதற்கு நாம் எடுத்துக் கொள்கின்ற மருந்து, சிகிச்சை என ஒருபுறம் இருந்தாலும், அந்த சமயங்களில் நாம் எடுத்துக் கொள்கின்ற உணவுமுறை தான் நோய் குணமடையவும் அதிகமாகவும் காரணமாக அமைகிறது. அதேபோல் தான மார்பகப் புற்றுநோயும். நாம் எடுத்துக் கொள்ளும் டயட் முறை மிகமிக முக்கியம்.
     
    மார்புக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மேலாடையின்றி பாட்டு பாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. #SerenaWilliams #BreastCancer
    வாஷிங்டன் :

    அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடல் ஒன்றை பாடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.  

    ’ஐ டச் மைசெல்ப்’ பாடலை பாடி பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

     ’ஐ டச் மைசெல்ப்” பாடலை எழுதியது ஆஸ்திரேலியாவின் டிவின்ல்ஸ் என்பவர். அவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மார்கப்புற்றுநோயால் 53 வயதில் இறந்துவிட்டார். இப்போது இந்த பாடலைதான் செரீனா தனது இரு கரங்களையும் தனது மார்பில் பதித்து பாடியுள்ளார்.

    ’பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ள செரீனா வில்லியமஸ், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்தேன். வரும்முன் காப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.

    செரீனாவின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுடைய ரசிகர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து செய்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோவை செரீனா வில்லியம்ஸ் பதிவிட்ட 10 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SerenaWilliams #BreastCancer
    பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை குறைக்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை குறைக்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அவற்றுள் ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவை மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருந்து காக்க உதவுகின்றன. அத்தகைய உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.

    கிரீன் டீ, உலகளவில் பரவலாக பருகப்படும் ஆரோக்கிய பானம். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட், உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. அது மார்பக புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் தாக்கும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மரபணுக்கள் சேதம் ஆகாமல் தடுக்கவும் துணைபுரிகிறது. கிரீன் டீயை தொடர்ந்து பருகிவந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். உடல் எடை குறைப்புக்கும் கைகொடுக்கும். ஆனால் தரமான கிரீன் டீயை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

    உடலில் புற்றுநோய் செல்களின் அசாதாரண வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் காய்கறி வகையை சேர்ந்த பிராக்கோலிக்கு இருக்கிறது. மார்பகம், சிறுநீர்பை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் அது முக்கியபங்கு வகிக்கிறது.



    காளான்களை தொடர்ந்து உணவில் சேர்ப்பதும் அவசியமானது. காளான்களை தினமும் உணவில் சேர்க்கும் பெண்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மாதவிடாய் சுழற்சி முடிவடையும் நிலையில் இருக்கும் பெண்கள் காளான்களை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

    தக்காளி பழங்களை வேகவத்து உணவில் சேர்த்தால் உடல்நலம் மேம்படும். அதிலிருக்கும் லீகோபின் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டாக செயல்படுகிறது. பெண்களின் உடலில் லீகோபின் அதிகம் சேர்ந்தால், அவர்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் 22 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கேரட்டில் கரோட்டினாய்டு நிறைந்திருக்கிறது. உடலில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் இருந்தால் மார்பக புற்றுநோய்க்கான அபாயம் 28 சதவீதம் குறையும். அதனால் பெண்கள் கேரட்டை அதிகம் சாப்பிடுவது நல்லது.
    வேப்பிலை மற்றும் வேப்பம்பூவை பயன்படுத்தி மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும் என தெலுங்கானா மாநில மருந்தியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஐதராபாத் :

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வு மைய ஆய்வாளர்கள் வேப்பிலை மற்றும் வேப்பம்பூ மார்பக புற்றுநோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

    மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, பரிசோதனை முயற்சியாக வேப்பிலையில் உள்ள ராசாயண கலவையை சிகிச்சையாக அளிக்கையில் நோயாளியின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்ததை கண்டு ஆராய்சியாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

    இதுகுறித்து ஆராய்சியில் பங்கேற்ற விஞ்ஞானி சந்திரய்ய கொடுகு கூறுகையில், ’வேப்பிலை மற்றும் வேப்பம்பூவில் உள்ள நிம்போலைட்(Nimbolide ) எனும் ரசாயண கலவை மார்பக புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை பெருமளவு கட்டுப்படுத்தி புற்றுநோயை குணப்படுத்த உதவுகிறது. மேலும், கீமோதெரப்பி சிகிச்சையின் பக்க விளைவுகளையும் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளதாக தெரிவித்தார்.

    மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் ஆயூஷ்  உள்ளிட்ட அமைப்புகளின் நிதியுதவியுடன் இந்த புதிய கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    அடுத்தகட்ட ஆராய்ச்சிகளின் மூலம் இந்த புதிய மருந்து கண்டுபிடிப்பு  இறுதி கட்டத்தை எட்ட இன்னும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகலாம்’ என தெரிவித்துள்ளார்.
    ×