search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boy arrested"

    • நெய்வேலி அருகே ஆசை வார்த்தைகூறி சிறுமிக்கு திருமணம் போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மாணவியின் தாய் நெய்வேலி நகர நிலையத்தில் புகார் அளித்தார்.மேலும் தனது மகளை வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அரிபாலன் மகன் ராமு (எ) ராம்குமார்(21) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார்.

    கடலூர்:

    நெய்வேலி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவரது மகள் சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் தோல்வி அடைந்த பாடத்தை தேர்வு எழுதுவதற்கு குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் டியூஷன் சென்டருக்கு தினமும் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் 9-ந் தேதி டியூஷனுக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் தாய் நெய்வேலி நகர நிலையத்தில் புகார் அளித்தார்.மேலும் தனது மகளை வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அரிபாலன் மகன் ராமு (எ) ராம்குமார்(21) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராமு என்கிற ராம்குமார் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது தெரியவந்தது. இதனைய டுத்து ராம் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • சிறுமி பள்ளியில் சேர்ந்து படிக்கும் ஆசையில் கரூரில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்றார்.
    • கடந்த 4-ந் தேதி திண்டுக்கல்லில் வசித்து வந்த தோழியின் தாய் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.

    கவுண்டம்பாளையம்:

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோவை துடியலூர் அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். ஆனால் சிறுமிக்கு வீட்டு வேலை செய்ய பிடிக்கவில்லை. பள்ளிக்கு சென்று படிக்க விரும்பினார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி சிறுமி திடீரென மாயமானார். அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுமியின் தந்தை துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

    சிறுமி பள்ளியில் சேர்ந்து படிக்கும் ஆசையில் கரூரில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்றார். கடந்த 4-ந் தேதி திண்டுக்கல்லில் வசித்து வந்த தோழியின் தாய் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இதனையடுத்து சிறுமி தனது தோழியுடன் திண்டுக்கல்லுக்கு சென்றார்.

    அப்போது சிறுமிக்கும் அவரது தோழியின் தம்பிக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர் சிறுமியை தனியாக அழைத்து சென்று திருமணம் ஆசை காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.போலீசார் விசாரணை நடத்தி தோழியுடன் இருந்த சிறுமியை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது தோழியின் தம்பி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

    இதனையடுத்து துடியலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தன்னை விட்ட 1 வயது அதிகமாக உள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    வழிப்பறியில் ஈடுபட்ட பொன்னேரியை சேர்ந்த சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் தடப்பெரும்பாக்கம் கூட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார்.

    அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது பொன்னேரி அடுத்த லெட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பதும் சாலையில் தனியாக வருபவர்களிடம் கத்தியைக் காட்டிமிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டி இருந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர். #tamilnews
    சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். கட்டிட தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வன் (வயது 42). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. கடந்த 2-ந் தேதி முத்துச்செல்வன் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தோட்டத்திற்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இது குறித்து தட்டார்மடம் போலீசில் அவர் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தட்டார்மடம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற ஒரு சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் உடன்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் புத்தன்தருவையை சேர்ந்த கட்டிட தொழிலாளி செந்தில்வேல் என்பவருடன் சேர்ந்து விவசாயி முத்துச்செல்வன் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. 

    இதையடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் செந்தில்வேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருமழிசை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் 1½ கிலோ கஞ்சா கடத்திய சிறுவனை கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    திருமழிசை அருகே வெள்ளவேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற சிறுவனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 1½ கிலோ கஞ்சா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் அவனது பெயர் யுவராஜ் (வயது 16). திருமழிசையை அடுத்த பிராயம்பேட்டையை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து யுவராஜை கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×