search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது
    X

    வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது

    வழிப்பறியில் ஈடுபட்ட பொன்னேரியை சேர்ந்த சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் தடப்பெரும்பாக்கம் கூட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார்.

    அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது பொன்னேரி அடுத்த லெட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பதும் சாலையில் தனியாக வருபவர்களிடம் கத்தியைக் காட்டிமிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டி இருந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர். #tamilnews
    Next Story
    ×