search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baby care"

    • குழந்தையை தூங்க வைப்பதற்கு தலாலாட்டு பாடல்கள் பாடினார்கள்.
    • தூங்க வைப்பதற்கு டிஸ்ஸு பேப்பரை பயன்படுத்தலாம்.

    பொதுவாக தாய்மார்கள் கஸ்டப்படுகின்ற விஷயம் என்னவென்றால் குழந்தையை தூங்க வைப்பது தான். நம் தாத்தா, பாட்டி எல்லாம் குழந்தையை தூங்க வைப்பதற்கு தலாலாட்டு பாடல்கள் பாடினார்கள். இதனை கேட்டவுடன் பிள்ளைகள் தூங்கிவிடும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மொபைல் போனில் பாட்டை போட்டு குழந்தைகளை தூங்க வைக்கிறார்கள். இதனால் குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கின்றது. நாம் இந்த பதிவில் குழந்தைகளை எப்படி தூங்க வைப்பது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.

    குழந்தையை சீக்கிரம் தூங்க வைப்பதற்கு டிஸ்ஸு பேப்பரை பயன்படுத்தலாம். இதனை முகத்தில் தடவ வேண்டும். அதன்பிறகு டிஸ்ஸுவை கண்களில் முன் எடுத்துவந்து கண்களை சிமிட்டுவது போல செய்ய வேண்டும். இதுபோல செய்வதால் குழந்தைகள் சீக்கிரம் தூங்கிவிடும்.

    குழந்தைகள் நீரின் சத்தத்திற்கு அமைதியாகிவிடும். அதனால் குழாய்க்கு பக்கத்தில் நிற்க வேண்டும் என்று இல்லை. தண்ணீன் சத்தத்தை மொபைல் போனில் பிளே செய்யலாம். இதனால் குழந்தைகள் இதை கேட்டவுடன் சீக்கிரம் தூங்கிவிடும்.

    அதன்பிறகு அறையின் விளைக்கை அனைத்துவிட்டு குழந்தைகளை தூங்க வைக்க வேண்டும். வெளிச்சம் சிறிதளவு இருந்தால் மட்டும் போதும்.

    குழந்தைகளின் தலையை தடவி கொடுக்க வேண்டும். நெற்றியிலும் முதுகிலும் தடவி கொடுக்கலாம். இதன்மூலம் குழந்தைகள் அமைதியாகுவது மட்டுமில்லாமல் தூக்கத்தையும் வர வைக்க உதவுகிறது.

    தொட்டிலில் போட்டு குழந்தையை தூங்கவைக்க வேண்டும். அவ்வாறு தூங்க வைக்கும்போது இருபுறமும் துணி வைக்க வேண்டும். அதன் நடுவில் குழந்தையை போட்டு அணைத்தப்படி போட வேண்டும்.

    • குழந்தை பிறந்து 3 வாரங்களில் கோலிக் வலி தொடங்கும்.
    • குழந்தை நாள் ஒன்றுக்கு 3 மணிநேரம் அழுதல்

    கோலிக் என்பது வயிற்றில் உண்டாகி இருக்கும் வலியினாலோ அல்லது வயிற்றில் ஏற்பட்டிருக்கும் அசவுகரியத்தினாலோ ஏற்படும் வலியினால் அழும் கைக்குழந்தைகளை தேற்ற முடியாமல் இருக்கும் நிலையே இந்த கோலிக் ஆகும். குழந்தை ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கும் மேலாகவும் ஒரு வாரத்தில் 3 நாட்களுக்கு மேலாகவும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தால் அது கோலிக் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    குழந்தை கோலிக் அதாவது பெருங்குடல் வலி கொண்டிருந்தால் அவர்களை எளிதில் சமாதானம் செய்ய முடியாது. இந்த கோலிக் நோய் குழந்தைகளை பாதிக்கும் போது அறிகுறிகள் எப்படி இருக்கும். இந்நிலையில் அவர்களுக்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும். அதற்கான வைத்தியம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    குழந்தை பிறந்து 3 வாரங்களில் தொடங்கும் இந்த வலியானது குழந்தைக்கு 4 முதல் 6 மாதங்கள் ஆகும் போது மறைந்துவிடும். பெரும்பாலும் வாயு அல்லது அஜீரணம் போன்றவை பொதுவான தூண்டுதலாக இருந்தாலும் இதற்கு சரியான காரணம் தெரியவில்லை.

    அறிகுறிகள்:

    * குழந்தை நாள் ஒன்றுக்கு 3 மணிநேரம் அழுதல்

    * வாரத்தில் குறைந்தது 3 நாட்களுக்கு அழுதல்

    * தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு இருந்தால் இது கோலிக் நோய் தான்.

    இந்தநிலையில் குழந்தைகள் முதுகை வளைத்து, முஷ்டிகளை இறுக்கி, வயிற்று தசைகளை இறுக்கி, அழும் போது தங்கள் கைகளையும் முழங்கால்களையும் வயிற்றை நோக்கி வளைப்பார்கள். இந்த அறிகுறிகளை கண்டால் அதற்கு காரணம் இந்த பெருங்குடல் வலியாக இருக்கலாம்.

    கோலிக் வலியால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வழக்கமான எண்ணெய் மசாஜ்கள் பல நன்மைகளை செய்யும். மசாஜ் செய்வதன் மூலம் குழந்தையை சூடாக வைத்திருக்க முடியும். இதன் மூலம் செரிமானத்தை உறுதி செய்யவும் செய்கிறது. வாயுவை தடுக்கவும் செய்கிறது. மசாஜ் செய்வதன் மூலம் குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு நன்றாக தூங்குவார்கள். குழந்தையின் கோலிக் வலி குறைய மசாஜ் சிகிச்சையின் போது தேங்காய் எண்ணெய் போதுமானது.

    எப்படி செய்வது

    ஆலிவ் எண்ணெய் சில துளிகள் சேர்த்து அதில் சில துளி லாவெண்டர் எண்ணெய் கலந்து குழந்தையின் வயிற்றை கடிகார திசையில் வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குழந்தையின் விலா எலும்பு, இடுப்பு, கைகள் மற்றும் கால்களை சேர்த்து மசாஜ் செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு பல முறை இதை செய்ய வேண்டும்.

    குழந்தையை மல்லாக்க படுக்க வைக்க வேண்டும். குழந்தையின் கால்களை எடுத்து அவர்களது அடிவயிற்றில் மென்மையாக வையுங்கள். கால்களை சைக்கிள் சுழற்சி போன்று கால்களை சுழற்றலாம். ஒரே நேரத்தில் இரண்டு கால்களையும் அல்லது ஒவ்வொரு காலையும் மாறி மாறி செய்யலாம். மென்மையாக இதை செய்ய வேண்டும். இதனால் குழந்தையின் உடலில் வாயு தேங்கியிருந்தால் இதன் மூலம் வெளியேற உதவும்.

    கைக்குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு குழந்தையை தூக்கி மார்பில் படுக்க வைத்து முதுகுப்பகுதியை மெதுவாக தட்டி கொடுங்கள். இதன் மூலம் குழந்தை ஏப்பம் வெளியேற செய்யும். குழந்தை பாலை வெளியேற்றாது.

    தாய்ப்பால் கொடுக்க கூடிய கைக்குழந்தைகளுக்கு இந்த குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் அவர்கள் பெருங்குடல் வலி அதாவது கோலிக் நோயில் இருந்து வேகமாக விடுபட முடியும்.

    • குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாக வளர புரதச்சத்து மிக முக்கியம்.
    • ஹோம்மேட் செர்லாக் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகளை தருகிறது.

    பெரும்பாலான தாய்மார்களுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைக்கு என்ன தர வேண்டும் என்பதில் எப்போதும் குழப்பமே. 6 மாதத்துக்குள் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட சிறந்த உணவு எதுவும் இல்லை. சில குழந்தைகள் 5 மாத முடிந்த உடனே திட உணவுக்குத் தயாராகி விடுவார்கள். ஆனால், திட உணவுக்கு குழந்தைகள் தயாரா என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியம்.

    6 மாத குழந்தைக்கு தாய் பால் அவசியம். உங்கள் குழந்தை 6 வது மாதத்தை நிறைவு செய்யும் போது பெரும்பாலான உணவு வகைகள் குழந்தைக்கு அறிமுகமாகியிருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பல்வேறு புதுவித உணவுகளை கொடுக்க வேண்டியது கட்டாயம்.

    குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாக வளர புரதச்சத்து மிக முக்கியம். ஆறு மாதம் முடிந்து ஏழாவது மாதம் தொடங்கும் போது கேழ்வரகு கஞ்சி கொடுக்க தொடங்கலாம். அதுவும், நன்கு அரைக்கப்பட்ட மாவை பயன்படுத்தி ஒரு டீஸ்பூன் மாவுக்கு மூன்று டீஸ்பூன் தண்ணீரை கலந்து ஒரு வேளை கொடுக்க தொடங்க வேண்டும். பிறகு அந்த உணவு குழந்தைக்கு செட் ஆக சிறிது நாட்கள் எடுக்கும். அது செட் ஆக ஆக அளவை அதிகரிக்கலாம்.

    செரலாக் தினமும் ஒரு வேளை கொடுக்கலாம். படிப்படியாக இரண்டு வேளையும் சேர்க்கலாம். இதையே குழந்தைக்கான திட உணவு கொடுக்கும் போது வேக வைத்தும் கொடுக்கலாம். புரதம் நிறைந்த இந்த ஹோம்மேட் செர்லாக் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துகளையும் கொண்டிருக்கிறது என்பதை குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் அறிய முடியும். அத்தகைய செரலாக் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி- 1/2 கிலோ

    உடைத்த கோதுமை- 100 கிராம்

    பாசிபருப்பு- 10 கிராம்

    கருப்பு உளுந்து- 10 கிராம்

    மைசூர் பருப்பு- 10 கிராம்

    கொள்ளு- 10 கிராம்

    பாதாம்- 10

    செய்முறை:

    அரிசியை ஒருமுறைக்கு இருமுறை நன்றாக அலசி அதனை ஒரு வெள்ளை துணியில் போட்டு ஈரம் போகும் வரை நிழலில் உலர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் மேலே கொடுக்கப்பட்டுள்ள அரிசி தவிர மற்ற பொருட்களையும் நீரில் நன்றாக அலசி அதனையும் தனியாக ஒரு துணியில் கொட்டி நிழலில் உலர வைக்க வேண்டும்.

    உலர்ந்த அரியை ஒரு கடாயில் சேர்த்து நன்றாக (நிறம் மாறாமல்) வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று மற்ற பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக பொடித்து அதனை ஜல்லடை கொண்டு சலித்து எடுத்துகொள்ள வேண்டும். இந்த கலவையுடன் சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். 6 மாதம் வரை இந்த பொடியை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். கெட்டுப்போகாது.

    இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதனை ஒரு டம்ளர் நீர் அல்லது பாலில் கட்டி இல்லாமல் கலந்து அந்த கலவையை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். இதனை கட்டிபடாமல் அடுப்பை மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரை கிளிறிக்கொண்டே இருக்க வேண்டும். கூழ் வடிவத்திற்கு இந்த கலவை வந்ததும் தீயை அணைத்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சூடு ஆறியதும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். முதலில் குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக கொடுத்து பழக்கப்படுத்த  வேண்டும்.

    முதல் மாத குழந்தை என்னென்ன செய்யும்… அந்த குழந்தையை பராமரிக்கும் விஷயத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    முதல் மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி எப்படி?

    காது கேட்கும் திறன் அதிகமாக இருக்கும். மற்ற புலன்களைவிட காது கேட்பது மிகவும் கூர்மையாக இருக்கும். பழகியவர்களின் குரலை கேட்டால் குதிப்பது, கால் ஆட்டுவது போன்ற செயல்களை செய்யும். குறிப்பாக, அம்மா, பாட்டி குரல் பழகி இருக்கும்.

    ஒரு அடி தூரத்துக்கு உட்பட்ட பொருட்களை குழந்தைகளாக லேசாகப் பார்க்க முடியும். அதாவது அருகில் உள்ளதை மட்டும் குழந்தைகளால் பார்க்க முடியும். பிரகாசமான ஒளி, மிக நெருக்கமான பிம்பங்கள் ஆகியவை நன்றாகத் தெரியும். அம்மாவின் முகத்தை குழந்தையால் அடையாளம் காண முடியும். அம்மாவின் குரல் கேட்டதும் அழுகையை நிறுத்தும். இரண்டு கைகளையும் விரித்து, முதுகை வில் போன்று குழந்தை வளைக்கும்.

    நம் கவனத்தை ஈர்க்கும். தாய் சரியாக பால் கொடுக்காமல் இருந்தாலோ, மார்பு காம்பு நழுவும் போதோ குழந்தை கோபப்பட்டு உடலை வில் போல வளைக்கும். தாய்ப்பால் குடிக்கும் போது, குழந்தை தன் தாயின் மார்பகங்களில் கைகளை வைத்து வருடவும் செய்யும். கழுத்தில் செயின் இருந்தால் பிடிக்கவும் செய்யும். குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்துக்கு அனுபவம் மிக்க பெரியோர் உடன் இருப்பது நல்லது.

    பெற்றோர் செய்ய வேண்டியவை

    குழந்தையின் பாதங்களில் நெருடுதல் மூலம் குழந்தையின் கூச்சத்தை உணரலாம். இதன் மூலம் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.

    பக்கத்தில் வரும் சத்தத்தை குழந்தை அறிந்து கொள்கிறதா என செக் செய்ய, லேசாக கை தட்டுதல், சொடக்கு போடுதல் ஆகியவற்றை செய்யலாம். இதனால் சத்தம் வரும் இடம் நோக்கி குழந்தை பார்க்கும். மேற்சொன்னதை ஒவ்வொரு பெற்றோரும் முதல் மாதத்தில் அவசியம் செய்ய வேண்டும். இதனால் குழந்தை வளர்ச்சி சீராக இருக்கிறதா என அறிந்து கொள்ள முடியும்.

    தொப்புள் கொடியை அறுத்த பின்பு, குழந்தையின் தொப்புள் அருகே கிளிப் மாட்டுவது உண்டு. 2-3 வாரங்களிலே தொப்புள் பகுதி உலர்ந்து, கிளிப் தானாகவே உலர்ந்து விடும். மிகவும் முக்கியமாக, தொப்புள் பகுதியை கிருமித் தொற்று தாக்காதபடி சுத்தமாக பராமரிக்க வேண்டும். உப்புத்தண்ணீர், சோப், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது. எனினும் மருத்துவர் சொன்னதையே பின்பற்றுங்கள். குழந்தையின் தொப்புளில் ஈரகசிவு தென்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது முக்கியம்.

    குழந்தையின் தலைப் பகுதி சீராக இல்லாமல், பிடறி, நெற்றி, உச்சி போன்ற பகுதிகளில் லேசாக புடைப்பு காணப்படுவதால், கபால ஓட்டு எலும்புகளின் இணைப்பு பலப்பட்டு, தானாகவே சரியாகிவிடும். குழந்தை பால் குடித்த ஒரு மணி நேரம் கழித்து, சமதளம் உள்ள தரையில். கனமான விரிப்பின் மேல், தலையணை இல்லாமல் குழந்தையை படுக்க வைப்பதால் கபால எலும்புகள் இயல்பான நிலைக்கு விரைவில் வர உதவும்.

    பிறந்த குழந்தைகளின் கண்கள் மாறு கண்கள் போல தெரியலாம். கண்களை சுற்றி உள்ள ‘ரெக்டஸ்’ தசைகள் வலுப் பெறும். சில நாட்களில் கண்கள் இயல்பான நிலைக்கு வரும். கண்கள் மஞ்சளாக இருந்தாலோ, பிசுபிசுப்பான பீளை வழிந்தாலோ மருத்துவரிடம் அவசியம் சொல்லுங்கள்.

    பிறந்த குழந்தைகளின் உடலில் பால் போன்ற வெண்மை திட்டுக்கள் காணப்படும். இவற்றை அழுத்தித் துடைக்க கூடாது. தோலின் வறட்சியை சமன் செய்யவே இந்த திட்டுக்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய்த் தடவி வந்தால் விரைவில் சரியாகிவிடும். குழந்தையின் உடலில் கருமை அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் காணப்பட்டால் இவை பல்லாண்டுகள் நீடிக்கலாம். அல்லது குழந்தை வளர வளர சரியாகிவிடலாம்.

    கர்ப்பக்காலத்தில் தாய் உண்ட இரும்பு சத்து மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள், மரபியல் முடி வளர்ச்சி இதன் அடிப்படையில் குழந்தைக்கு முடி வளரும். கருப்பையில் மிதமான வெப்பத்தில் இருந்த காலத்தால் குழந்தைக்கு முடி வளர்ச்சி அதிகமாக காணப்படும். குழந்தை பிறந்த பிறகு 1-2 மாதங்களில் உடலில் உள்ள முடி தானாக உதிரும்.

    குழந்தையின் மார்பகம், பிறப்புறுப்பு பகுதிகளில் லேசான மாற்றம் தெரியும் சில வாரங்களில் இவை சரியாகிவிடும். ஆண் குழந்தைக்கு இரண்டு விதைகள் இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள். இரண்டு விதை இல்லையென்றாலோ ஒரு விதை இல்லையென்றாலோ ‘விதை இறங்கவில்லை’ என மருத்துவரிடம் சொல்லுங்கள்.

    பிறந்த குழந்தை 16 மணி நேரமாவது அவசியம் தூங்க வேண்டும். பகலிலும் இரவிலும் தூங்கி கொண்டே இருக்கும். இரவில் 3-4 முறை, பகலில் தேவைப்படும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    குழந்தைக்கு 2 வாரம் முடிந்த உடனே, குழந்தையை கொஞ்சுவது, ஒலி எழுப்பி கூப்பிடுவது, குழந்தையிடம் பேசுவது போன்றவை செய்தால் குழந்தைக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தை விழித்திருக்கும்போது, தாய் குழந்தையிடம் அவசியம் பேச வேண்டும்.

    குழந்தை உறங்கும் இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தைகள் மூச்சு திணறி இறந்துவிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. பிறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டாம். 
    ×