search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "colic"

    • குழந்தைகளின் அழுகைக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன.
    • குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுவது பசி தான். இது பெரும்பாலும் சரியாக இருந்தாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இது உண்மையாக இருக்காது. குழந்தைகள் அழுவதற்கு உளவில் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.

    பசிக்கு அடுத்தபடியாக குழந்தைகள் பெற்றோரை அழைக்கவே அதிகமான சந்தர்ப்பங்களில் அழுகின்றன. குழந்தைகளால் தனக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு ஏற்படும் எல்லா அசௌகரியங்களுக்கும் ஒரே விளக்கம் அழுகையாக தான் இருக்கும். இதனை சாதாரணமாக நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் குழந்தைகளின் உளவியல் பற்றிய அடிப்படை அம்சங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    குழந்தைகளின் அழுகைக்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாகவும் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க குழந்தைகளின் உளவியல் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

    பொதுவாக பசியை தவிர்த்து குழந்தைகள் அழுவதற்கு பல நேரங்களில் குழந்தைகள் இறுக்கமான ஆடைகளை அணிந்திருப்பதால் அழ ஆரம்பிக்கிறார்கள். அதுமட்டுமன்றி, அவர்கள் இதனை சங்கடமாகவும் உணர்கிறார்கள். எனவே, குழந்தைகளுக்கு எப்போதுமே தளர்வான பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது அவர்களை சவுகரியமாக வைத்திருக்க துணைப்புரியும்.

    தாய் எதை சாப்பிட்டாலும், குழந்தைக்கு பால் கொடுப்பதன் மூலம் அது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது.

    மேலும் வறுத்த மற்றும் காரமான உணவுகளை தாய் அதிகமாக சாப்பிட்டால் அதன் தாக்கம் குழந்தைகளை பெரிதும் பாதிக்கும். இதனால் தான் குழந்தைகள் அழ தொடங்குகிறார்கள். உதாரணமாக, வயிற்று வலி அல்லது வாயு பிரச்சனை போன்றவை ஏற்படும்.

    பல நேரங்களில், தெரிந்தோ தெரியாமலோ, தாய் குழந்தைக்கு அதிக பால் கொடுப்பதுண்டு. அதேசமயம், சில சமயங்களில் அவசர அவசரமாக குழந்தைகளுக்கு உணவளிப்பதும் அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் குழந்தைகள் அழுவதுண்டு.

    மேலும் சிறு குழந்தைகளின் எலும்புகள் மிகவும் மென்மையானதாக இருக்கும். குழந்தைகளை பெற்றோர்கள் கையாளும் போது ஏற்படும் கவனக்குறைவால் அவர்களின் எலும்புகள் பாதிப்படையும் அபாயம் உள்ளது.

    ஒரு குழந்தையின் எலும்பு அதன் இடத்தில் இருந்து நழுவினால், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும். அதனால் குழந்தைகளை கையாளும் போது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

    ஒரு குழந்தை தினமும் மாலையில் ஒரே நேரத்தில் அழுதால், அவர் கோலிக் நோயால் பாதிக்கப் பட்டிருக்கலாம். இந்த நோயினால் குழந்தைகளுக்கு வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலியை அனுபவிக்கிறார்கள்.

    அதனால் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக் கின்றார்கள். பெரும்பாலும் குழந்தைகள் மூன்று மாதங்களுக்கு இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயில், குழந்தைகள் பல மணி நேரம் அழுவார்கள். அதனை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

    • ஏர்பஸ் அளித்த விருந்தில் 2600 ஊழியர்கள் பங்கேற்றனர்
    • பல்வேறு அசைவ உணவுகளும், ஐஸ்கிரீம் வகைகளும் பரிமாறப்பட்டன

    ஐரோப்பாவை மையமாக கொண்டு செயல்படும் முன்னணி விமான தயாரிப்பு பன்னாட்டு நிறுவனம், ஏர்பஸ் (Airbus). பயணிகள் போக்குவரத்து, ராணுவம் மற்றும் விண்வெளி பயன்பாட்டிற்கு விமானங்களை தயாரிக்கும் ஏர்பஸ், உலகிலேயே முன்னணி ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டிலும் கிளை உண்டு.

    பிரான்ஸில் உள்ள தனது நிறுவன ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தளிக்க முடிவு செய்தது ஏர்பஸ் அட்லான்டிக். இந்த விருந்தில் சுமார் 2,600 ஊழியர்கள் பங்கேற்றனர்.

    இந்த விருந்து, மேற்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள லொய்ர்-அட்லான்டிக் (Loire-Atlantique) பிராந்தியத்தில் மாண்டார்-டி-ப்ரெடான் (Montoir-de-Bretagne) பகுதியில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் சொந்த உணவகத்தில் வழங்கப்பட்டது.

    விருந்தில் பல்வேறு உயர்தர அசைவ உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் பரிமாறப்பட்டன.

    ஆனால், உயர்தரமான உணவு வகைகள் வழங்கப்பட்ட இதில் பங்கேற்ற 24 மணி நேரத்தில் சுமார் 700 பணியாளர்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அத்துடன் அவர்களுக்கு தலைவலி, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட உபாதைகளும் சேர்ந்து கொண்டன.

    பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு குடல் அழற்சி நோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்நாட்டு சுகாதார துறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டு, அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

    இது குறித்து ஏர்பஸ் செய்தி தொடர்பாளர், "நாங்கள் விருந்தளித்த ஒவ்வொரு உணவு வகையின் மாதிரியையும் வைத்துள்ளோம். விசாரணைக்கு சுகாதார துறையுடன் ஒத்துழைக்கிறோம். விசாரணை நிறைவடைய சில நாட்கள் ஆகலாம் என நினைக்கிறோம்" என தெரிவித்தார்.

    • 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தை அழுவது இயல்பானது தான்.
    • கைக்குழந்தைகளுக்கு உணர்வுகளை வெளிப்படுத்த அழுகை மட்டுமே ஒரே வழி.

    பிறந்த குழந்தைகள் அடிக்கடி அழுவார்கள். அவர்களின் அழுகைக்கான காரணம் தெரியாமல் பெற்றோரும், குடும்பத்தினரும் திணறுவது உண்டு. பிறந்தது முதல் 6 வாரங்கள் வரை, ஒரு நாளுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தை அழுவது இயல்பானது தான்.

    பசி, சோர்வு, வயிற்றுவலி, வாயுத்தொல்லை, டயப்பர் ஈரமாவது, அதிக குளிர்ச்சியான அல்லது சூடான வெப்பநிலை ஆகியவற்றின் காரணமாக குழந்தைகள் அழுவார்கள். அவர்களின் அழுகைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டால், குழந்தைகளை எளிதாக சமாதானப்படுத்த முடியும். அது பற்றிய சில தகவல்கள்.

     கைக்குழந்தைகளுக்கு வலி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த அழுகை மட்டுமே ஒரே வழி. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று வயிற்றுவலி, இது சாதாரணமானது என்றாலும், வலி நீங்கும் வரை குழந்தைகளின் அழுகையை நிறுத்த முடியாது. குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்தபடி அழுதால் அதற்கு வயிற்றுவலி ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தமாகும்.

     அளவுக்கு அதிகமாக (பால் அல்லது திட உணவுகளை குழந்தைக்கு கொடுக்கும் போது வயிற்று உப்புரத்தால் இது போன்று வலி ஏற்படக்கூடும். இதுதவிர, உணவுடன் அதிகப்படியான காற்று குழந்தையின் வயிற்றுக்குள் சென்றாலும் வலி ஏற்பட்டு குழந்தை அழும். எனவே பாலூட்டியவுடன் குழந்தையை தோளில் சாய்த்தவாறு அதன் முதுகை லேசாக தட்டிக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு செய்வதால் குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற காற்று வெளியேறி வலி நீங்கும். சில நேரங்களில் சாப்பிட்ட உணவு ஏற்படுத்தும் ஒவ்வாமை காரணமாகவும் குழந்தை அழக்கூடும். இதையும் கவனிப்பது அவசியமாகும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள், தாங்கள் சாப்பிடும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு நாம் வழங்கும் உணவு, விரைவாக செரிமானம் ஆகி சிறுநீராகவும், மலமாகவும் வெளியேறிவிடும். இதனால், மீண்டும் பசி எடுக்கக்கூடும்.

    குழந்தை அழும்போது தாய் தன் விரலை நன்றாக சுத்தம் செய்து, குழந்தையின் வாயில் வைக்க வேண்டும். குழந்தை விரலை சூப்பத்தொடங்கினால், பசியால் அழுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    குழந்தைகளுக்கு நாம் உடுத்தும் ஆடை, அவர்களின் சருமத்தை உறுத்தாத வகையில் இருக்க வேண்டும். இறுக்கமான ஆடைகள், சருமத்திற்கு ஒவ்வாத ஆடை ரகங்கள் குழந்தையின் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது குழந்தைக்கு அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். இதன் காரணமாகவும் குழந்தை அழக்கூடும். முடிந்தவரை குழந்தைக்கு பருத்தி துணிகளை மட்டுமே அணிவிக்க வேண்டும்.

    குழந்தைக்கு அணிவித்த டயப்பர் முழுவதுமாக ஈரமாகும் வரை காத்திருக்காமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை மாற்ற வேண்டும்.

    குழந்தைகளை படுக்க வைக்கும் இடம், அவர்களின் ஆடைகள், அவர்கள் இருக்கும் அறை என அனைத்து பகுதியையும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில், சிறு சிறு பூச்சிகள், எறும்புகள் போன்றவை கடிப்பதன் காரணமாகவும் குழந்தைகள் அழக்கூடும்.

    • நேரம் தவறாமல் சாப்பிடுவது அவசியம்.
    • வாயுக்கள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்த்தல் வேண்டும்.

    பொதுவாக உணவில் பெருங்காயம், மிளகு, சுக்கு, பூண்டு, சீரகம், கொத்தமல்லி போன்றவற்றை பயன்படுத்துதல் நல்லது. தண்ணீரை மேல்நோக்கிய நிலையில் குடிக்காமல், வாய் வைத்து அருந்த வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடுவது அவசியம். வேகமாகவோ அல்லது பேசிக்கொண்டோ உண்ணக்கூடாது. வாயுக்கள் நிரம்பிய குளிர்பானங்களை தவிர்த்தல் வேண்டும்.

    உணவுமுறை:

    * சுண்டைவற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம் வகைக்கு தலா 5 கிராம், மிளகு, சுக்குப்பொடி வகைக்கு 2 கிராம், பெருங்காயம் அரை டீஸ்பூன், பொடித்த இந்துப்பு ஒரு கிராம் இவைகளை வறுத்து பொடித்து டப்பாவில் வைத்துக் கொள்ளவும். மதிய உணவின் போது இதில் ஒரு டீஸ்பூன் எடுத்து சூடான சாதத்தில் நெய்விட்டுப்பிசைந்து சாப்பிட வயிற்று உப்பிசம், வயிற்றுப் பொருமல், ஏப்பம், வாயுத்தொல்லைகள் சரியாகும்.

    * சீரகம், ஏலக்காய், சோம்பு, ஓமம் போன்றவற்றை சமஅளவில் எடுத்து பொடித்து தேவையான போது, அரை டீஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்துக் குடித்து வர, ஏப்பம், வயிற்று உப்பிசம், வயிற்றுப் பொருமல் தீரும்.

    * சீரகம், ஓமம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துப் பொடித்து, அதனுடன் பூண்டினை நெய்விட்டு தனியாக வறுத்து அனைத்தையும் பொடித்து, சாதத்துடன் இந்துப்பு சேர்த்து மோர் விட்டு பிசைந்து சாப்பிட்டு வரலாம்.

    * மோருடன் வறுத்த பெருங்காயத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், சுக்குத்தூள் சிறிதளவு வீதம் கலந்து உப்பிட்டுப் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

    * பிரண்டை வடகம், கண்டை வற்றல் சூரணம், ஏலாதி சூரணம், அட்டாதி சூரணம், சீரக வில்வாதி லேகியம், வில்வாதி லேகியம். குன்ம குடோரி மெழுகு போன்ற மருந்துகள் உள்ளன.

    • குழந்தை பிறந்து 3 வாரங்களில் கோலிக் வலி தொடங்கும்.
    • குழந்தை நாள் ஒன்றுக்கு 3 மணிநேரம் அழுதல்

    கோலிக் என்பது வயிற்றில் உண்டாகி இருக்கும் வலியினாலோ அல்லது வயிற்றில் ஏற்பட்டிருக்கும் அசவுகரியத்தினாலோ ஏற்படும் வலியினால் அழும் கைக்குழந்தைகளை தேற்ற முடியாமல் இருக்கும் நிலையே இந்த கோலிக் ஆகும். குழந்தை ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கும் மேலாகவும் ஒரு வாரத்தில் 3 நாட்களுக்கு மேலாகவும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தால் அது கோலிக் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    குழந்தை கோலிக் அதாவது பெருங்குடல் வலி கொண்டிருந்தால் அவர்களை எளிதில் சமாதானம் செய்ய முடியாது. இந்த கோலிக் நோய் குழந்தைகளை பாதிக்கும் போது அறிகுறிகள் எப்படி இருக்கும். இந்நிலையில் அவர்களுக்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும். அதற்கான வைத்தியம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    குழந்தை பிறந்து 3 வாரங்களில் தொடங்கும் இந்த வலியானது குழந்தைக்கு 4 முதல் 6 மாதங்கள் ஆகும் போது மறைந்துவிடும். பெரும்பாலும் வாயு அல்லது அஜீரணம் போன்றவை பொதுவான தூண்டுதலாக இருந்தாலும் இதற்கு சரியான காரணம் தெரியவில்லை.

    அறிகுறிகள்:

    * குழந்தை நாள் ஒன்றுக்கு 3 மணிநேரம் அழுதல்

    * வாரத்தில் குறைந்தது 3 நாட்களுக்கு அழுதல்

    * தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு இருந்தால் இது கோலிக் நோய் தான்.

    இந்தநிலையில் குழந்தைகள் முதுகை வளைத்து, முஷ்டிகளை இறுக்கி, வயிற்று தசைகளை இறுக்கி, அழும் போது தங்கள் கைகளையும் முழங்கால்களையும் வயிற்றை நோக்கி வளைப்பார்கள். இந்த அறிகுறிகளை கண்டால் அதற்கு காரணம் இந்த பெருங்குடல் வலியாக இருக்கலாம்.

    கோலிக் வலியால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வழக்கமான எண்ணெய் மசாஜ்கள் பல நன்மைகளை செய்யும். மசாஜ் செய்வதன் மூலம் குழந்தையை சூடாக வைத்திருக்க முடியும். இதன் மூலம் செரிமானத்தை உறுதி செய்யவும் செய்கிறது. வாயுவை தடுக்கவும் செய்கிறது. மசாஜ் செய்வதன் மூலம் குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு நன்றாக தூங்குவார்கள். குழந்தையின் கோலிக் வலி குறைய மசாஜ் சிகிச்சையின் போது தேங்காய் எண்ணெய் போதுமானது.

    எப்படி செய்வது

    ஆலிவ் எண்ணெய் சில துளிகள் சேர்த்து அதில் சில துளி லாவெண்டர் எண்ணெய் கலந்து குழந்தையின் வயிற்றை கடிகார திசையில் வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குழந்தையின் விலா எலும்பு, இடுப்பு, கைகள் மற்றும் கால்களை சேர்த்து மசாஜ் செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு பல முறை இதை செய்ய வேண்டும்.

    குழந்தையை மல்லாக்க படுக்க வைக்க வேண்டும். குழந்தையின் கால்களை எடுத்து அவர்களது அடிவயிற்றில் மென்மையாக வையுங்கள். கால்களை சைக்கிள் சுழற்சி போன்று கால்களை சுழற்றலாம். ஒரே நேரத்தில் இரண்டு கால்களையும் அல்லது ஒவ்வொரு காலையும் மாறி மாறி செய்யலாம். மென்மையாக இதை செய்ய வேண்டும். இதனால் குழந்தையின் உடலில் வாயு தேங்கியிருந்தால் இதன் மூலம் வெளியேற உதவும்.

    கைக்குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு குழந்தையை தூக்கி மார்பில் படுக்க வைத்து முதுகுப்பகுதியை மெதுவாக தட்டி கொடுங்கள். இதன் மூலம் குழந்தை ஏப்பம் வெளியேற செய்யும். குழந்தை பாலை வெளியேற்றாது.

    தாய்ப்பால் கொடுக்க கூடிய கைக்குழந்தைகளுக்கு இந்த குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் அவர்கள் பெருங்குடல் வலி அதாவது கோலிக் நோயில் இருந்து வேகமாக விடுபட முடியும்.

    ×