search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AP"

    ஆந்திராவில் செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #LockupDeath
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் தென்னேரி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் சத்தியவேடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அனைவரையும் போலீசார் அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இதில், ராஜா (24) என்ற வாலிபர் உயிரிழந்துவிட்டார்.

    உயிரிழந்த ராஜா, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மொண்டியம்மன் நகரை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஆந்திர காவல் நிலையத்தில் தமிழக வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #LockupDeath

    ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். #Lightningkills
    ஐதராபாத்:

    ஆந்திர பிரதேசத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் மின்னல் தாக்கி நேற்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மின்னல் தாக்கியதில் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. நேற்று இரவு பெய்த கனமழையில் மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. கடும் மழையினால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். #Lightningkills
    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்திலிருந்து இன்று சிலர் காரில் சென்றுகொண்டிருந்தனர். மாமண்டூர் என்ற இடத்தின் அருகே கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். #Fivekilled
    ×