search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Allocation of funds"

    • வடக்கு வீதியில் எரிவாயு தகன மேடை அமைத்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்–பட்டுள்ளது.
    • பணியை தி.மு.க துணை செயலாளர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    பாபநாசம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, தமிழக நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் வடக்கு வீதியில் எரிவாயு தகன மேடை அமைத்திட ரூ.1 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்–பட்டுள்ளது.

    வடக்கு வீதியில் நடைபெற்று வரும் எரிவாயு தகன மேடை கட்டமைப்பு பணிகளை தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது மாவட்ட பிரதிநி அறிவழகன், பேரூர் துணை செயலாளர் உதயகுமார், பேரூர் பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய பிரதிநி பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜ், ம.தி.மு.க. பேரூர் செயலாளர் சம்பந்தம், முன்னாள் கவுன்சிலர் விஜி, ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கொட்டாம்பட்டியில் புதிய பஸ் நிலையம் கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மந்தை தெற்கு தெருவில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கொட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.என்.எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கொட்டாம்பட்டி கூட்டுறவு சங்க பதிவாளர் பரமசிவம் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் மதுரை மண்டல இணை பதிவாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இதில் வெங்கடேசன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பகுதி நேர ரேசன் கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இதை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.1000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், கொட்டாம் பட்டி பகுதி வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தி வருகிறேன். இங்கு புதிய பஸ் நிலையம் அமைக்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி புதிய பஸ் நிலையத்திற்கு ரூ.5 கோடி அரசு ஒதுக்கி உள்ளது என்றார்.

    மேலும் கொட்டாம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமை எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் 2400 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க மாவட்ட துணை பதிவாளர் ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலு வலர் முருகேஸ்வரி, மேலூர் மேலாண்மை இயக்குனர் பாரதிதாசன், கொட்டாம்பட்டி கூட்டு றவு சங்கத் தலைவர் வெங்கடாசலம், மேலூர் வட்ட வழங்க அலுவலர் அரவிந்தன், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவ லர் அன்பரசன், கொட்டாம்பட்டி ஊராட்சி செயலர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தரை மட்ட குடிநீர் தொட்டி அமைத்து அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும்.
    • நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் செய்து பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் துரிதமாக மேற்கொள்ள முடியும்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி சாதாரணக் கூட்டம் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமையில் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.இதில் துணைத்தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள்,உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-

    ராஜசேகரன்(திமுக): தமிழக மக்களின் விரும்பத்தின் பேரில் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சரவையில் இடம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஈஸ்வரமூர்த்தி (காங்கிரஸ்): தமிழக அரசிடம் இருந்து அதிக நிதி ஒதுக்கீடு பெற்று மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பல்லடம் நகராட்சியை முதன்மை நகராட்சியாக மாற்ற வேண்டும்.

    கனகுமணி துரைக்கண்ணன்(அதிமுக): ராயர்பாளையம் மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் சரிவர ஏறுவதில்லை. அதனால் அப்பகுதியில் தரை மட்ட குடிநீர் தொட்டி அமைத்து அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். அது வரை அண்ணா நகர், பனப்பாளையம் குடிநீர் மேல்நிலை தொட்டியில் இருந்து தண்ணீர் பெற்று ராயர்பாளையம் பகுதி மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும். ராயர்பாளையம்,பனப்பாளையம் பகுதியில் உள்ள மினி உயர்மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை.

    ருக்மணி சேகர் ( திமுக):- தீர்மான பொருள் 2ல் நகராட்சி வார்டு எண் 16 பனப்பாளையம் பகுதி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், அது 8-வது வார்டு பகுதியில் உள்ளது. எந்தப் பகுதி, எந்த வார்டில் உள்ளது என்பது கூட நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியாதா, பனப்பாளையம் பகுதிகளில், தெரு விளக்குகள் எரிவதில்லை, குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.

    சசிரேகா(பா.ஜ.க): நகராட்சி சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் பிச்சை எடுத்து செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்பதை உணர்த்தவே மண் சட்டி எடுத்து வந்து இருப்பதாக கூறினார். அதற்கு திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க. ஆட்சியின் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று உரக்க சத்தமிட்டனர்.

    பாலகிருஷ்ணன்(திமுக): வரி இனங்கள் நிலுவை வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு தினந்தோறும் சென்று வரி பணத்தை வரி வசூல் மையத்தில் செலுத்த பணியாளர்கள் சொல்லி வருவதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மென்மையான முறையில் கால அவகாசம் அளித்து வரி வசூல் செய்ய வேண்டும். இலக்கை எட்ட வரி வசூல் செய்யக் கூடாது.

    விநாயகம்(ஆணையாளர்): நகராட்சி பகுதியில் 62 சதம் சொத்து வரியும் மொத்தமாக 56 சதம் அனைத்து வரி இனங்களும் நிலுவையில் உள்ளது. அதனால் தான் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் செய்து பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் துரிதமாக மேற்கொள்ள முடியும்.

    இந்த கூட்டத்தில், பல்லடம் நகராட்சி பகுதியில் உள்ள சொத்துக்களை கிரையம், செட்டில்மெண்ட் மற்றும் இதர ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு மேற்கொள்ளும் போது சொத்து விபரத்தில் அதன் சொத்து வரி விதிப்பு எண்,குடிநீர் கட்டண இணைப்பு எண் மற்றும் காலியிட வரி விதிப்பு எண் ஆகியவற்றை குறிப்பிட்டும் நடப்பு தேதி முடிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத் தொகைகளை செலுத்தியுள்ளதை உறுதி செய்தும் அதற்கான ரசீது நகலுடன் பத்திர பதிவு மேற்கொள்ள பல்லடம் சார்பதிவாளரை கேட்டுக்கொள்ளுதல் உள்ளிட்ட 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • அணைக்கட்டு ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடந்தது.

    மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு, ஒன்றியக் குழு துணை தலைவர் சித்ரா முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் 15-வது நிதிக்குழுவில் இருந்தும், பொது நிதியிலிருந்தும் தலா ஒரு கவுன்சிலருக்கு ரூ. 8.40 லட்சம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வ தற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு ஒன்றிய கவுன்சிலர்கள் முன் அறிவித்தார்.

    அதன்படி 26 கவுன்சிலர்களுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 18 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    15-வது நிதி குழுவில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3.40 லட்சத்தை ஒன்றிய கவுன்சி லர்கள் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளின் கழிப்பறை, சத்துணவு மையம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

    • மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்
    • பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் திட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளித்த உடனே பணிகளை தொடங்க வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும.

    அணைக்கட்டு மற்றும் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும். சிமெண்டு தளத்துடன் கூடிய கழிவுநீர் கால்வாய் பேவர் பிளாக் சாலை அமைக்க மொத்தம் ரூ.32 லட்சத்து 26 ஆயிரம் பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.
    • வரும் 28-ந் தேதி டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்த கோவை கருமத்தம்பட்டி, உளுந்தூர் பேட்டை, பேட்டை, திருக்கோவிலுார், சோளிங்கர், திருப்பூர் திருமுருகன்பூண்டி, மாங்காடு, திட்டக்குடி, தாரமங்கலம், பள்ளப்பட்டு, திருச்செந்தூர், முசிறி ஆகியவை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

    நகராட்சி கட்டமைப்பில் நிர்வாக அலுவலகம், நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவு, சுகாதாரப்பிரிவு, பிறப்பு, இறப்பு சான்று வழங்கும் பிரிவு, வரி வசூல் மையம் என பல்வேறு பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்.கமிஷனர் தலைமையில், ஒவ்வொரு பிரிவுக்கும் அதிகாரிகள் மற்றும் அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.

    அதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வரும் நிலையில் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளுக்கு புதிய அலுவலகம் கட்ட அரசின் சார்பில் தலா ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிதியின் மூலம் புதிய அலுவலகத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. வரும் 28-ந் தேதி டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.

    • ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு
    • ஓராண்டில் பணி முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    வேலூர்:

    வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

    இங்கு வரும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளியூர்க்காரர்கள் ஆற்காடு ரோட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி உள்ளனர். இவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதால் ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    ஒருவழிப்பாதை, சாலைகளில் தற்காலிகத் தடுப்புகள் என பல்வேறு மாற்றங்கள் செய்தாலும் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைப்பது என்பது எட்டாக்கனியாக உள்ளது.

    சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வருபவர்களுக்கு சுரங்க நடை பாதை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் என சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வேலூர் மக்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் ஆற்காடு ரோட்டில் சி.எம்.சி. ஆஸ்பத்திரி முன்பு சுரங்க நடைபாதை அமைக்க அரசு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    இதனையடுத்து இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ, . மேயர் சுஜாதா ஆனந்த குமார் ஆகியோர் ஆற்காடு ரோட்டில் சிஎம்சி ஆஸ்பத்திரி முன்பு சுரங்க நடைபாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    சுரங்க நடைபாதை எந்த இடத்தில் அமைத்தால் வசதியாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து சிஎம்சி நிர்வாகத்தினரிடம் சுரங்கப்பாதை அமைக்க இடம் அளிப்பது குறித்தும் எந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை செய்தனர்.

    இது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:- ஆற்காடு ரோட்டில் சி.எம்.சி. ஆஸ்பத்திரி முன்பு சுரங்க நடைபாதை அமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இதற்கான இடம் தேர்வு குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது.

    ஓராண்டு காலத்தில் சிறந்த சுரங்க நடை பாதை பணி முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி கமிஷ்னர் அசோக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் உடனிருந்தனர்.

    ×