என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "New office"
- மாவட்ட தலைவர் மோகன்ராஜ் திறந்து வைத்தார்.
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மாநிலத் தலைவர் அறிவுரையின்படி கொடியேற்றுதல் கட்சி அலுவலகங்கள் திறப்பு, பொதுமக்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஊட்டி அருகே எல்லநல்லி பகுதியில் பா.ஜ.க.வின் புதிய கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. அலுவலகம் முன்பு கொடியேற்றப்பட்டு மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். மண்டல் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பரமேஸ்வரன், ஈஸ்வரன் மற்றும் மகளிர் அணி தலைவர் திலகேஸ்வரி, எல்லநல்லி கிளை தலைவர் கார்த்திக் கண்ணன், பொது செயலாளர்கள் பெள்ளன், குரு மாதேஷ், மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் வருண், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் தங்கதுரை உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது
- முசிறி நகராட்சி வளாகத்தில் நடந்தது
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் புதிய அலுவலகம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா, கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், ஸ்டாலின் குமார், நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டினர். நகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தில் தரைதளத்தில் 6860 சதுர அடியில் ஆணையர் அளவு, பொதுப் பிரிவு, வருவாய் பிரிவு, பொது சுகாதார பிரிவு, அலுவலகக் கூட்டம் அரங்கம், கணினி பிரிவு ஆகியவை கொண்டதாகவும் முதல் தளத்தில் 6400 சதுர அடியில் நகர் மன்ற தலைவர் அறை, பொறியாளர் அறை, பொரியர் பிரிவு, நகரமைப்பு பிரிவு, மற்றும் நில அளவை பிரிவு உட்பட ஆகிய அறைகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் நகர செயலாளர் சிவக்குமார், நகராட்சி பொறியாளர் தாண்டவ மூர்த்தி (பொறுப்பு), தலைமை எழுத்தர் சேவியர், சுகாதார ஆய்வாளர் மலையப்பன், மேற்பார்வையாளர் சையது முகமது, நகர மன்ற ஊழியர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிரைவில் நகர் மன்ற துணைத் தலைவர் சுரேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
- பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.
- வரும் 28-ந் தேதி டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.
திருப்பூர்:
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்த கோவை கருமத்தம்பட்டி, உளுந்தூர் பேட்டை, பேட்டை, திருக்கோவிலுார், சோளிங்கர், திருப்பூர் திருமுருகன்பூண்டி, மாங்காடு, திட்டக்குடி, தாரமங்கலம், பள்ளப்பட்டு, திருச்செந்தூர், முசிறி ஆகியவை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
நகராட்சி கட்டமைப்பில் நிர்வாக அலுவலகம், நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவு, சுகாதாரப்பிரிவு, பிறப்பு, இறப்பு சான்று வழங்கும் பிரிவு, வரி வசூல் மையம் என பல்வேறு பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்.கமிஷனர் தலைமையில், ஒவ்வொரு பிரிவுக்கும் அதிகாரிகள் மற்றும் அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.
அதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வரும் நிலையில் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளுக்கு புதிய அலுவலகம் கட்ட அரசின் சார்பில் தலா ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிதியின் மூலம் புதிய அலுவலகத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. வரும் 28-ந் தேதி டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்