search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ajay Gnanamuthu"

    • திருச்சி, மதுரையை தொடர்ந்து கோவையில் ரசிகர்களை சந்தித்தார் விக்ரம்.
    • ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகிறது கோப்ரா.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது.

    இப்படத்தில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் 'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


    தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் இந்த திரைப்படத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் திருச்சி, மதுரை உள்பட பல இடங்களில் கல்லூரிகளிலும், முன்னணி வணிக வளாகங்களிலும் ரசிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். 


    அந்த வகையில் நேற்று கோவையிலுள்ள ஜி ஆர் டி கல்லூரி வளாகத்திலும், ப்ரோஸோன் வணிக வளாகத்திலும் மாணவ மாணவிகளின் முன்னிலையில் கோப்ரா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சீயான் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். 


    அப்போது விக்ரம் பேசியதாவது: கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லர், எமோஷனல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை ஆக்டேன் ஆக்சன் ஃபிலிம் என எல்லாம் கலந்த மாஸ் எண்டர்டெய்னர் திரைப்படம். இயக்குநர் அஜய் ஞானமுத்து, இயக்கத்தில் வெளியான 'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' என ஒவ்வொன்றும் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியானது. 


    அதேபோல் 'கோப்ரா' படமும் வித்தியாசமான ஜானரில் தயாராகி இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும்.‌ இந்தப் படத்தில் நான் ஏழு கெட்டப்புகளில் நடித்திருக்கிறேன். அதுவும் இந்த படத்தின் திரைக்கதையில் முக்கியமான அம்சம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.
    • இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற உள்ளது.

    விக்ரம்

    விக்ரம்

     

     

    இதில் பங்கேற்பதற்காக விக்ரம் மற்றும் கோப்ரா படக்குழுவினர் உள்ளிட்ட 9 பேர் இன்று காலை 8.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றனர். அவர்களை வரவேற்க ரசிகர்கள் ஏராளமானோர் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

    விக்ரம்

    விக்ரம்

     

    விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விக்ரமை பார்த்த ரசிகர்கள் ஆர்வம் மிகுதியில் அவரை சூழ்ந்து கொண்டு ஆரவாரத்தில் ஈடுபட்டனர். பலர் முண்டியடித்துக் கொண்டு அவருக்கு முன்பாக நின்று செல்பி எடுக்க முயன்றனர். பாதுகாப்பு கருதி போலீசாரும் விக்ரமை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தனர். அப்போது அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.

     

    இந்நிலையில் அவர்களை மீறி ரசிகர்கள் விக்ரமை நெருங்க முயன்றபோது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரசிகர்களை அடித்து துரத்தினர். இதனால் விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விக்ரமை பாதுகாப்புடன் அழைத்து சென்று காரில் அனுப்பி வைத்தனர். 

    • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.
    • இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

     

    கோப்ரா

    கோப்ரா

    லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 'கோப்ரா' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கோப்ரா

    கோப்ரா

     

    இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி கோப்ரா படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் அடுத்த வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.
    • இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    விக்ரம் - அஜய் ஞானமுத்து

    விக்ரம் - அஜய் ஞானமுத்து

    மேலும், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள "பொன்னியின் செல்வன்" திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் "சியான் 61" என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

     

    விக்ரம் - அஜய் ஞானமுத்து

    விக்ரம் - அஜய் ஞானமுத்து

    இப்படங்களை தொடர்ந்து கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் மீண்டும் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அண்மையில் டிவிட்டர் ஸ்பேசில் கோப்ரா படக்குழுவினருடன் உரையாடிய விக்ரம், மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளேன் எனக் விக்ரம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    `கடாரம் கொண்டான்', `மஹாவீர் கர்ணா' படங்களை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை அஜய் ஞானமுத்து இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    `டிமாண்டி காலனி', `இமைக்கா நொடிகள்' படங்களை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

    விக்ரமின் 58-வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதல்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. படத்தை 2020 கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளனர்.


    7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் மற்றும் வயாகாம் 18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம், ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் உருவாகும் இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்றும் பணியாற்றவிருக்கும் நடிகர்கள், கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    விக்ரம் தற்போது `மஹாவீர் கர்ணா' படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க இருக்கிறார். விக்ரம் நடிப்பில் அடுத்ததாக `கடாரம் கொண்டான்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்துள்ளார்.

    விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது பற்றி சில தகவல்கள் வைரலாகி வருகிறது.
    விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. பொதுவாக விஜய், அஜித் ஆகிய இரு நடிகர்களுமே ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே அவர்களின் அடுத்த படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாக தொடங்கும்.



    இருவருமே அதிக அளவில் இளம் இயக்குனர்களுக்கும் புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்கள். ஆனால் சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் இவர்களை அணுக முடியாத சூழல் இருந்தது. விஜய் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்களுக்கு சில இளம் இயக்குனர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

    மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அவரிடமும் கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜிடமும் விஜய் கதை கேட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த வரிசையில் இமைக்கா நொடிகள் அஜய் ஞானமுத்துவும் இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அஜய் ஞானமுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்காக தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனுராக் காஷ்யப், விக்ரமுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப். இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த அவரது கதாபாத்திரத்திற்குநல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுராக் காஷ்யப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுராக் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்க இருக்கிறது. விக்ரம் தற்போது `மஹாவீர் கர்ணா' படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

    விக்ரம் நடிப்பில் அடுத்ததாக `கடாரம் கொண்டான்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்துள்ளார்.

    இமைக்கா நொடிகள் படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க இருக்கிறார். #Vikram #AjayGnanamuthu
    திரில்லர் படங்கள் இயக்குவது இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் பாணி. இவரது முதல் படமான டிமாண்டி காலனி திரைப்படம் ஹாரர் திரில்லர் பாணியில் வெளியாகி கவனம் பெற்றது. சில மாதங்களுக்கு முன் நயன்தாரா முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்த இமைக்கா நொடிகள் கிரைம் திரில்லர் பாணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி அந்தப் படத்தில் நடித்திருந்தனர். 

    இந்த நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படம் ஆக்‌‌ஷன் திரில்லர் பாணியில் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க உள்ளார். விக்ரம் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் `கடாரம் கொண்டான்' படத்தில் நடித்து வருகிறார். ராஜேஷ்.எம்.செல்வா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. 



    இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் மலையாளத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் `மகாவீர் கர்ணா' படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பின் அவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 

    டிமாண்டி காலனி படம் வெளிவந்த பின்பு 2016-ம் ஆண்டிலேயே அஜய்-விக்ரம் கூட்டணியில் புதிய படம் உருவாக இருந்தது. ஆனால் அப்போது அது கைகூடவில்லை. இருவரும் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணையவிருக்கின்றனர். அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அ]றிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #Vikram #AjayGnanamuthu

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் `இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லான நடித்துள்ள அனுராக் காஷ்யப்பின் நடிப்பை பார்த்து நீங்கள் பயப்படுவீர்கள் என்று ஆர்.டி.ராஜசேகர் கூறினார். #ImaikkaNodigal
    கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் `இமைக்கா நொடிகள்' வருகிற ஆகஸ்ட் 30-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமான இதில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக நயன்தாராவும், நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். 



    படம் பற்றி பேசிய ஆர்.டி.ராஜசேகர் பேசும் பேசியதாவது, 

    படத்தின் செலவை பொருட்படுத்ததாது சுதந்திரம் அளித்த தயாரிப்பாளர் கோவிந்தராஜுக்கு நன்றி. அதர்வா இந்த படத்தில் அழகாகவும், மிகவும் ஸ்டைலாகவும் இருக்கிறார். கேமராவின் மொழியை புரிந்து கொண்டு, அதற்கேற்ப சரியாக தன்னை வெளிப்படுத்துவதிலும், நடிப்பதிலும் நயன்தாரா நிபுணத்துவம் வாய்ந்தவர். ராஷி கண்ணா திரையில் ஒரு தேவதையாக வந்து, தனது அழகால் அனைவரது மனதையும் கொள்ளையடிப்பார். இறுதியாக, அவரை பற்றி விவரிக்க சொற்கள் இல்லை, அவர் ஒரு மேதை. நீங்கள் அவரது நடிப்பை பார்த்து பயம் கொள்வீர்கள் என அனுராக் காஷ்யாப்பின் வில்லத்தனத்தை பற்றியும் பேசினார். #ImaikkaNodigal #Atharvaa #Nayanthara

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா - நயன்தாரா - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் `இமைக்கா நொடிகள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #ImaikkaNodigal
    கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `இமைக்கா நொடிகள்'.

    ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமான இதில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக நயன்தாராவும், நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

    பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். 
    சமீபத்தில் வெளியாகிய பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் டிரைலரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நிலையில், படம் வருகிற 30-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #ImaikkaNodigal #Atharvaa #Nayanthara

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா சி.பி.ஐ. அதிகாரியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ImaikkaNodigal #Nayanthara
    நயன்தாரா வழக்கமான காதல், காமெடி படங்களில் இருந்து விலகி வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கிறார். நல்ல கதைகளுடன் வரும் புதுமுக இயக்குனர் படங்களையும் ஒப்புக்கொள்கிறார். இதனால் நாயகர்களுக்கு இணையாக பேசப்படுகிறார்.

    நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வந்த அனைத்து படங்களுமே அவரது கதாபாத்திரத்தை உயர்த்தி இருந்தன. அறம் படத்தில் கலெக்டராக வந்தார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க அரசியல்வாதிகளை எதிர்த்து நின்று போராடும் அவரது கலெக்டர் கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன.

    தற்போது ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் துணிச்சலான சி.பி.ஐ. அதிகாரியாக வருகிறார். இந்த கதாபாத்திரத்துக்காக தலைமுடியை குறைக்க சம்மதித்தாராம். அவரது சி.பி.ஐ. அதிகாரி தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. இதில் நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் வருகிறார். அவரது தம்பியாக அதர்வா நடித்துள்ளார். இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக வருகிறார்.



    இந்த படமும் நயன்தாராவின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்கின்றனர். கோலமாவு கோகிலா, கொலையுதிர்காலம் என்று மேலும் 2 கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நயன்தாரா நடிக்கிறார். கோலமாவு கோகிலா படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவுடன் காதல் பாடலில் நடித்து இருந்தார். அந்த பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் அஜித்துடன் விஸ்வாசம், சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, அறிவழகன் இயக்கத்தில் த்ரில்லர், சர்ஜுன் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாகி இருக்கிறார். #ImaikkaNodigal #Nayanthara

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா - நயன்தாரா - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் `இமைக்கா நொடிகள்' படத்தின் இசை மற்றும் டிரைலர் அறிவிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #ImaikkaNodigal
    கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் `இமைக்கா நொடிகள்'.

    ஆக்‌ஷன் த்ரில்லராக படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். அதர்வா அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

    மேலும் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். 



    ஏற்கனவே படத்தில் இருந்து `காதலிக்காதே', `விளம்பர இடைவெளி' என்று இரண்டு பாடல்கள் ரிலீசாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் காலை 10 மணியளவில் படத்தின் டிரைலரும் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
    படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ImaikkaNodigal #Atharvaa #Nayanthara

    ×