search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare works"

    • திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
    • பூமலூர் தியாகராஜன், அம்மாபாளையம் குமார், ராஜேஸ்வரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ. 52 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் ரோடு அமைத்தல், ஆழ்குழாய் கிணறு அமைத்தல், தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நலத்திட்ட பணிகளை திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் பல்லடம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், ஒன்றியக்குழு தலைவர்கள் பல்லடம் தேன்மொழி, பொங்கலூர் வக்கீல் குமார், ஒன்றியக்குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், பல்லடம் நகர மன்ற முன்னாள் தலைவர் பி.ஏ. சேகர், நெசவாளர் அணி தலைவர் எஸ்.கே.டி. சுப்பிரமணியம், சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, துணை தலைவர் மருதாச்சலமூர்த்தி, செயலாளர் சுரேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பரமசிவம், துரைமுருகன், அன்பரசன், பூமலூர் தியாகராஜன், அம்மாபாளையம் குமார், ராஜேஸ்வரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2000-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பரிசுத்தொகையும், சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது.
    • உலகத்திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படுகிறது .

    கள்ளக்குறிச்சிடு

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் இலவச திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:- திருக்குறளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, 1,330 திருக்குறளை மனப்பாடமாக கூறும் மாணவர்களுக்கு 2000-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பரிசுத்தொகையும், சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது. உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 ஆண்டுகளுக்கு 2,000 திருக்குறள் புத்தகங்களை விலையில்லாமல் வழங்க முன்வந்துள்ளது. அதன்படி,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு உலகத்திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படுகிறது . இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சின்னசேலம்,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சின்னசே லம்,பெரிய சிறுவத்தூர் மேல்நிலைப்பள்ளி, பெரிய சிறுவத்தூர் மாதிரி பள்ளி, தாகம்தீர்த்தாபுரம் மேல்நிலைப்பள்ளி, நயினார்பாளையம் மேல்நிலைப்பள்ளி, அரங்கநாதபுரம் உயர்நிலை ப்பள்ளி, மூரார்பாது மகளிர் உயர்நிலை ப்பள்ளி, சேஷச முத்திரம் உயர்நிலைப்பள்ளி, சித்தால் அரசு மாதிரிப் பள்ளி, சித்தேரிப்பட்டு மேல்நிலைப்பள்ளி, அரசம்பட்டு மேல்நிலைப்ப ள்ளி, ஏமப்போர் உயர்நிலைப்பள்ளி எனமொத்தம் 15 அரசு பள்ளி மாணவர்களுக்கு 750 திருக்குறள் புத்தகம் ரூ.7 ஆயிரம் மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் வழங்கி னார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாரா யணன், முன்னாள் இணை இயக்குநர் (நலப்பணிகள்) உதயகுமார், பாரதியார் தமிழ்ச்சங்கம் தலைவர் தியாகதுருகம் துரைமுருகன், சின்னசேலம் திருக்குறள் பேரவை தலைவர்பாசுகரன் என்ற பூங்குன்றன், முன்னாள் துணை கலெக்டர் கிருட்டிணசாமி,மாவட்டத் தொடர்பாளர் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் புலவர் அய்யா மோகன்,அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • நீதித் துறை, அரசுத் துறை, காவல் துறை அலுவலா்களுடனான விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது.
    • ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் கல்வித்தரம், பயிற்றுநிலை, வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆதித்திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நீதித் துறை, அரசுத் துறை, காவல் துறை அலுவலா்களுடனான விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் தீபக் ஜேக்கப், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் கல்வித்தரம், பயிற்றுநிலை, வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

    விடுதிகளில் விளையாட்டு வசதிகள், நூலக மேம்பாடு, தோ்வு ஆயத்தப் பயிற்சிகள் ஆகியவற்றுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பொங்கல் திருநாள், அம்பேத்கா் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளையொட்டி, ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளின் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கலைப்போட்டிகள், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் போன்றவற்றை நடத்த வேண்டும்.

    அரசுப் பணியிடங்கள், கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். ஆதிதிராவிடா்களுக்கு பூமிதான நிலங்களை வழங்கவும், அளிக்கப்பட்ட நிலங்களை பேணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்புடைய அலுவலா்கள் அனைத்து பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் இலக்கியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.22.46 கோடி மதிப்பிலான மக்கள் நலத் திட்ட பணிகள் தொடங்கபட்டது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரூ.22.46 கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்புலியூர் சிலோன் காலனி அருகில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.49.21 லட்சம் மதிப்பீட்டில் கீழப்புலியூர் சிலோன் காலனி முதல் சிறுகுடல் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், நமையூர் கிழக்கு தெரு, முருக்கன்குடி பேருந்து நிலையம் அருகில் (பொன்னகரம் காலனி தெரு) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.22.30 லட்சம் மதிப்பீட்டில் சிறுமத்தூர் முன்னுரிமை பணிகளையும், நோவா நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நல குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.12.20 லட்சம் மதிப்பீட்டில் திருமாந்துறை நோவா நகரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும், பென்னகோணம் வடக்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் பென்னக்கோணம் தேரோடும் வீதியில் (வடக்கு வீதி) தார்சாலை அமைக்கும் பணியினையும், நன்னை பேருந்து நிலையத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.24.90 லட்சம் மதிப்பீட்டில் நன்னை கிளியூர் தார்சாலையை அமைக்கும் பணியினையும், மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.6.54 கோடி மதிப்பீட்டில் நன்னை முதல் பரவாய் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், கோவிந்தராஜபட்டிணம் ஆற்றுக்கு செல்லும் பாதையில் நபார்டு – 28 திட்டத்தின் மூலம் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் கோவிந்தராஜபட்டிணம் முதல் கைப்பெரம்பலூர் வரை ஆற்றுப்பாலம் அமைக்கும் பணியினையும், வீரமநல்லூர் ஏரிக்கரை அருகில் மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் வீரமநல்லூர் முதல் குழுமூர் வரை சாலை மேம்படுத்துதல் பணியினையும், கீழப்பெரம்பலூர் பிள்ளையார் கோவில் தெருவில் மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டில் கீழப்பெரம்பலூர் முதல் கோழியூர் வரை சாலை அமைக்கும் பணியினையும்,கீழப்பெரம்பலூர் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.61.00 லட்சம் மதிப்பீட்டில் கீழப்பெரம்பலூர் ஜெய்குமார் கடை முதல் ஆதிதிராவிடர் காலனி செல்லும் வரை சாலை அமைக்கும் பணியினையும், அகரம் சீகூர் – அரியலூர் ரோடு பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் ரூ.21.20 லட்சம் மதிப்பீட்டில் அகரம்சீகூர் மேல்நிலைநீர்தேக்கதொட்டி அமைக்கும் பணியினையும் என மொத்தம் 22.46 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து, பணிகளை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னதாக விரைந்து முடிக்க வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திருமதி முத்தமிழ்செல்வி மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், பிரேமலதா ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், கீழ பெரம்பலூர் சத்யா காமராஜ், நன்னை சின்னு, அகரம்சீகூர் முத்தமிழ் செல்வன் துணை தலைவர் இந்துமதி தர்மராஜ் ஒன்றிய கவுன்சிலர் பெரு கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 15 வது நிதி குழு மானிய நிதியிலிருந்து கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.
    • அல்லாளபுரம் பகுதியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார்.

    பல்லடம் :

    பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சியில் சக்தி நகர், ஜோதி நகர் ,லட்சுமி நகர், கங்கா நகர் அமரஜோதி கார்டன் உள்ளிட்ட இடங்களில் 15 வது நிதி குழு மானிய நிதியிலிருந்து ரூ.47.39 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார். பல்லடம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் ஒன்றியக் குழு தலைவர் குமார், பல்லடம் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சிகளில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக அவர் அல்லாளபுரம் பகுதியில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில்,பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், வேலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜ், பூமலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செந்தில், கணபதிபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் முருகன், கதிஜா, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கதிரேசன், ரவி தண்டபாணி, கோவிந்தம்மாள், செல்வராஜ்,ஜெயலட்சுமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் , பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கரிசல்குளத்தில் நடந்த கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
    • தொடர்ந்து புதூர் அருகே ரெட்டியார்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.5.50 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் வைப்பார் ஊராட்சி வைப்பார், கலை ஞானபுரம், கல்லூரணி, துலுக்கன்குளம் கிராமங் களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ரூ.1.02 கோடி மதிப்பில் 850 குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி தொடக்க விழா நடை பெற்றது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    மேலும், வைப்பார் சாலையில் இருந்து கல்லூ ரணி சாலை வரையில் முதல் -அமைச்சரின் கிராம சாலைகள் மேம் பாட்டு திட்டத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம் அருகே கரிசல்குளத்தில் நடந்த கலை ஞரின் வருமுன் காப் போம் திட்ட இலவச மரு த்துவ முகாமை தொட ங்கி வைத்து குழந்தை களுக்கான ஊட்டச்சத்து பெட்டகங் களை வழங்கினார்.

    தொடர்ந்து புதூர் அருகே ரெட்டி யார்பட்டி யில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.5.50 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். மேலும் நாகலாபுரம் அரசு கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சாலையில் இருந்து ஓடையை கடந்து செல்வதற்கு ஏதுவாக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் கட்டப்பட உள்ள பாலத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    பின்னர் என்.வேடப்பட்டி முதல் புதுப்பட்டி அச்சங்குளம் வரை முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமார் ரூ.70.98 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிகளில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன், ஒன்றிய தி.மு.க. செய லாளர்கள் அன்பு ராஜன், சின்ன மாரிமுத்து, ராத கிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், முத்துக்குமார், வடக்கு மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரகனி காளிமுத்து, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடி தொகுதியில் நலத்திட்ட பணிகளை முருகேசன் எம்.எல்.ஏ. ெதாடங்கி வைத்தார்.
    • எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையையும் திறந்து வைத்தார்.

    பரமக்குடி

    பரமக்குடி நகராட்சி சார்பாக 17-வது வார்டு கொல்லம்பட்டறை தெருவில் போர்வெல் அமைக்கும் பணியினை நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், நகராட்சி பொறியாளர் மீரானலி, உதவி பொறியாளர் சுரேஷ்குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் சதீஷ்குமார், சுகன்யா, கவிதா, துர்கா, வசந்த கல்யாணி, நகர துணைச் செயலாளர் வேலன், தெற்கு நகர் பொருளாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் போகலூர் ஒன்றியம் குமுக்கோட்டை ஊராட்சி பூவிளத்தூரில் எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் போகலூர் ஒன்றிய செய லாளர்கள் குணசேகரன் (மேற்கு), கதிரவன்(கிழக்கு), ஒன்றியக் குழு துணை தலைவர் பூமிநாதன், போகலூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • சிவகங்கை மாவட்டம் சிராவயலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • கல்லல் பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிராவயலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, பாதரக்குடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கம், கீழ பட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கண்டன மாணிக்கம் ஊராட்சியில் 2021-22-ம் ஆண்டிற்கான நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, சிராவயல் ஊராட்சி மன்ற தலைவர் சரோஜாதேவி குமார், பாதரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி மீனா அழகப்பன், கீழ பட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா கார்த்திகேயன், கண்டரமாணிக்கம் ஊராட்சி வளர்ச்சி குழு தலைவர் கே.ஆர்.மணிகண்டன், ஊரக முகமை, வருவாய் துறை அலுவலர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மதி கிருஷ்ணா புரத்திலிருந்து உச்சிமேடு வரை சாலை அமைக்க ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • புது தெருவில் சாலை அமைக்க ரூ.12 லட்சத்து 81 ஆயிரம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து நிதியிலிருந்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க பாகூர் திருமூலநாதர் நகரில் ரூ.18 லட்சத்து 12 ஆயிரம் செலவில் தார் சாலை அமைக்கவும், மதிகிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் முதல் பள்ளக்ககொரவள்ளிமேடு வரை சாலை அமைக்க ரூ. 7 லட்சத்து 45 ஆயிரம் செலவிலும், மதி கிருஷ்ணா புரத்திலிருந்து உச்சிமேடு வரை சாலை அமைக்க ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கமலா நேரு திருமண மண்டபத்திற்கு வாகனம் நிறுத்தம் அமைக்க ரூ. 7 லட்சத்து 58 ஆயிரம் செலவிலும், பாகூர்பேட் புது நகரில் கோனா மதகு வாய்க்காலில் தடுப்பு சுவர் அமைக்க ரூ.19 லட்சத்து 77 ஆயிரம் செலவிலும், காட்டுக்குப்பம் எம்.ஜி.ஆர். நகர், மாரியம்மன் கோவில் வீதியில் சாலை அமைக்க ரூ.23 லட்சத்து 7 ஆயிரம் செலவிலும், கொரவள்ளிமேடு வடக்குத்தெரு வண்ணாகுளம் புது தெருவில் சாலை அமைக்க ரூ.12 லட்சத்து 81 ஆயிரம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் நிதியிலிருந்து குருவிநத்தம் பெரியார் நகர் குடிநீர் தொட்டியை ரூ. 3 லட்சத்து 95 ஆயிரத்திற்கு புதுப்பித்தல் பணிக்கு திட்டமிடப்பட்டது. திட்டப்பணிகான மொத்த மதிப்பு ரூ.1கோடியே 7லட்சமாகும். இதற்கான பணிகளை தொடங்க பூமி பூஜை அந்தந்த கிராமங்களில் கடந்த 2 நாட்களாக நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஆணையர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் பிரதீப், புனிதவதி, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் மூலமாகபாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு ராயல் நகரில் ரூ.10 லட்சம் செலவில் சாலை அமைத்தல் பணி நடைபெற்றது.
    • மூர்த்திக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் விடுபட்ட பணிகளை ரூ.5 லட்சம் செலவில் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான தொடக்கவிழா நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் மூலமாகபாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு ராயல் நகரில் ரூ.10 லட்சம் செலவில் சாலை அமைத்தல், மூர்த்திக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் விடுபட்ட பணிகளை ரூ.5 லட்சம் செலவில் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான தொடக்கவிழா நடந்தது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில் குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் தயாளன், உதவி பொறியாளர் பக்தவச்சலம், இளநிலை பொறியாளர் முகுந்தன் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். 

    ×