search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலப்பணிகள்"

    • 2000-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பரிசுத்தொகையும், சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது.
    • உலகத்திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படுகிறது .

    கள்ளக்குறிச்சிடு

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் இலவச திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:- திருக்குறளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, 1,330 திருக்குறளை மனப்பாடமாக கூறும் மாணவர்களுக்கு 2000-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பரிசுத்தொகையும், சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது. உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 ஆண்டுகளுக்கு 2,000 திருக்குறள் புத்தகங்களை விலையில்லாமல் வழங்க முன்வந்துள்ளது. அதன்படி,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு உலகத்திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படுகிறது . இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சின்னசேலம்,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சின்னசே லம்,பெரிய சிறுவத்தூர் மேல்நிலைப்பள்ளி, பெரிய சிறுவத்தூர் மாதிரி பள்ளி, தாகம்தீர்த்தாபுரம் மேல்நிலைப்பள்ளி, நயினார்பாளையம் மேல்நிலைப்பள்ளி, அரங்கநாதபுரம் உயர்நிலை ப்பள்ளி, மூரார்பாது மகளிர் உயர்நிலை ப்பள்ளி, சேஷச முத்திரம் உயர்நிலைப்பள்ளி, சித்தால் அரசு மாதிரிப் பள்ளி, சித்தேரிப்பட்டு மேல்நிலைப்பள்ளி, அரசம்பட்டு மேல்நிலைப்ப ள்ளி, ஏமப்போர் உயர்நிலைப்பள்ளி எனமொத்தம் 15 அரசு பள்ளி மாணவர்களுக்கு 750 திருக்குறள் புத்தகம் ரூ.7 ஆயிரம் மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் வழங்கி னார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாரா யணன், முன்னாள் இணை இயக்குநர் (நலப்பணிகள்) உதயகுமார், பாரதியார் தமிழ்ச்சங்கம் தலைவர் தியாகதுருகம் துரைமுருகன், சின்னசேலம் திருக்குறள் பேரவை தலைவர்பாசுகரன் என்ற பூங்குன்றன், முன்னாள் துணை கலெக்டர் கிருட்டிணசாமி,மாவட்டத் தொடர்பாளர் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் புலவர் அய்யா மோகன்,அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • நீதித் துறை, அரசுத் துறை, காவல் துறை அலுவலா்களுடனான விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது.
    • ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் கல்வித்தரம், பயிற்றுநிலை, வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆதித்திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நீதித் துறை, அரசுத் துறை, காவல் துறை அலுவலா்களுடனான விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் தீபக் ஜேக்கப், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் கல்வித்தரம், பயிற்றுநிலை, வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

    விடுதிகளில் விளையாட்டு வசதிகள், நூலக மேம்பாடு, தோ்வு ஆயத்தப் பயிற்சிகள் ஆகியவற்றுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பொங்கல் திருநாள், அம்பேத்கா் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளையொட்டி, ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளின் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கலைப்போட்டிகள், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் போன்றவற்றை நடத்த வேண்டும்.

    அரசுப் பணியிடங்கள், கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். ஆதிதிராவிடா்களுக்கு பூமிதான நிலங்களை வழங்கவும், அளிக்கப்பட்ட நிலங்களை பேணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்புடைய அலுவலா்கள் அனைத்து பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் இலக்கியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    ×