search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New library building"

    • சிவகங்கை மாவட்டம் சிராவயலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • கல்லல் பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிராவயலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, பாதரக்குடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கம், கீழ பட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கண்டன மாணிக்கம் ஊராட்சியில் 2021-22-ம் ஆண்டிற்கான நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, சிராவயல் ஊராட்சி மன்ற தலைவர் சரோஜாதேவி குமார், பாதரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி மீனா அழகப்பன், கீழ பட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா கார்த்திகேயன், கண்டரமாணிக்கம் ஊராட்சி வளர்ச்சி குழு தலைவர் கே.ஆர்.மணிகண்டன், ஊரக முகமை, வருவாய் துறை அலுவலர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×