search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Flows"

    • விவசாயிகள் ஆடிப்பட்டத்திற்கு பெய்த மழை மகிழ்ச்சி அளிக்கிறது.
    • கெடிலம் ஆறுக்கு தற்போது பெய்த மழையினால் நீர் வரத்து வரதொடங்கியுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் காற்றின் வேகம் மாறு பாடு காரணமாக கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கள்ளக் குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. 

    உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்த வண்ணம் உள்ளது. தற்போது நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் ஆடிப்பட்டத்திற்கு பெய்த மழை மகிழ்ச்சி அளிக்கிறது. இதனையடுத்து நாங்கள் நெல் நாற்று நடுவதற்கு ஏற்றார் போல் இந்த மழை உள்ளது என்று கூறினர். இந்த மழை உளுந்தூர்பேட்டை, நலமருதூர், சேந்தநாடு, மடப்பட்டு, எலவனாசூர்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது. குறிப்பாக உளுந்தூர்பேட்டையில் நீண்டநாட்களாக தண்ணீர் வரத்து இல்லாத கெடிலம் ஆறுக்கு தற்போது பெய்த மழையினால் நீர் வரத்து வரதொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் அங்கு சென்று வரண்ட கிடந்த ஆறுக்கு தண்ணீர் வரதொடங்கியதை பார்த்துவிட்டு செல்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கள்ளக்குறிச்சியில் 12, தியாகதுருகம் 38, விருகாவூர் 20, கச்சிராயப்பாளையம் 8, அரியலூர் 25, கடுவனூர் 9, கலையநல்லூர் 31, கீழ்பாடி 21, மூரார்பாளையம் 5, மூங்கில்துறைப்பட்டு 24, ரிஷிவந்தியம் 40, சூளாங்குறிச்சி 23, வடசிறுவலூர் 24, மணிமுக்தா ஆறு அணை 23.5, வானாபுரம் 26, மாடாம்பூணடி 43 , மணலூரபேட்டை 29, திருக்கோவிலூர் 49, திருப்பாலபந்தல் 37, வேங்கூர் 44, ஆதூர் 17, எறையூர் 15, ஊ.கீரனூர் 14 என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக திருக்கோவிலூரில் 49 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக மூரார்பாளை யத்தில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 577.5 மி.மீட்டராகவும், சராசரி 24.06 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது.

    • மானாமதுரை 4 வழிச்சாலையில் தடுப்புசுவர் இல்லை.
    • கடந்த ஆண்டு மார்நாடு கால்வாயில் தண்ணீர் சென்றபோது நிலை தடுமாறி கார் கால்வாய்க்குள் பாய்ந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பூர்வீக வைகைபாசனபகுதியாகும். வைகை ஆற்றின் கரைபகுதியில் மதுரை- ராமேசுவரம் 4 வழிசாலை உள்ளது. திருப்புவனம் முதல் மானாமதுரை மேலபசலை ரெயில் மேம்பாலம் வரை கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் உள்ளது. 3 முறை வைகை அணை நிரம்பியதால் 2 மாதங்களாக வைகை ஆற்றில் வந்த தண்ணீர் சாலையோர கால்வாய்களில் செல்கிறது. இந்த சாலைகளின் இருபுறமும் தடுப்புகள் இல்லை. கடந்த ஆண்டு மார்நாடு கால்வாயில் தண்ணீர் சென்றபோது நிலை தடுமாறி கார் கால்வாய்க்குள் பாய்ந்தது.

    பின்னால் வந்த திருப்புவனத்தை சேர்ந்த வாடகை கார் டிரைவர் உடனடியாக தண்ணீரில் நீந்தி காரில் இருந்தவர்களை மீட்டார். கால்வாய்களில் தண்ணீர் இல்லாத போதும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    விபத்துக்களை தடுக்கும் வகையில் மதுரை-ராமேசுவரம் 4 வழிசாலையில் உள்ள கால்வாய் கரைகளில் தடுப்பு சுவர்கள், தற்காலிக இரும்பு வேலி தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதுபோல் கொங்கு மண்டலமான திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு குளங்களும் நிரம்பி வருகின்றன.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றில் கடந்த சில நாட்களாகவே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருப்பூர் வளர்மதி பாலம் பகுதிகளில் நின்று வெள்ளத்தை பலரும் பார்த்து செல்கிறார்கள். கரைபுரண்டு வெள்ளம் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுபோல் நொய்யல் ஆற்றில் கடந்த சில மாதங்களாகவே தூர்வாரும் பணிகள் நடந்ததால், எந்த ஒரு பாதிப்பும் இன்றி வெள்ளநீர் மாநகர் பகுதிகளில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- நொய்யல் ஆறு கோவையில் இருந்து தொடங்கி திருப்பூர் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளநீர் செல்லும் வகையில் இன்னும் கவனம் செலுத்தி தூர்வார வேண்டும். அவ்வாறு தூர்வாருவதன் மூலம் கடைகோடி பகுதிகள் வரை முழுவதுமாக உள்ள விவசாயிகளுக்கு போதுமான நீர் கிடைக்கும். அந்த பகுதிகளில் உள்ள குளங்களும் நிரம்பும் என்றனர்.

    ×