search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் வரத்து"

    • விவசாயிகள் ஆடிப்பட்டத்திற்கு பெய்த மழை மகிழ்ச்சி அளிக்கிறது.
    • கெடிலம் ஆறுக்கு தற்போது பெய்த மழையினால் நீர் வரத்து வரதொடங்கியுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் காற்றின் வேகம் மாறு பாடு காரணமாக கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கள்ளக் குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. 

    உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்த வண்ணம் உள்ளது. தற்போது நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் ஆடிப்பட்டத்திற்கு பெய்த மழை மகிழ்ச்சி அளிக்கிறது. இதனையடுத்து நாங்கள் நெல் நாற்று நடுவதற்கு ஏற்றார் போல் இந்த மழை உள்ளது என்று கூறினர். இந்த மழை உளுந்தூர்பேட்டை, நலமருதூர், சேந்தநாடு, மடப்பட்டு, எலவனாசூர்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது. குறிப்பாக உளுந்தூர்பேட்டையில் நீண்டநாட்களாக தண்ணீர் வரத்து இல்லாத கெடிலம் ஆறுக்கு தற்போது பெய்த மழையினால் நீர் வரத்து வரதொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் அங்கு சென்று வரண்ட கிடந்த ஆறுக்கு தண்ணீர் வரதொடங்கியதை பார்த்துவிட்டு செல்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கள்ளக்குறிச்சியில் 12, தியாகதுருகம் 38, விருகாவூர் 20, கச்சிராயப்பாளையம் 8, அரியலூர் 25, கடுவனூர் 9, கலையநல்லூர் 31, கீழ்பாடி 21, மூரார்பாளையம் 5, மூங்கில்துறைப்பட்டு 24, ரிஷிவந்தியம் 40, சூளாங்குறிச்சி 23, வடசிறுவலூர் 24, மணிமுக்தா ஆறு அணை 23.5, வானாபுரம் 26, மாடாம்பூணடி 43 , மணலூரபேட்டை 29, திருக்கோவிலூர் 49, திருப்பாலபந்தல் 37, வேங்கூர் 44, ஆதூர் 17, எறையூர் 15, ஊ.கீரனூர் 14 என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக திருக்கோவிலூரில் 49 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக மூரார்பாளை யத்தில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 577.5 மி.மீட்டராகவும், சராசரி 24.06 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது.

    • அணை நிரப்பப்பட்டு பாசனத்திற்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை அருகே திருமூர்த்தி அணை மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைக்கு சர்க்கார் பதியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக 43 கிலோமீட்டர் பயணித்து திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. இதன் மூலம் அணை நிரப்பப்பட்டு பாசனத்திற்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. திருமூர்த்தி அணைக்கு மேல் பகுதியில் திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த அருவியில் நீர்வரத்து இருக்கும் .பருவமழை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை யின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதோடு அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றிலும் ஓடும் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். தற்போது திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ×