search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vidyarambam program"

    • பள்ளியின் தாளாளர் க.லட்சுமி, பள்ளியின் தலைவர் சு.கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜையுடன் விழாவை தொடங்கி வைத்தனர்.
    • நிகழச்சியில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர்.எஸ்., மேட்டுக்கடை பஸ் நிலையம் அருகே அன்னை கார்டனில் உள்ள அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜய தசமியை முன்னிட்டு மாணவர்களுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளியின் தாளாளர் க.லட்சுமி, பள்ளியின் தலைவர் சு.கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜையுடன் விழாவை தொடங்கி வைத்தனர். இதில் பள்ளி முதல்வர் இரா.அம்சமுத்து, குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சியை எல்.கே.ஜி. அசிரியருடன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு பள்ளியின் தாளாளர் மற்றும் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு நோட்டு- புத்தகங்கள் மற்றும் இலவச சீருடைகளை வழங்கினர். நிகழச்சியில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில் தொடங்கப்படும் காரியம் வெற்றி கரமாக அமையும் என்பதால் அன்று குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசும், தனியார் பள்ளிகளும் தீவிரம் காட்டி வருகிறது.

    சேலம்:

    நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில் தொடங்கப்படும் காரியம் வெற்றி கரமாக அமையும் என்பதால் அன்று குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசும், தனியார் பள்ளிகளும் தீவிரம் காட்டி வருகிறது .

    அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டிருந்தது. பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். தொடர்ந்து காலை முதலே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது. ஆர்வத்துடன் மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். இதே போல தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.

    மாணவர்களுக்கு கையை பிடித்து வித்யாரம்பம் நிகழ்ச்சியுடன் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக நடந்தது. அரசு பள்ளிகளில் கல்வி துறை அதிகாரிகள், தனியார் பள்ளிகளில் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்காணித்து வருகிறார்கள். 

    • விஜயதசமி தினத்தன்று தொடங்கும் செயல் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    • நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்டு கல்வி கற்றலை தொடங்கினர்.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் புதியதாக கல்வி தொடங்கும் நூற்றுக்கணக்கான குழந்தை கள் பச்சரிசியில் 'ஹரி ஓம்' என எழுதி கல்வி கற்றலை தொடங்கினர்.

    நவராத்திரியின் 9 நாள் ஸ்ரீதேவி கொழுவிருந்து10-ம் நாளான விஜயதசமி அன்று மகிசனை போரிட்டு சம்ஹாரம் செய்து வெற்றி பெற்றதாக ஐதீகம்.அதன் காரணமாக விஜயதசமி தினத்தன்று செய்யும் செயலும் தொடங்கும் செயல் அனைத்தும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.அதன் அடிப்படையில் விஜயதசமி தினத்தன்று, புதிய தொழில் தொடங்குவது புதிய செயல்களை செய்வது, கல்வி கற்றலை தொடங்குவது போன்ற ஐதீகங்களை வாடிக்கையாக பொது மக்கள் வைத்துள்ளனர். அதன்படி விஜயதசமியான இன்றைய தினம் நெல்லை நெல்லையப்பர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நெல்லையப்பர் கோவில் ஆறுமுக நயினார் சன்னதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு கற்றல் நிகழ்ச்சியை தொடங்கினர். புதிதாக கல்வி கற்கும் குழந்தைகள் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியுடன் கோவிலுக்கு வருகை தந்து ஆறுமுக நயினார் சன்னதியில் நடைபெற்ற கூட்டு வழிபாட்டில் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை செய்து பச்சரிசியில் விரலி மஞ்சள் கொண்டு ஹரி ஓம் என எழுதியும், உயிர் எழுத்தின் முதல் எழுத்தான 'அ' எழுதியும் தங்களது கல்வி கற்றலை தொடங்கினர்.

    நெல்லையப்பர் கோவில் உழவர் பணி கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கல்வி கற்றலை தொடங்கினர். இதே போல் நெல்லை டவுன் பகுதியில் உள்ள சரஸ்வதி அம்மன் கோவில் மற்றும் நெல்லை நகர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி மூலம் குழந்தைகள் கல்வி கற்றலை தொடங்கினர்.

    • அரிசியில் தங்களது குழந்தைகளின் கையை பிடித்து அ,ஆ,இ,ஈ., போன்ற தமிழ் எழுத்துகளை எழுத வைத்தனர்.
    • விஜயதசமியையொட்டி இன்று அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றது.

    போரூர்:

    விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதால் பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகளின் கல்வியை இந்த நாளில் தொடங்குவது வழக்கம்.

    இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ஆரம்பிக்கும் "வித்யாரம்பம்" நிகழ்ச்சி இன்று பல்வேறு இடங்களில் விமரிசையாக நடைபெற்றது.

    கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக குவிந்து இருந்தனர். முன்னதாக அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. 2 ½ வயது முதல் 3½வயது வரை உள்ள மழலை குழந்தைககள் பெற்றோரின் மடியில் அமரவைக்கப்பட்டு நெல் மற்றும் அரிசியில் "அ" எழுத்தை எழுதி கல்வியை தொடங்கினர். மேலும் குழந்தைகளின் நாக்கில் தங்க மோதிரத்தாலும் எழுதப்பட்டது. வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக அய்யப்பன் கோவிலில் ஏராளமானோர் திரண்டு இருந்ததால் கோவில் வளாகம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    வடபழனி கோவிலில் காலை 7.30மணிக்கு தொடங்கிய வித்யாரம்பம் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்றனர். விஜயதசமியையொட்டி இன்று அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றது.

    திருவள்ளூர் ஜெயா நகரில் உள்ள ஸ்ரீ மகாவல்லப கணபதி கோவிலில் வித்யா ரம்பம் நிகழ்ச்சிக்கு அதிகாலை முதலே ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். அரிசியில் தங்களது குழந்தைகளின் கையை பிடித்து அ,ஆ,இ,ஈ., போன்ற தமிழ் எழுத்துகளை எழுத வைத்தனர்.

    இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் மற்றும் தனியார் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது

    • விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை.
    • அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம்.

    அரவேணு

    கோத்தகிரி உள்ள கோவில்களில் நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் நேற்று வித்யாரம்பம் நடைபெற்றது. விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது.

    எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம். குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது.

    ×