search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னை பள்ளி"

    • பள்ளியின் தாளாளர் க.லட்சுமி, பள்ளியின் தலைவர் சு.கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜையுடன் விழாவை தொடங்கி வைத்தனர்.
    • நிகழச்சியில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர்.எஸ்., மேட்டுக்கடை பஸ் நிலையம் அருகே அன்னை கார்டனில் உள்ள அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜய தசமியை முன்னிட்டு மாணவர்களுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளியின் தாளாளர் க.லட்சுமி, பள்ளியின் தலைவர் சு.கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜையுடன் விழாவை தொடங்கி வைத்தனர். இதில் பள்ளி முதல்வர் இரா.அம்சமுத்து, குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சியை எல்.கே.ஜி. அசிரியருடன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்துள்ள குழந்தைகளுக்கு பள்ளியின் தாளாளர் மற்றும் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு நோட்டு- புத்தகங்கள் மற்றும் இலவச சீருடைகளை வழங்கினர். நிகழச்சியில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×