search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

    • விஜயதசமி தினத்தன்று தொடங்கும் செயல் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    • நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்டு கல்வி கற்றலை தொடங்கினர்.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் புதியதாக கல்வி தொடங்கும் நூற்றுக்கணக்கான குழந்தை கள் பச்சரிசியில் 'ஹரி ஓம்' என எழுதி கல்வி கற்றலை தொடங்கினர்.

    நவராத்திரியின் 9 நாள் ஸ்ரீதேவி கொழுவிருந்து10-ம் நாளான விஜயதசமி அன்று மகிசனை போரிட்டு சம்ஹாரம் செய்து வெற்றி பெற்றதாக ஐதீகம்.அதன் காரணமாக விஜயதசமி தினத்தன்று செய்யும் செயலும் தொடங்கும் செயல் அனைத்தும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.அதன் அடிப்படையில் விஜயதசமி தினத்தன்று, புதிய தொழில் தொடங்குவது புதிய செயல்களை செய்வது, கல்வி கற்றலை தொடங்குவது போன்ற ஐதீகங்களை வாடிக்கையாக பொது மக்கள் வைத்துள்ளனர். அதன்படி விஜயதசமியான இன்றைய தினம் நெல்லை நெல்லையப்பர் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நெல்லையப்பர் கோவில் ஆறுமுக நயினார் சன்னதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு கற்றல் நிகழ்ச்சியை தொடங்கினர். புதிதாக கல்வி கற்கும் குழந்தைகள் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியுடன் கோவிலுக்கு வருகை தந்து ஆறுமுக நயினார் சன்னதியில் நடைபெற்ற கூட்டு வழிபாட்டில் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை செய்து பச்சரிசியில் விரலி மஞ்சள் கொண்டு ஹரி ஓம் என எழுதியும், உயிர் எழுத்தின் முதல் எழுத்தான 'அ' எழுதியும் தங்களது கல்வி கற்றலை தொடங்கினர்.

    நெல்லையப்பர் கோவில் உழவர் பணி கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கல்வி கற்றலை தொடங்கினர். இதே போல் நெல்லை டவுன் பகுதியில் உள்ள சரஸ்வதி அம்மன் கோவில் மற்றும் நெல்லை நகர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி மூலம் குழந்தைகள் கல்வி கற்றலை தொடங்கினர்.

    Next Story
    ×