search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicles seized"

    • போலீசாரால் கைப்பற்ற ப்பட்டு உரிமைகோரப்படாத வாகனங்களை அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு பொது ஏலம்விட்டு விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.
    • தேனி காவல்துறை மைதானத்தில வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பகிரங்க ஏலம் விடப்படும்.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரிய குளம், உத்தமபாளையம் வருவாய் கோட்டங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை போலீசாரால் கைப்பற்ற ப்பட்டு உரிமைகோரப்படாத வாகனங்களை அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு பொது ஏலம்விட்டு விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.,

    இதற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவல கங்களில் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் தேனி காவல்துறை மைதானத்தில வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பகிரங்க ஏலம் விடப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பு வோர் ரூ.1000 முன்பணம் செலுத்தி ஏலத்தேதிக்கு முன்பு ரசீது பெற்றுகொள்ள வேண்டும். அதிக தொகைக்கு ஏலம் கேட்ப வருக்கே வாகனங்கள் வழங்கப்படும்.

    ஏலம் கேட்பவர் ஏலத்தொகையுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி சேர்த்து செலுத்த வேண்டும். வாகன ஏலம் மற்றும் உறுதிபடுத்தும் குழுவினரால் உறுதிசெய்யப்பட்ட பின்னரே பொருட்கள் ஏலதாரரரிடம் ஒப்படை க்கப்படும்.

    மார்த்தாண்டம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 15 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் அதிகளவு லோடு ஏற்றிக் கொண்டு லாரிகள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

    மேலும் அதிகளவு பாரம் ஏற்றி செல்வதனால் ரோடுகளும் சேதமடைந்து வாகனங்களில் செல்வோர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் கேரளாவிற்கு கனிமங்களை கடத்திச் செல்வதாகவும், வாகனங்களுக்கு சான்றிதழ் முடிந்த பின்பும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் புகார்கள் வந்தன.

    இதையடுத்து நேற்று மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி மற்றும் அதிகாரிகள் களியக்காவிளை, மார்த்தாண்டம், புதுக்கடை உள்பட பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கேரள பதிவு எண் கொண்ட 2 ஆம்னி பஸ்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டதாக அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 2 ஆம்னி பஸ்களுக்கும் தலா ரூ.32 ஆயிரம் அபராதத் தொகையாக விதித்தனர்.

    இதேபோன்று அந்த வழியாக 8 லாரிகள் அதிக பாரம் ஏற்றி வந்ததாக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உரிய தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டதாக 3 லாரிகளும், தடம்மாறி இயக்கப்பட்ட ஒரு மினி பஸ், அரசு பஸ்சுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் பயணிகளை ஏற்றி டிக்கெட் வசூலில் ஈடுபட்ட 2 வேன்களையும் பறிமுதல் செய்தனர்.

    நேற்று நடந்த வாகன சோதனையில் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றிற்கு அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆவணங்கள் இன்றி இயங்கும் வாகனங்கள் கண்காணிப்பில் அவற்றை பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    சுரண்டை அருகே வீ.கே. புதூர் பகுதியில் அனுமதியின்றி கனிம வளங்களை கடத்திய 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சுரண்டை:

    சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் மெயின் ரோட்டில் தாசில்தார் நல்லையா ஆய்விற்காக சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் வந்து கொண்டிருந்த டிராக்டரை மடக்கி சோதனையிட்ட போது அதில் அனுமதியின்றி சரள் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த தாசில்தார் அரசு விதிப்படி நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

    நேற்று அதிகாலை 6 மணியளவில் வீ.கே. புதூர் பகுதியில் அனுமதியின்றி வெள்ளை நிற நீள கல் கடத்துவதாக தகவல் வந்ததையடுத்து தாசில்தார் நல்லையா தீவிர சோதனை மேற்கொண்டார். அப்போது ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டு டிரைவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மாரியப்பன் மகன் பாண்டி (வயது 25) என்பவரிடம் விசாரித்த போது அதில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பையூரணி பகுதியிலிருந்து கனிம வள சட்டத்திற்கு எதிராக வெள்ளை நிற நீள கற்களை அளவுக்கு அதிகமாக கடத்தி வந்ததும், சோதனை நடந்த இடத்திற்கு கொண்டு வருவதற்கான அனுமதியில்லை என்பதும் தெரிய வந்ததையடுத்து அதனை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கைக்கு உயர்அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

    தொடர்ந்து நேற்று பகல் ஒரு மணியளவில் பரன்குன்றாபுரம் விலக்கு அருகே சோதனையில் ஈடுபட்ட போது வந்த லாரியை மடக்கி டிரைவர் சிங்கிலிப்பட்டியை சேர்ந்த கருத்தசாமி மகன் திருமலைச்சாமி (40) யிடம் விசாரித்த போது பாளையங்கோட்டையிலிருந்து தென்காசிக்கு குறுமணல் 2 யூனிட் கொண்டு செல்ல உரிமை சீட்டு வைத்திருந்ததும் ஆனால் அதில் 4 யூனிட் மணல் கடத்தப்பட்டதும் தெரியவந்ததையடுத்து லாரியை பறிமுதல் செய்து உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

    ஏற்கனவே பாளையங்கோட்டை பகுதியில் மணல் கடத்தலை தடுத்த தாசில்தார் நல்லையா வீ.கே.புதூர் பகுதியில் மணல், வண்டல், சரள், நீளக்கல், குண்டுக்கல், கருவேல மரங்களை கடத்திய 23 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனால் இப்பகுதியில் கனிமவளங்களை கடத்துவது குறைந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
    தொண்டி அருகே மணல் திருடியது தொடர்பாக 6 பேரை கைது செய்த போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    தொண்டி:

    தொண்டி அருகே செக்காந்திடல் பகுதியில் சிலர் மணல் அள்ளுவதாக வி.ஏ.ஓ. பழனிச்சாமி தகவல் கொடுத்தார். இதன் அடிப்படையில் ராமநாதபுரம் அதிவிரைவுப்படை போலீசார், தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    செக்காந்திடல் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சிறுநல்லூரைச் சேர்ந்த செந்தில் முருகன்(வயது30) டிப்பர் லாரி டிரைவர்கள், கருங்காவயலைச் சேர்ந்த முனியராஜ்(32), தெற்கு ஊரணிங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் (18), மாதவனூர் ராஜமருது(19),சிறுவாளுர் அன்புகமல்(30), உசிலனக் கோட்டை ஆனந்த் (28), கோவிந்தமங்களம் நாகேந்திரன், கீழ்குடியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் அள்ள பயன்படுத்திய 2 டிப்பர் லாரி, 2 டிராக்டர், 2 ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    சென்னையில் கேட்பாரற்று ரோடு, தெருக்களில் நிறுத்தப்பட்ட 5 ஆயிரம் வாகனங்களை மாநகராட்சி பறிமுதல் செய்துள்ளது. அடுத்த வாரம் இந்த வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரோடுகள் தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கேட்பாரற்று நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    சென்னை போக்குவரத்து போலீஸ் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து சென்னை சாலைகளில், தெருக்களில் நிறுத்தப்பட்ட 5,300 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    வடக்கு சென்னை பகுதியில் 1-5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மாநகராட்சி நிர்வாகம், மெட்டல் டிரேடிங் கார்ப்பரே‌ஷன் இணைந்து பறிமுதல் செய்த வாகனங்களை அடுத்தவாரம் ஏலம்விடுகிறது. முதல்கட்டமாக 300 வாகனங்களை ஏலம் விட திட்டமிட்டுள்ளது.

    இதில் 120 வாகனங்களை ஏலம் விட போலீஸ் துறையில் இருந்து தடையில்லா சான்று (என்.ஓ.சி.) வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலை, தெருக்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்ற நிலையில் பழுதடைந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு மற்றும் சுகாதார கேடு, கொசுத்தொல்லைகள் ஏற்படுகின்றன.

    மாநகராட்சி சார்பில் தற்போது 5,300 கேட்பாரற்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 நாட்களுக்குள் வாகனங்களின் உரிமையாளர்கள் வந்து உரிய சான்றுகளுடன் வாகனங்களை பெறாததால் அடுத்த வாரம் இந்த வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

    முதல்கட்டமாக 300 வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. மெட்டல் கிராப் டிரேடிங் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. வட சென்னை பகுதிகளில் சாலை, தெருக்களில் கேட்பாரற்ற அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    ×